“National Games celebrates India's exceptional sporting prowess”
“Talent exists in every nook and corner of India. Hence, post-2014, we undertook a national commitment to promote sporting culture”
“Aura of Goa is beyond compare”
“India’s recent success in the world of sports is a huge inspiration for every young sportsman”
“Discover talent through Khelo India, nurture them and give them training and temperament for an Olympics podium finish by TOPS is our roadmap”
“India is advancing in various domains and setting unprecedented benchmarks today”
“It is hard to match India’s speed and scale”
“MY Bharat will be a medium to turn India’s Yuva Shakti to be Yuva Shakti of Viksit Bharat”
“India is ready to organize the Youth Olympics in 2030 and the Olympics in 2036. Our aspiration to organize the Olympics is not limited to just emotions. Rather, there are some solid reasons behind this”

பாரத் மாதா கி - ஜே!
பாரத் மாதா கி - ஜே!
பாரத் மாதா கி - ஜே!

கோவா ஆளுநர் திரு. பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது பிற சகாக்களே, மேடையில் உள்ள பிரதிநிதிகளே, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அவர்களே, அனைத்து வீரர்கள், உதவி ஊழியர்கள், பிற அதிகாரிகள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இளம் நண்பர்களே…, இந்திய விளையாட்டுகளின் பிரமாண்ட பயணம் இப்போது கோவாவை அடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணங்களும், உற்சாகமும் உள்ளது. கோவாவின் காற்றில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

 

நண்பர்களே,

நாட்டிற்கு பல விளையாட்டு நட்சத்திரங்களை கொடுத்த பூமி கோவா. கோவாவின் ஒவ்வொரு தெருவிலும் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் தெரிகிறது. நாட்டின் பழமையான கால்பந்து சங்கங்கள் சில கோவாவில் உள்ளன. விளையாட்டை நேசிக்கும் கோவாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது புதிய ஆற்றலை அளிக்கிறது.

என் குடும்ப உறுப்பினர்களே,

பாரதத்தில் விளையாட்டுகள் அடுத்தடுத்து புதிய உயரங்களை அடைந்து வரும் நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 70 ஆண்டுகளில் நடக்காததை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பார்த்தோம். இப்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டிகளிலும் இந்திய வீரர்கள் இதுவரை 70-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளனர். இதற்கு முன், உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடந்தன. அங்கும் பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த சாதனைகள் இங்கு வந்துள்ள ஒவ்வொரு வீரருக்கும் பெரும் உத்வேகம் அளிக்கிறது. இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஒரு வகையில், உங்களுக்கும் அனைத்து இளைஞர்களுக்கும், அனைத்து வீரர்களுக்கும் ஒரு வலுவான தளமாகும். உங்கள் முன் உள்ள வாய்ப்புகளை மனதில் கொண்டு, முழு மன உறுதியுடன் உங்கள் சிறந்த செயல்திறனை வழங்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்களா? கண்டிப்பாக செய்வீர்களா? பழைய சாதனைகளை முறியடிப்பீர்களா? என் வாழ்த்துகள் உங்களுடன் உள்ளன.

 

என் இளம் நண்பர்களே,

பாரதத்தில் திறமைக்குப் பஞ்சமில்லை. வளங்கள் இல்லாத காலத்திலும் இந்தியா சாம்பியன்களை உருவாக்கியுள்ளது என்பதற்கு நமது வரலாறு சாட்சி. என்னுடன் மேடையில் அமர்ந்திருக்கிறார் பி.டி.உஷா அதில் ஒருவர்.  நமது பரந்த நாடு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்தது. எனவே, இந்த வலியிலிருந்து நாட்டை விடுவிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டு, 2014 க்குப் பிறகு ஒரு தீர்மானத்தை எடுத்தோம். நாங்கள் விளையாட்டு உள்கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம். தேர்வு செயல்முறையை மறுசீரமைத்தோம். வெளிப்படையானதாக மாற்றினோம். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்கும் திட்டங்களில் மாற்றங்களைச் செய்தோம். சமூகத்தின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். விளையாட்டு உள்கட்டமைப்பில் இருந்த தடைகளை அகற்றத் தொடங்கினோம். திறமைசாலிகளைக் கண்டறிவதில் இருந்து அவர்களைக் கையிலெடுத்து ஒலிம்பிக் மேடையை அடைவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதன் முடிவுகளை இன்று நாடு முழுவதும் பார்த்து வருகிறோம்.

நண்பர்களே,

முந்தைய அரசுகளில் விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது.  விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு, அதற்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்று மக்களும் நினைத்தார்கள்! இந்த எண்ணத்தையும் எங்கள் அரசு மாற்றியது. விளையாட்டுக்கான பட்ஜெட்டை அதிகரித்தோம். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும். கேலோ இந்தியா முதல் டாப்ஸ் திட்டம் வரை, நாட்டில் உள்ள வீரர்களின் வளர்ச்சிக்காக அரசு ஒரு புதிய சூழலை உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களின் பயிற்சி, உணவு மற்றும் பிற செலவுகளுக்கு அரசு நிறைய பணத்தை செலவிடுகிறது. ஒலிம்பிக் பதக்க இலக்கைக் குறிக்கும் டாப்ஸ் திட்டத்தின் கீழ், நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உலகின் சிறந்த பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 3,000 இளைஞர்களுக்கு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீரருக்கும் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்துக்கும் அதிகமான உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

 

என் இளம் நண்பர்களே,

எந்தவொரு நாட்டின் விளையாட்டுத் துறையின் முன்னேற்றமும் அதன் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் எதிர்மறை, ஏமாற்றம் மற்றும் அவநம்பிக்கை எண்ணங்கள் இருக்கும்போது, அதன் பாதகமான விளைவுகள் களத்திலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தெளிவாகத் தெரியும். பாரதத்தின் வெற்றிகரமான விளையாட்டுக் கதை அதன் ஒட்டுமொத்த வெற்றிக் கதையிலிருந்து வேறுபட்டதல்ல. இந்தியா இன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேறி, புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. 

நண்பர்களே,

நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. உங்கள் பிரகாசமான எதிர்காலம் எவ்வாறு உருவாகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். வெறும் 30 நாட்களில் செய்து முடிக்கப்பட்ட பணிகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். கடந்த 30-35 நாட்களில், என்ன நடந்தது என்பதை நீங்கள் காணுங்கள். நாடு இந்த வேகத்திலும் இந்த அளவிலும் முன்னேறுகிறது என்றால், இது உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த மோடியின் உத்தரவாதம் என்று நீங்கள் உணர்வீர்கள்.

கடந்த 30-35 நாட்களில்:

•    மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா அரங்கேற்றப்பட்டது.

•    ககன்யான் தொடர்பான முக்கியமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

•    பாரதம் அதன் முதல் பிராந்திய விரைவு ரயிலான நமோ பாரத் ரயில் சேவையைத் தொடங்கியது.

•    பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டது.

•    முதல் விஸ்டாடோம் ரயில் சேவை ஜம்மு-காஷ்மீரில் தொடங்கியது.

•    இந்த 30 நாட்களில் தில்லி-வதோதரா விரைவுச்சாலையின் திறப்பு விழா நடந்தது.

•    ஜி 20 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேச்சாளர்களின் மாநாடு பாரதத்தில் நடைபெற்றது.

•    6 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களுடன் உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு பாரதத்தில் நடைபெற்றது.

•    இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டது.

•    40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே படகுச் சேவை தொடங்கப்பட்டது.

•    ஐரோப்பாவை பின்னுக்குத் தள்ளி, 5 ஜி பயனர்களின் அடிப்படையில் பாரதம் உலக அளவில் முதல் 3 இடங்களை எட்டியுள்ளது.

•    ஆப்பிளைத் தொடர்ந்து கூகுளும் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை அறிவித்தது.

•    தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் நமது நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

 

நண்பர்களே,

இது சில விஷயங்கள் மட்டுமே. கூறுவதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 

•    மஹாராஷ்டிராவில், 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த, நில்வாண்டே அணைக்கு, இன்று தான் அடிக்கல் நாட்டினேன்.

•    தெலங்கானாவில் கடந்த இந்த 30 நாட்களுக்குள் 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் அனல் மின் நிலையத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

•    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ரூ.24,000 கோடி மதிப்பில் நவீன உருக்கு ஆலை திறக்கப்பட்டது.

•    ராஜஸ்தானில் மெஹ்சானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாயின் ஒரு பகுதியின் திறப்பு விழா நடைபெற்றது.

•    ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஐஐடி வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

•    கடந்த 30 நாட்களில், மகாராஷ்டிராவில் 500 க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

•    சமீபத்தில், குஜராத்தில் உள்ள தோர்டோ சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான விருதைப் பெற்றது.

•    ஜபல்பூரில் ராணி துர்காவதி நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

•    மஞ்சள் விவசாயிகளுக்காக மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

•    தெலங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

•    மத்திய பிரதேசத்தில் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

•    இந்த 30 நாட்களில், பிரதமரின் ஸ்வமித்வா யோஜனாவின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியது.

•    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 26 கோடி குடும்ப அட்டைகள் வழங்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

•    ஆர்வமுள்ள மாவட்டங்களுக்குப் பிறகு, நாட்டில் ஆர்வமுள்ள வட்டாரங்களின் வளர்ச்சிக்கான இயக்கம் தொடங்கப்பட்டது.

•    காந்தி ஜெயந்தி அன்று தில்லியில் உள்ள ஒரு கதர் விற்பனை நிலையத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்துள்ளது.

நண்பர்களே,

இந்த 30 நாட்களில், விளையாட்டு உலகில் நிறைய நடந்துள்ளது.

•    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது.

•    40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தை பாரதம் நடத்தியது.

•    உத்தராகண்ட், ஹாக்கி ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் வெலோட்ரோம் மைதானத்தைப் பெற்றது.

•    வாரணாசியில் நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி தொடங்கியது.

•    குவாலியருக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு மையம் வழங்கப்பட்டது.

•    இங்கு கோவாவில், தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே, வெறும் 30 நாட்களில் செய்த சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சிறிய விளக்கத்தை மட்டும் கொடுத்திருக்கிறேன். இன்று, நாட்டின் ஒவ்வொரு துறையிலும், பகுதியிலும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க அனைவரும் பங்களித்து வருகின்றனர்.

 

நண்பர்களே,

நடக்கும் அனைத்துப் பணிகளுக்கும் மையமாக இருப்பது நாட்டின் இளைஞர்கள், பாரதத்தின் இளைஞர்கள். இன்று, பாரதத்தின் இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளனர். பாரத இளைஞர்களின் இந்த தன்னம்பிக்கையை தேசிய விருப்பங்களுடன் இணைக்க சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி நடந்துள்ளது. மை பாரத் ஒரு புதிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அரசுடம் இணைவதற்கான ஒரு தளமாக இது செயல்படும். இது அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கும் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறைக்கு பங்களிப்பதற்கும் அதிகபட்ச வாய்ப்புகளை வழங்கும். வளமான பாரதத்தின் வளர்ச்சிக்கு பாரத இளைஞர்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்த முன்முயற்சி மாறும். அக்டோபர் 31-ம் தேதி ஏக்தா திவாஸ் (ஒற்றுமை தினம்) அன்று, மை பாரத் இயக்கத்தைத் தொடங்க உள்ளேன். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்திக் கொண்டாடுகிறோம். அக்டோபர் 31 ஆம் தேதி கோவாவிலும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேசத்தின் ஒற்றுமைக்காக ஒரு அற்புதமான ஒற்றுமை ஓட்டம் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த இயக்கத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று பாரதத்தின் உறுதியும் முயற்சிகளும் மகத்தானதாக இருக்கும்போது, பாரதத்தின் விருப்பங்கள் உயர்ந்திருப்பது இயல்பானதுதான். எனவே, சர்வதச ஒலிம்பிக் கமிட்டி கூட்ட அமர்வில் 1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்களை முன்வைத்தேன். 2030-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டியையும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியா தயாராக இருப்பதாக ஒலிம்பிக் கமிட்டியிடம் கூறினேன்.

நண்பர்களே,

ஒலிம்பிக்கை நடத்துவதற்கான எங்கள் விருப்பத்திற்குப் பின்னால் வலுவான காரணங்கள் உள்ளன. சுமார் 13 ஆண்டுகளில் அதாவது, 2036 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் முன்னணி பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாறும். அதற்குள், ஒவ்வொரு இந்தியரின் வருமானமும் இன்று இருப்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதற்குள் பாரதத்தில் கணிசமான அளவு நடுத்தர வர்க்கம் இருக்கும். பாரதத்தின் மூவர்ணக் கொடி விளையாட்டு முதல் விண்வெளி வரை பெருமையுடன் அசைந்து கொண்டிருக்கும். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு போக்குவரத்து இணைப்பு மற்றும் பிற நவீன உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. இன்று, நவீன உள்கட்டமைப்பிற்காக 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட இந்தியா தயாராக உள்ளது. எனவே, அப்போது ஒலிம்பிக் போட்டியை நடத்துவது சாத்தியமாகிவிடும்.

 

நண்பர்களே

நமது தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் அடையாளமாகும். இது பாரதத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் திறன்களை வெளிப்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க தளமாக செயல்படுகிறது. இந்த முறை கோவாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவா அரசும், கோவாவாசிகளும் செய்த ஏற்பாடுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இங்கு கட்டப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு கோவாவின் இளைஞர்களுக்கு பல ஆண்டுகளுக்கு பயனளிக்கும். இங்கிருந்து பல புதிய விளையாட்டு வீரர்கள் உருவாகுவார்கள். தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்.

நண்பர்களே,

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற கோவா, இப்போது கோவா சர்வதேச திரைப்பட விழா மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் உச்சிமாநாடுகளுக்கு கோவாவை ஒரு அத்தியாவசிய மையமாக எங்கள் அரசு மாற்றி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் கோவாவில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நாங்கள் நடத்தினோம்.  மேலும் ஜி 20 தொடர்பான பல முக்கியமான கூட்டங்களும் இங்கு நடந்துள்ளன. 

நண்பர்களே,

களம், சவால் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமது சிறந்த முயற்சி தேவைப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. இந்த உரையின் மூலம், 37 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதை நான் அறிவிக்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்! மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Auto sector reports strong sales momentum; SUVs and exports drive growth across industry

Media Coverage

Auto sector reports strong sales momentum; SUVs and exports drive growth across industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
First Deputy PM of Russia Denis Manturov calls on PM Modi
April 02, 2026
First Deputy PM Manturov briefs PM on progress in trade, fertilizers, connectivity and people-to-people ties
PM recalls the successful visit of President Putin to India in December 2025
PM expresses satisfaction at the sustained efforts towards implementation of the Summit outcomes
PM extends warm greetings to President Putin

The First Deputy Prime Minister of the Russian Federation, H.E. Denis Manturov, called on Prime Minister Shri Narendra Modi today.

First Deputy PM Manturov briefed PM on the progress in various areas of mutually beneficial cooperation, including trade and economic partnership, fertilizers, connectivity and people-to-people ties.

PM recalled the successful visit of President Putin to India in December 2025 for the 23rd India-Russia Annual Summit.

He expressed satisfaction at the sustained efforts being made by both sides towards implementation of the outcomes from the Annual Summit, aimed at further strengthening the India- Russia Special and Privileged Strategic Partnership.

PM extended warm greetings to President Putin and said that he looked forward to their continued exchanges.