மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இந்தியா-மொரீஷியஸ் இடையே தனித்துவம் மிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். திறன் மேம்பாடு, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.
11-வது சர்வதேச யோகா தினத்தில் அந்நாட்டு பிரதமர் ராம்கூலம் முழு மனதுடன் பங்கேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
பெருங்கடல் பாதுகாப்புத் திட்டம் என்ற தொலைநோக்கு பார்வை மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கேற்ப மொரீஷியஸ் நாட்டின் முன்னேற்றங்களுக்கு இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.
இந்தியா வருமாறு அந்நாட்டு பிரதமருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
Pleased to speak with my friend, Prime Minister Dr. Navinchandra Ramgoolam. We exchanged views on further strengthening India-Mauritius Enhanced Strategic Partnership and regional developments. Mauritius remains a key partner in India’s Vision MAHASAGAR and our Neighbourhood…
— Narendra Modi (@narendramodi) June 24, 2025


