கொவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதிலும் உள்ள அரசுகளின் கொள்கை வகுப்பதில் புதுவிதமான சவால்களுடன் வந்துள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. மக்கள் நலனுக்கான போதுமான ஆதாரங்களை, நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன் உருவாக்குவது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.

உலகம் முழுவதும் நிலவும் நிதிப்பற்றாக்குறையின் பின்னணியிலும், இந்திய மாநிலங்கள் 2020-21-ல் குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடுதலாக கடன் பெற முடிந்துள்ளது குறித்து நீங்கள் அறிவீர்களா? மாநிலங்கள் ரூ.1.06 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக கடன் பெற்றிருப்பது உங்களுக்கு வியப்பாக இருக்கக்கூடும். மத்திய-மாநில உறவுகள் குறித்த அணுகுமுறையால், இந்தக் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக, நமது பொருளாதாரத்தை வகுத்தபோது, எல்லோருக்கும் ஒரே மாதிரி அளவு என்ற மாதிரியில் நமது தீர்வுகள் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் விரும்பினோம். கண்டத்துக்கான பரிமாணங்களுடன் கூடிய கூட்டாட்சி நாட்டுக்கு, தேசிய அளவில் கொள்கை வகுத்து, மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேம்படுத்த வேண்டும் என்பது சவாலான காரியமாகும். ஆனால், நமது கூட்டாட்சி அரசியலில் நமக்கு நம்பிக்கை இருந்ததால், மத்திய-மாநில உறவுகளின் எழுச்சியை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

2020 மே மாதத்தில், தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக, 2020-21-ம் ஆண்டுக்கு மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவை அதிகரிக்க அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஜிஎஸ்டிபியில் கூடுதலாக 2% அளவுக்கு கடன் பெற அனுமதிக்கப்பட்டது. அதில் ஒரு சதவீதம் அளவுக்கு, சில பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பொதுநிதித் திட்டத்தில் இந்த சீர்திருத்த நடவடிக்கை அரிதானதாகும். கூடுதல் நிதி பெறுவதற்கு முற்போக்கான கொள்கைகளை மாநிலங்கள் மேற்கொள்வதற்கு இது ஊக்குவிப்பாகும். இந்த நடவடிக்கையின் பலன் ஊக்கமளிப்பதாக மட்டும் இல்லாமல், வலுவான பொருளாதார கொள்கைகளுக்கு ஓரளவுக்கே வரவேற்பு இருக்கும் என்ற கருத்திற்கு மாறாக அமைந்தது.

கூடுதல் கடன் பெறுவதற்கான நான்கு சீர்திருத்தங்கள் (ஜிடிபி-யில் 0.25% ஒவ்வொன்றுடன் இணைந்தது) இரண்டுவிதமான அம்சங்களைக் கொண்டதாகும். முதலாவதாக, மக்களுக்கு குறிப்பாக ஏழைகள், பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளோர், நடுத்தர மக்களுக்கு எளிதான வாழ்க்கையை முன்னேற்றுவதுடன் ஒவ்வொரு சீர்திருத்தமும் இணைந்ததாகும். இரண்டாவதாக, அவை நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தியுள்ளன.

‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தின் கீழ் வரும் முதலாவது சீர்திருத்த கொள்கை, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள மாநிலத்தின் அனைத்து ரேசன் அட்டைகளும், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மின்னணு விற்பனை கருவிகள் உள்ளன என்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மக்களுக்கு இந்தப் பயன்கள் கிட்டுவதுடன், போலி உறுப்பினர்கள் மற்றும் போலி அட்டைகள் நீக்கப்படும் என்ற நிதிப்பயனும் இதில் உள்ளது. 17 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளன. அவை கூடுதலாக, ரூ.37,600 கோடி கடன் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சீர்திருத்தம், எளிதாக தொழில் செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். 7 சட்டங்களின் கீழ், தொழில் தொடர்பான உரிமங்களை புதுப்பிப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். கணினிமயமாக்கப்பட்ட தோராயமான சோதனை மற்றொரு தேவையாகும். சோதனை குறித்து முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படுவது துன்புறுத்தலையும், ஊழலையும் மேலும் 12 சட்டங்களின் கீழ் குறைப்பதாக அமையும். இந்த சீர்திருத்தம் (19 சட்டங்களைக் கொண்ட) ‘ஆய்வு ராஜ்யத்தின்’ பெரும் சுமையால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு தொழில்களுக்கு உதவும். இது மேம்படுத்தப்பட்ட முதலீட்டு சூழல், பெருமளவு முதலீடு, விரைவான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும். 20 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், அவை கூடுதலாக ரூ. 39,521 கோடி கடன் பெற அனுமதிக்கபட்டுள்ளன.

15-வது நிதி ஆணையம் மற்றும் பல்வேறு அகடமிகள் வலுவான சொத்து வரிவிதிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. மூன்றாவது சீர்திருத்தம், மாநிலங்கள் நகர்ப்புறப் பகுதிகளில், சொத்து பரிவர்த்தனைக்கு, சொத்து வரி, தண்ணீர் மற்றும் கழிவு நீர் அகற்றலுக்கான கட்டண விகிதங்களை, முத்திரைத்தாள் மதிப்பு, வழிகாட்டு மதிப்பு அடிப்படையில் அறிவிக்க வேண்டும். இது நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தரப் பிரிவினருக்கு தரமான சேவைகள் கிடைக்க வழிவகுக்கும். மேலும், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். சொத்து வரியும் முற்போக்கான விஷயமாகும். இதனால், நகர்ப்புற ஏழை மக்கள் பெரிதும் பயனடைவர். இந்தச் சீர்திருத்தம், கட்டணங்களை தாமதமாகச் செலுத்துவதை எதிர்கொள்ளும் நகராட்சி ஊழியர்களுக்கும் பயனளிக்கும். 11 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அவை கூடுதலாக, ரூ.15,957 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன.

நான்காவது சீர்திருத்தம், இலவச மின்சாரத்துக்குப் பதிலாக, நேரடி பயன் பரிமாற்றத்தை அமல்படுத்துவதாகும். ஒரு மாவட்டத்தில் பரிசோதனை அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். கூடுதலாக ஜிஎஸ்டிபி-யில் 0.15% கடன் பெறுவது இதனுடன் தொடர்புடையதாகும். தொழில்நுட்ப, வணிக இலக்குகளுக்கு தள்ளுபடி அம்சமும் இதில் உள்ளது. வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியைக் (ஜிஎஸ்டிபி-யில் தலா 0.05%) குறைக்க இது வழங்கப்படும். இது விநியோக நிறுவனங்களின் நிதி நிலையை முன்னேற்றுவதுடன், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பை மேம்படுத்தி, சிறப்பான நிதி மற்றும் தொழில்நுட்ப திறன் வழியாக தரமான சேவை வழங்க வழிவகுக்கும். இந்த விஷயத்தை ஆறு மாநிலங்கள் ஒப்புக் கொண்டு, ரூ.13,201 கோடி கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, ரூ.2.14 லட்சம் கோடி வாய்ப்பில், 23 மாநிலங்கள் கூடுதலாக ரூ.1.06 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. இதன் பயனாக, 2020-21-ம் ஆண்டில் மாநிலங்களுக்கான மொத்த கடன் அனுமதி மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்டிபி-யில் 4.5% ஆகும்.

சிக்கலான சவால்களைக் கொண்ட நம்மைப் போன்ற பெரிய நாட்டுக்கு, இது ஒரு தனித்துவமான அனுபவம் ஆகும். பல காரணங்களுக்காக திட்டங்களும், சீர்திருத்தங்களும் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததை நாம் அடிக்கடி கண்டுள்ளோம். பெருந்தொற்றுக்கு இடையிலும், மிகக்குறுகிய காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடந்த கால அனுபவத்திலிருந்து விடுப்பட்டு, மக்கள் நலனுக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டிருப்பது, மகிழ்ச்சியான விஷயமாகும். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்னும் நமது அணுகுமுறையால் இது சாத்தியமாயிற்று. இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பணியாற்றும் அதிகாரிகள், இந்த கூடுதல் நிதி ஊக்குவிப்பு இல்லையெனில், கொள்கைகளை செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும் எனக் கூறுகின்றனர். கட்டாயத்தின் காரணமாக இந்தியா இந்த மாதிரி சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. நம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு காரணமாக இந்த புதிய மாதிரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் நலனுக்காக, இந்த நெருக்கடியான காலத்திலும், இதைச் செயல்படுத்தியுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். 130 கோடி இந்தியர்களின் அபரிமிதமான முன்னேற்றத்துக்காக நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts

Media Coverage

Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
காசி-தமிழ் சங்கமம் மற்றும் 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்'-திற்கு (ஒரு பாரதம், வலுவான பாரதம்) அஞ்சலி
January 15, 2026

1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன். வரலாறு, கலாச்சாரம், இந்திய மக்களின் நீடித்த மனவுணர்வு ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட மரியாதையால் ஒன்றுகூடிய இந்த நினைவு நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, காசி-தமிழ் சங்கமம் உண்மையில் தனித்துவ முயற்சியாக விளங்குகிறது. இது இந்தியாவின் பல மரபுகளில் வாழும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தனித்துவ அடையாளங்களை மதிக்கிறது.

அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்து வரும் அதே காசிக்கு... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.

தமிழ் மக்களுடனும் கலாச்சாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார். தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மீகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார். அவரது தேசியவாதம் ஆழமாகி, அவரது கவிதை கூர்மையானது. சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியா பற்றிய அவரது பார்வை தெளிவான வடிவம் பெற்றது இங்குதான். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டும் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கமம், அதன் முக்கிய உணர்வில் வேரூன்றி தொடர்ந்து மேம்படுவதை இது உறுதி செய்தது. 2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்! இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன. கலாச்சார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

காசி தமிழ் சங்கமத்தின்போது மேற்கொண்ட காசி பயணத்தை மறக்கமுடியாத சிறப்பான பயணமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பல ரயில் நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ரயில் பயணத்தில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்ததுடன், உரையாடல்களும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்குக் காட்டப்பட்ட அரவணைப்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும் காசியையும் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளைப் நான் பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக பலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வரவேற்றனர். விருந்தினர்கள் தடையற்ற சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்தது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!

இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.

காசி - தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயண், பொங்கல், மஹா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.