A very special day for Rajasthan, development initiatives across aviation, energy and connectivity will strengthen infrastructure, accelerate growth and improve ease of living: PM
Regardless of how massive and unforeseen a challenge may be, New India neither backs away from its resolves nor slows its momentum: PM
Today itself, the new airport terminal was inaugurated in Jodhpur; this will provide a new impetus to tourism, trade, and employment in the Marwar region: PM
The resolve and efforts of the 21st century's New India have triumphed over the greatest energy crisis of the 21st century: PM
India made the right decisions at every level, accurately assessed the crisis in a timely manner, formulated an effective strategy, and utilized India's resources in a balanced way; It positively leveraged India's diplomatic power, and that is how India managed to emerge from the crisis: PM
India made the right decisions at every level and managed to emerge from the energy crisis: PM
Today, I thank and express my gratitude to our 1.4 billion citizens for the resolute way they stood by the country during these difficult times: PM
It is on the strength of the trust of our 1.4 billion citizens that the nation has been able to move forward: PM
Now, the governments of Rajasthan and Haryana will collaborate to deliver water to Shekhawati, benefiting the people of the entire adjoining Shekhawati region: PM

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

ராஜஸ்தான் ஆளுநர் திரு. ஹரிபாபு பாக்டே அவர்களே, முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களே, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி அவர்களே, பிரேம்சந்த் பைர்வா அவர்களே, ராஜஸ்தான் மாநில அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

இன்று ராஜஸ்தான் முழுவதும் சுமார் 10 முதல் 12 ஆயிரம் இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சிக்காகக் கூடியிருப்பதாக என்னிடம் கூறினார்கள். தற்போது நான் திரைகளைப் பார்க்கும்போது, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளிக்கிறது. தொழில்நுட்பத்தின் வாயிலாக ராஜஸ்தானின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனது சகோதர சகோதரிகள் இன்று இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். 

நண்பர்களே,

இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே...

இந்த மண் எண்ணற்ற வீரர்களின் வீரத்திற்குச் சாட்சியாக இருந்துள்ளது. இந்தப் போர்க்களத்தின் ஒவ்வொரு துகளும், சுயமரியாதையை எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்க வேண்டும் என்று நமக்குக் கற்பித்துள்ளது. ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு தேசமோ எதுவாக இருந்தாலும், தற்சார்புடன் இருக்கும்போது, மற்றவர்களைச் சார்ந்திருப்பது முடிந்தவரை குறையும்போதுதான் அதன் சுயமரியாதை ஓங்கி நிற்கும். இன்று, ராஜஸ்தான் மண்ணிலிருந்து, இந்தியா வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட நாடாக மாறுவதற்கான ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இன்று, இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக நான் குறிப்பாக ராஜஸ்தான் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பி.ஜே.பி. அரசாங்கங்கள் அடிக்கல் நாட்டுவதோடு நின்றுவிடுவதில்லை; திட்டங்களை முடிப்பதற்காக நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம் என்பதை இன்றைய தினம் உறுதிப்படுத்துகிறது. வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இங்கே விபத்து நடந்த பிறகு, பணிகள் முடிக்கப்பட்ட வேகம், ஒரு அசாதாரண முயற்சியின் எடுத்துக்காட்டாகும். சவால்கள் எவ்வளவு பெரியதாக அல்லது எதிர்பாராததாக இருந்தாலும், 'புதிய இந்தியா' தனது உறுதியிலிருந்து பின்வாங்காது, தனது வேகத்தையும் குறைக்காது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

 

சகோதர சகோதரிகளே...

இன்று ராஜஸ்தானில் வளர்ச்சியின் பல மைல்கற்கள் எட்டப்படுகின்றன. இன்று ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தின் கட்டமைப்பு மற்றும் உட்புற வடிவமைப்பு சமூக வலைதளங்களில் எங்கும் பிரபலமாக இருப்பதை நான் பார்த்தேன் – ராஜஸ்தானின் கலைத்திறன் எல்லா இடங்களிலும் தெரிகிறது.

நண்பர்களே,

இது மார்வார் பகுதியில் சுற்றுலா, வணிகம் மற்றும் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். ஜோத்பூருடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜோத்பூரிலிருந்தே இன்று 'உடான்'  திட்டத்தின் புதிய கட்டமும் தொடங்கியுள்ளது. இதன் மூலம், சிறிய நகரங்களும் தொலைதூரப் பகுதிகளும் விமானச் சேவை மூலம் இணைக்கப்படும். இதனுடன் சேர்த்து, ஜெய்ப்பூர் மெட்ரோவும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

 

சகோதர சகோதரிகளே,

ஷெகாவதி பிராந்தியத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நீண்டகாலமாக இருந்த காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த அனைத்துத் திட்டங்களுக்காகவும் எனது ராஜஸ்தான் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று ராஜஸ்தானில் சுமார் 54,000 இளைஞர்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். அவர்களின் இளமை ஆற்றல் ராஜஸ்தானின் ஒளிமயமான எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும்.

நண்பர்களே,

ராஜஸ்தான் மண்ணிலிருந்து நமது நாட்டின் மற்றொரு வலிமையைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் உலகம் முழுவதும் எவ்வாறு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு நாடும் மிகுந்த துயரத்தில் உள்ளது. இந்தப் போர், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது. முன்னணி நாடுகள் அனைத்தும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் திணறி வருகின்றன.

ஆனால் நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்த மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை, இந்த நூற்றாண்டின் 'புதிய இந்தியாவின்' மனவுறுதியும் முயற்சிகளும் முறியடித்துள்ளன. இந்தியா ஒவ்வொரு நிலையிலும் சரியான முடிவுகளை எடுத்தது, நெருக்கடியை உரிய நேரத்தில் கணித்தது, பயனுள்ள உத்திகளை வகுத்தது, வளங்களைச் சமநிலையான முறையில் பயன்படுத்தியது, மற்றும் அதன் தூதரக அதிகாரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியது. இப்படித்தான் இந்தியா அந்த நெருக்கடியை வென்றது.

நண்பர்களே,

சில சக்திகள் பொதுவெளியில் வதந்திகளையும் அச்சத்தையும் பரப்புவதில் மும்முரமாக இருந்தபோது, திரைக்குப் பின்னால், இரவும் பகலும் பெரும் பணிகள் நடைபெற்று வந்தன. பொறுமை, விடாமுயற்சி, கொள்கை மற்றும் தூதரக ரீதியாக எடுக்கப்பட்ட நுணுக்கமான நடவடிக்கைகள் - இவை நிகரற்றவை என்று வரலாறு ஒருநாள் பதிவு செய்யும். இதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்: சமையல் எரிவாயு. நமது எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதையும், அதில் 90 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து 'ஹார்முஸ் நீரிணை' வழியாக வருகிறது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். திடீரென, போர்ச் சூழல் அந்த விநியோகத்தை ஏறக்குறைய நிறுத்தியது. நமது நாட்டில் எவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால், சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் மண் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனால்தான், நெருக்கடி தொடங்கியவுடனேயே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனில் நாங்கள் கவனம் செலுத்தினோம். தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உற்பத்தி, சமையல் எரிவாயு உற்பத்திக்காக மாற்றப்பட்டது. வெறும் ஏழு நாட்களுக்குள், சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்தது. நெருக்கடிக்கு முன்பு 35,000 மெட்ரிக் டன்னாக இருந்த உற்பத்தி, நெருக்கடியின் போது 54,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. முன்னெப்போதும் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யாத சுத்திகரிப்பு நிலையங்கள், அதற்காகத் தயார்படுத்தப்பட்டன.

 

நண்பர்களே,

முழுச் சுமையையும் சமையல் எரிவாயுவின் மீது மட்டும் விழவிடாமல் இருக்க, சமையலறைகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளையும் அரசு விரிவுபடுத்தியது. மிகக் குறுகிய காலத்தில், இந்தியா 11 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்புகளை வழங்கியது.

சகோதர சகோதரிகளே,

ஒருபுறம், நாங்கள் விநியோகத்தை உறுதி செய்தோம். மறுபுறம், உள்நாட்டு நுகர்வோர் மீது அதிக சுமையை நாங்கள் சுமத்தவில்லை. அந்தச் சூழலில், ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2,000 வரை உயர்ந்திருக்கக்கூடும் - இதுவே பெரிய சந்தை நிபுணர்களின் மதிப்பீடாக இருந்தது. ஆனால், இப்போதும் கூட, உள்நாட்டு சமையல் எரிவாயு உருளைகள் ரூ.950-க்கும் குறைவான விலையிலேயே வழங்கப்படுகின்றன. ஏழை மக்களுக்கான விலையில்லா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், உருளைகள்  ரூ.650-க்கும் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புதான், வணிக ரீதியான எரிவாயு விலையில் அரசு ஒரு பெரிய குறைப்பைச் செய்தது. நமது அரசு எவ்வளவு உணர்வுபூர்வமாகச் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது.

நண்பர்களே,

இந்தப் போர் டீசல் மற்றும் பெட்ரோலுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. நமது நாட்டில் பெரிய எண்ணெய் கிணறுகள் இல்லை. நெருக்கடி தீவிரமடைந்தபோது, கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 70 டாலரிலிருந்து 120 டாலராக உயர்ந்தது. இறக்குமதி பாதைகள் அடைக்கப்பட்டன. பல நாடுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்தது. சில நாடுகளில் எரிபொருள் பங்கீடு கூட செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில், அத்தகைய சூழல் ஒரு நாள் கூட ஏற்படவில்லை. வதந்திகள் பரப்பப்பட்டன, மக்கள் பயமுறுத்தப்பட்டனர், அரசியல் செய்யப்பட்டது, ஆனால் தவறான எண்ணம் கொண்டவர்கள் வெற்றி பெறவில்லை. தொலைதூரப் பகுதிகளில் கூட, சிறிய தடங்கல்களைத் தவிர, பெரிய விநியோகச் சவால்கள் எதுவும் ஏற்படவில்லை. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும், டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.75,000 கோடிக்கும் மேலாக நஷ்டத்தைச் சந்தித்தன. இது ஒரு புதிய சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதற்கான செலவுக்குச் சமமாகும். இந்தச் சுமையை அரசாங்கத்தின் கருவூலம் சுமந்தது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததன் மூலம், மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகாமல் நாங்கள் உறுதி செய்தோம்.

 

நண்பர்களே,

போரின் இந்தக் காலத்தில், பிற நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு விலைமதிப்பற்றதாக நிரூபணமானது. நெருக்கடிக்கு முன்பு, இந்தியா சுமார் 25 முதல் 26 நாடுகளிலிருந்து எரிபொருள் மற்றும் எரிசக்தியை இறக்குமதி செய்தது. ஆனால் நெருக்கடியின் போது, இந்தியாவின் ராஜதந்திரம் பிரகாசித்தது. பிற நாடுகளுடனான நமது வலுவான உறவுகள் எங்களுக்குப் பெரிதும் உதவின. இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யத் தொடங்கியது. இந்தியா உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: எங்களைப் பொறுத்தவரை, தேசிய நலனும் நமது குடிமக்களின் நலனுமே முதன்மையானது. குடிமக்களே தெய்வம் - இதுவே எங்கள் மந்திரம்.

நண்பர்களே,

நாடு இத்தகைய எதிர்பாராத சவாலை தற்செயலாக முறியடிக்கவில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கைகளின் வெற்றியே இதற்குப் பின்னால் உள்ளது. இன்று, நாங்கள் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைக்கிறோம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் 2017ல் கையெழுத்திட்டோம். ஆனால் 2018 முதல் 2023 வரை, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு இருந்தது. அவர்களின் ஒத்துழையாமையால், இங்கு பணிகள் ஏறக்குறைய முடங்கிக் கிடந்தன. ஆனால், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு வந்தவுடன், பணிகள் வேகமாக முன்னேறின, இன்று அதை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறோம். எனது பணி முறையை நீங்கள் அறிவீர்கள் - நாங்கள் அடிக்கல் நாட்டும் திட்டங்களை, நாங்களே திறந்து வைப்போம். இந்த வகையில், இந்தியா தனது சுத்திகரிப்புத் திறனைத் தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு புதிய சுத்திகரிப்பு நிலையம் கூட கட்டப்படவில்லை. ஐரோப்பாவின் சுத்திகரிப்புத் திறன் சீராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பு நாடாக மாறியுள்ளது. இதோடு நாங்கள் நின்றுவிடப் போவதில்லை, வரும் ஆண்டுகளில், இந்தத் திறன் மேலும் அதிகரிக்கும். இந்த முயற்சிகளே, நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்த்துப் போராடி, அதை வெல்ல இந்தியாவைச் சக்தியூட்டின.

நண்பர்களே,

உலகெங்கிலும் நிலவும் போர்களும் அமைதியின்மையும் நமது விவசாயிகளுக்கும் சவால்களை உருவாக்குகின்றன. தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடி, வளைகுடா நெருக்கடி மற்றும் இதற்கு முன்னால் நடந்த உக்ரைன் போர் என அனைத்தும் உலகளவில் உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தின. உக்ரைன் போருக்குப் பிறகு, ஒரு மூட்டை யூரியாவின் விலை ரூ.3,000-க்கு மேல் உயர்ந்தது. ஆனால், நாங்கள் நமது விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியாவை வெறும் ரூ.300க்கு மட்டுமே தொடர்ந்து வழங்கினோம். இதற்காக அரசு கருவூலத்திலிருந்து லட்சக்கணக்கான கோடிகளை மானியமாகச் செலவிட்டது. விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டாலும், இந்தியா தீர்வுகளைக் கண்டது. அரசு மாற்றுப் பாதைகளைக் கண்டறிந்தது. உரம் வாங்குவதற்குப் பல நாடுகளில் உள்ள நமது தூதரகங்களுக்குச் சிறப்புப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இறக்குமதியுடன் சேர்த்து, உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரித்தோம். இயற்கை விவசாயம் போன்ற மாற்று முறைகளையும் ஊக்குவித்தோம். மேலும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்தோம்.

 

நண்பர்களே,

அதேபோல, நமது தொழில்களையும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் நாங்கள் கவனித்துக் கொண்டோம். இந்த நிறுவனங்கள் செலவுகள் அதிகரிப்பால் நெருக்கடியைச் சந்தித்து வந்தன. எனவே, அவசரகால கடன் வரி உத்தரவாத புதிய கட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரை கூடுதல் கடன்களை வழங்கின. இந்தக் கடன்களுக்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம் அளித்தது - இதுதான் மோடியின் உத்தரவாதம். இது சிறு தொழில்களுக்கும் குடிசைத் தொழில்களுக்கும் பெரும் பயனளித்தது. இத்தகைய முடிவுகளின் விளைவாக, இன்று நமது சிறு மற்றும் பெரிய தொழில்கள் பாதுகாப்பாக உணர்கின்றன.

நண்பர்களே,

இந்தியாவின் வலிமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்ததால், நமது அரசு தொடர்ந்து முடிவுகளை எடுத்துள்ளது. நமது குடிமக்களின் திறமைகள் மற்றும் ஞானத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தோம். இன்று, 140 கோடி இந்தியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான காலங்களில் நாட்டின் பின்னால் உறுதியாக நின்றதற்காகவும், வதந்திகள், பயம் மற்றும் குழப்பங்களை எதிர்த்ததற்காகவும், உறுதியற்ற தன்மையைப் பரப்பும் சதித்திட்டங்களைத் தோற்கடித்ததற்காகவும் தேசத்தின் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த நம்பிக்கையே தேசத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது. இந்தியா தோல்வியடைவதைப் பார்க்க விரும்பியவர்களும், அது தோல்வியடையும் என்று கணிப்பு வெளியிட்டவர்களும் இன்று விரக்தியில் மூழ்கியிருப்பார்கள்.

நண்பர்களே,

வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தது மற்றும் அடிக்கல் நாட்டியதுடன், தாயின் நினைவாக ஒரு வன்னி மரக் கன்றை நடும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. ராஜஸ்தானில் கேஜ்ரி மரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிவேன். பாலைவனம் பரவுவதைத் தடுப்பதில் இது மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த மரக்கன்று நடுதல் என்பது நமது பணி கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்ட வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், நமது அரசு மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்காகப் பணியாற்றி வருகிறது. குறிப்பாக, சூரியக் கடவுளின் ஆசி பெற்ற ராஜஸ்தானில், உலகத்தரம் வாய்ந்த சூரிய மின்சக்தி பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 'பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின்' கீழ், ராஜஸ்தானில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஏற்கனவே சூரிய மின்சக்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் உள்ள விவசாயிகளுக்கு 65,000க்கும் மேற்பட்ட சூரிய சக்தி பம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

எடுக்கப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாக இருந்தால், மிகக் கடினமான இலக்குகளைக் கூட நிறைவேற்ற முடியும். இதுதான் பி.ஜே.பி  மற்றும் காங்கிரஸிற்கு இடையிலான மிகப்பெரிய வேறுபாடு.

நண்பர்களே,

ராஜஸ்தானின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது இதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு. ராஜஸ்தானின் தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க காங்கிரஸ் அரசாங்கங்கள் ஒருபோதும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், பி.ஜே.பி. பிளவுபடுத்தும் அரசியலைச் செய்வதில்லை. பி.ஜே.பி. 'தேசம் முதலில்' என்ற உணர்வுடன் செயல்படுகிறது. குஜராத்தில் நாங்கள் நீர் மேலாண்மைத் திட்டங்களில் பணியாற்றியபோது, ராஜஸ்தானுடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கேள்வி எழுந்ததை நான் தெளிவாக நினைவுகூர்கிறேன். தண்ணீர் விவகாரத்திற்காக இந்தியாவின் பல மாநிலங்கள் தசாப்தங்களாகப் போராடி வருகின்றன. குஜராத் நர்மதை நீரைப் பகிர்ந்து கொள்ளுமா என்று ராஜஸ்தான் மக்கள் வியந்தனர். ஆனால், ராஜஸ்தானிலும் குஜராத்திலும் பி.ஜே.பி. அரசு இருந்தது எங்கள் பாக்கியம். அப்போது நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தேன், இங்கே சகோதரி வசுந்தரா அவர்கள் முதலமைச்சராக இருந்தார். நாங்கள் இருவரும் இணைந்து, மோதல்கள் இன்றி, சண்டைகள் இன்றி, போராட்டங்கள் இன்றி, நர்மதை நீரை ராஜஸ்தானுடன் பகிர்ந்து கொண்டோம். இன்று ராஜஸ்தானின் பல கிராமங்கள் அன்னை நர்மதையின் நீரைப் பெறுகின்றன. இந்தச் சாதனையைப் பற்றி சற்றுமுன்புதான் பஜன்லால் அவர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 

சகோதர சகோதரிகளே,

இப்போது, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பி.ஜே.பி. அரசுகள் இருப்பதால், முதன்முறையாக பரஸ்பர உடன்பாட்டின் மூலம் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. ராஜஸ்தானும் ஹரியானாவும் இணைந்து ஷெகாவதி பகுதிக்குத் தண்ணீரைக்கொண்டு வரும். சமீபத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் கீழ், ஹத்னிகுண்ட் அணையிலிருந்து நிலத்தடி குழாய்கள் வழியாக ராஜஸ்தானுக்குத் தண்ணீர் கொண்டு வரப்படும். இது சிகார், சுரு, ஜுன்ஜுனு மற்றும் ஒட்டுமொத்த ஷெகாவதி பிராந்தியத்திலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும். இந்தத் திட்டத்திற்காக சுமார் ரூ.34,000 கோடி செலவிடப்படும்.

நண்பர்களே,

எதிர்காலத்தில், மேல் யமுனை வடிநிலத்தில் ரேணுகா, லக்வார் மற்றும் கிஷாவ் அணைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன், ராஜஸ்தான் மாநிலம் இன்னும் கூடுதலாகப் பயனடையும். கிராமங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 'ராம்ஜல் சேது' திட்டம் இந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு விளைவாகும். இதனுடன் சேர்த்து,  மக்கள் பங்கேற்புடன் தண்ணீர் சேமிப்பு இயக்கத்தில் ராஜஸ்தான் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் உறிஞ்சும் குழிகள் கட்டப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் மட்டும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நீரைச் சேமிப்பதோடு, நிலத்தடி நீர் மட்டத்தையும் மேம்படுத்தி வருகின்றன. இந்த முயற்சிகளுக்காக மத்திய மற்றும் மாநில பி.ஜே.பி. அரசுகளும், ஷெகாவதி மக்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, தேசம் எப்போது ஒரு தீர்மானத்தை எடுக்கும்போதும் அல்லது ஒரு இலக்கை நிர்ணயிக்கும்போதும், ராஜஸ்தான் அதன் மையத்தில்தான் இருக்கிறது. நவீன உள்கட்டமைப்புகள் இங்கே மிக வேகமாகக் கட்டப்பட்டு வருகின்றன. புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இன்று, ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவும் ராஜஸ்தானின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி, அதற்குப் புதிய சிறகுகளை அளிக்கும். ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டம் கட்டி முடிக்கப்பட்டவுடன், ஜெய்ப்பூரின் மொத்த மெட்ரோ ரயில் பாதை நீளம் 50 கிலோமீட்டர்களைத் தாண்டும். கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு மெட்ரோ ரயில் பாதைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும். இது உள்ளூர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் வசதியை வழங்கும்.

நண்பர்களே,

வரும் காலங்களில், நாம் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை எட்ட வேண்டும். 'இரட்டை இன்ஜின்' அரசாங்கத்திற்கு நீங்கள் தொடர்ந்து இதேபோல் ஆசி வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இணைந்து, ராஜஸ்தானின் புதிய எதிர்காலத்தை நாம் கட்டமைப்போம். இந்த நம்பிக்கையுடன், இந்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்காக ராஜஸ்தான் மக்களுக்கும், தேச மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -

பாரத மாதாவுக்கு ஜே!

ராஜஸ்தானின் வலிமையைக் காட்ட இரண்டு கைகளையும் உயர்த்தி முழக்கமிடுங்கள்!

 

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Every voter had valid ID': Trump praises India polls, renews push for SAVE America Act

Media Coverage

'Every voter had valid ID': Trump praises India polls, renews push for SAVE America Act
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of self-respect, courage and steadfastness
August 18, 2026

The Prime Minister, Shri Narendra Modi has shared a Sanskrit Subhashitam highlighting the importance of living with self-respect, courage and dignity. He emphasised that true valour and strength lie in remaining steadfast in one’s principles and values, without compromising them under any circumstances.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“उद्यच्छेदेव न नमेदुद्यमो ह्येव पौरुषम्।
अप्यपर्वणि भज्येत न नमत्वेव कस्यचित्॥”

The Subhashitam conveys that a person should always live with self-respect, courage and dignity. True valor and strength lie in never compromising one's principles and values under any circumstances, but remaining steadfast in one's ideals with truth, patience and self-pride.

The Prime Minister wrote on X;

“उद्यच्छेदेव न नमेदुद्यमो ह्येव पौरुषम्।

अप्यपर्वणि भज्येत न नमत्वेव कस्यचित्॥”