"தேசிய படைப்பாளிகள் விருது எங்கள் படைப்பாளிகள் சமூகத்தின் திறமையை அங்கீகரிக்கப்படுவதுடன் மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களின் ஆர்வத்தைக் கொண்டாடுகிறது"
"தேசியப் படைப்பாளர் விருதுகள் புதிய சகாப்தம் தொடங்குவதற்கு முன்பே அடையாளத்தை அளிக்கின்றன"
"டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் புதிய உலகத்தை உருவாக்கியுள்ளது"
"எங்கள் சிவன் நட்ராஜர், அவரது உடுக்க மகேஷ்வர சூத்திரத்தை உற்பத்தி செய்கிறது, அவரது தாண்டவம் தாளம் மற்றும் படைப்புக்கு அடித்தளம் அமைக்கிறது"
"இளைஞர்கள் தங்கள் நேர்மறையான நடவடிக்கைகளால் உள்ளடக்கப் படைப்பாளர்களை நோக்கிக் பார்க்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்"
"நீங்கள் ஒரு யோசனையை உருவாக்கி, அதைப் புதுமைப்படுத்தி, திரையில் ஒரு உயிர் வடிவத்தைக் கொடுத்தீர்கள். நீங்கள் இணையத்தின் எம்.வி.பி.க்கள்"
"உள்ளடக்க உருவாக்கம் நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களைச் சரிசெய்ய உதவும்"
"போதைப்பொருளின் எதிர்மறையான விளைவுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்ப
நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.
100 குறைக்கும் முடிவுவை அறிவித்து குறித்து கலந்து கொண்டவர்களிடமிருந்து பெரும் கைதட்டலை ஈர்த்தார்.
"தவறான கருத்துக்களை சரிசெய்ய உள்ளடக்க உருவாக்கம் உதவும்" என்று பிரதமர் கூறினார்.

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் கலந்துரையாடினார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.

 

'புதிய இந்தியா சாம்பியன்' விருது அபி மற்றும் நியூ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உண்மை தகவல்களை முன்வைக்கும் போது பார்வையாளர்களின் ஆர்வத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கிறீர்கள் என்று பிரதமர் அவர்களிடம் கேட்டார். பிரதமர் வழங்குவதைப் போலவே, உண்மைகளை ஆற்றலுடன் முன்வைத்தால், பார்வையாளர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கூறினர்.   சவாலான, ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த களத்தை மேற்கொண்டதற்காக அவர்களை பிரதமர் பாராட்டினார்.

சிறந்த கதைசொல்பவருக்கான விருது கீர்த்திகா கோவிந்தசாமிக்கு  வழங்கப்பட்டது. பிரதமரின் கால்களைத் தொட்டு  அவர் வணங்கியது குறித்துக் கருத்து தெரிவித்த பிரதமர், கலைத்துறையில் கால்களைத் தொடுவது வித்தியாசமானது, ஆனால் தனிப்பட்ட முறையில் குறிப்பாக ஒரு மகள் தமது கால்களைத் தொடும்போது தமக்கு தொந்தரவாக இருப்பதாக கூறினார். இந்தி மொழியில் தனக்கு உள்ள வரம்புகளைப் பற்றி அவர் பேசியபோது, 'இது ஒரு பெரிய நாடு, இந்த மாபெரும் நிலத்தின் ஏதாவது ஒரு மூலையிலாவது நீங்கள் கேட்கலாம்' என்ற பிரதமர், விரும்பிய மொழியில் பேசுமாறு கேட்டுக்கொண்டார். சிறந்த தமிழ் மொழியை அங்கீகரித்து ஊக்குவித்ததற்காக பிரதமரை அவர் பாராட்டினார். வரலாறு மற்றும் அரசியலின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை குறித்தும், அதன் விளைவாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது பின்னடைவுகள் ஏற்படுவது குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார். இன்றைய பதின்ம வயது பார்வையாளர்கள் இந்தியாவின் பெருமையைப் பற்றி அறிய விரும்புகிறார்கள் என்று பிரதமரிடம் அவர் கூறினார்.

 

ரன்வீர் அலகாபாடியாவுக்கு ஆண்டின் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டது. ரன்வீர் தூக்கமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், கடந்த பல ஆண்டுகளாக சில மணிநேரங்கள் மட்டுமே தூங்குவதாகவும் பிரதமர் கூறினார். யோக நித்ராவின் நன்மைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். ரன்வீரின் வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.  

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி, அகமதாபாத்தைச் சேர்ந்த திருமதி பங்க்தி பாண்டே, மிஷன் லைஃப் செய்தியை விரிவாக கொண்டு சேர்த்ததற்கான பசுமை சாம்பியன் விருதைப் பெற்றார். அவருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, அகமதாபாத் மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சம்பவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். பூஜ்ஜிய கழிவுகளை உருவாக்கும் முயற்சியில், வீட்டிலிருந்து  தூக்கி எறியப்படும் குப்பைகளின் கழிவுகளை பகுப்பாய்வு செய்யவும், கழிவுகளை  தணிக்கை செய்யவும் திருமதி பங்க்தி பாண்டே மக்களுக்கு பரிந்துரைத்தார். மிஷன் லைஃப் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு அவரைக் கேட்டுக் கொண்ட பிரதமர், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற தனது அறைகூவலை நினைவு கூர்ந்தார்

 

சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளருக்கான விருது நவீன காலத்தின் மீரா என்று அழைக்கப்படும் ஜெயா கிஷோரிக்கு வழங்கப்பட்டது. அவர் பகவத் கீதை மற்றும் ராமாயணத்திலிருந்து கதைகளை நுண்ணறிவுடன் பகிர்ந்து கொள்கிறார். 'கதகார்' என்ற தனது பயணத்தையும், நமது கலாச்சாரத்தின் காவியங்களின் சிறந்த நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களிடையே ஆர்வத்தை எவ்வாறு உருவாக்குகிறார் என்பதையும் அவர் விளக்கினார். ஒருவரின் பொருள் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்றும் போது அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியம் குறித்தும் அவர் பேசினார்.

புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதில் பணியாற்றியதற்காக லக்ஷயா தபாஸ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளருக்கான விருதைப் பெற்றார். அவரது சார்பில் விருதைப் பெற்ற அவரது சகோதரர், நாட்டில் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகள் குறித்தும், பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது குறித்தும் பயிற்சி அளிப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். தற்போதைய காலகட்டத்தில் அவரது சிந்தனை போக்கை பாராட்டிய பிரதமர், குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்யா தேவ்ரத் அவர்களை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்த அவரது தொலைநோக்கு பார்வை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அங்கு அவர் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்தை பின்பற்ற தூண்டியுள்ளார். ஸ்ரீ  தேவ்ரத்தின் யூடியூப் வீடியோக்களைக் கேட்குமாறு திரு லக்ஷ்யாவை அவர் வலியுறுத்தினார். இயற்கை விவசாயம் தொடர்பான கட்டுக்கதைகளை அகற்ற அவரது உதவியையும் பிரதமர் கேட்டார். 

 

ஆண்டின் சிறந்த கலாச்சார தூதர் விருது பல இந்திய மொழிகளில் அசல் பாடல்கள், பாரம்பரிய நாட்டுப்புற இசையை நிகழ்த்திய மைதிலி தாக்கூருக்கு வழங்கப்பட்டது. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மகாசிவராத்திரியை முன்னிட்டு பகவான் சிவனுக்காக பக்திப் பாடலைப் பாடினார். பிரதமர் தனது மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்ட கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவர் குறிப்பாக பக்தி பாடல்களை பல இந்திய மொழிகளில் பாடுகிறார்,. அண்மையில் பிரதமரை சந்தித்த அவர், பிரதமர் மோடி முன்னிலையில் அச்யுதம் கேசவம் மற்றும் தமிழ் பாடல் ஒன்றையும் பாடினார்.

சிறந்த சர்வதேச படைப்பாளி விருதினை  தான்சானியாவைச் சேர்ந்த கிரி பால், அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ ஹிக்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த கசாண்ட்ரா மே ஸ்பிட்மேன் ஆகிய மூன்று படைப்பாளர்கள் பெற்றனர். ட்ரூ ஹிக்ஸ் தனது சரளமான இந்தி மற்றும் பிஹாரி உச்சரிப்பால் சமூக ஊடக புகழைப் பெற்றதுடன் இந்தியாவில் மொழியியல் திறமைக்கான புகழையும் குவித்துள்ளார். இந்த விருது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ட்ரூ, மக்களை மகிழ்விக்கவும், இந்தியாவின் பெயரை உயர்த்தவும் விரும்புவதாக கூறினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் பாட்னாவுடனான தனது தந்தைக்கு இருந்த தொடர்பு காரணமாக இந்திய கலாச்சாரத்தின் மீதான தனது ஆர்வம் அதிகரித்ததாக அவர் தெரிவித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரது ஒவ்வொரு வார்த்தையும் நாட்டின் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார்.

கர்லி டேல்ஸ் படத்தின் காமியா ஜானிக்கு சிறந்த பயண படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. அவர் உணவு, பயணம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார் மற்றும் இந்தியாவின் அழகியலை வீடியோக்களில் காண்பிக்கிறார். இந்தியாவின் அழகியல் குறித்து பேசிய அவர், உலக வரைபடத்தில் இந்தியா முதலிடத்தைப் பெற வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறினார். லட்சத்தீவு அல்லது துவாரகாவுக்கு செல்வது குறித்து தான் குழப்பத்தில் இருப்பதாக அவர் கூறினார். துவாரகாவை பொறுத்தவரை பார்வையாளர்களின் சிரிப்பை வரவேற்க அவர் மிகவும் ஆழமாக செல்ல வேண்டியிருக்கும் என்று கூறினார்.  நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தை தரிசனம் செய்த மகிழ்ச்சியை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். ஆதி கைலாஷ் சென்ற அனுபவத்தை விவரித்த பிரதமர், உயரம் மற்றும் ஆழம் இரண்டையும் அனுபவித்ததாகக் கூறினார். தரிசனம் செய்வதை தவிர புனித இடங்களை முழுமையாக அனுபவிக்க பக்தர்களை ஊக்குவிக்குமாறு படைப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். மொத்த பயண பட்ஜெட்டில் 5-10 சதவீதம் உள்ளூர் தயாரிப்புகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிப்பதைத் தவிர, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலியுறுத்தவும் இது உதவுகிறது என்று அவர் கூறினார். நாட்டில் உள்ள நம்பிக்கைக்குரிய இடங்களை புத்துயிர் பெறச் செய்ததற்காக பிரதமருக்கு காமியா நன்றி தெரிவித்தார்.

 

சிறந்த தொழில்நுட்ப யூடியூபரான 'டெக்னிக்கல் குருஜி' விருதை கௌரவ் சவுத்ரி வென்றார். தனது சேனலுக்கு டிஜிட்டல் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு அளித்து வருவதாக கூறிய அவர் அதற்கு நன்றி தெரிவித்தார். "பிரகாசமான எதிர்காலத்திற்கு நாம் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும். யுபிஐ அனைவருக்கும் சொந்தமானது என்பதால் அது ஒரு பெரிய அடையாளமாகும். அப்படி ஜனநாயகம் ஏற்பட்டால்தான் உலகம் முன்னேறும். பாரிஸில் யுபிஐ பயன்படுத்திய தனது அனுபவத்தை கௌரவ் விவரித்தார், மேலும் இந்திய தீர்வுகள் உலகிற்கு உதவ முடியும் என்று கூறினார்.

மல்ஹார் கலம்பே 2017 முதல் துப்புரவு இயக்கங்களை வழிநடத்தியதற்காக ஸ்வச்சதா தூதர் விருதைப் பெற்றார். பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்துகிறார். 'பீச் ப்ளீஸ்' என்ற அமைப்பின் நிறுவனர் இவர்தான். மெலிந்த மல்ஹாருடன் நகைச்சுவையாக பேசிய பிரதமர், இங்குள்ள பல படைப்பாளர்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றி பேசுகிறார்கள் என்று அவரிடம் கூறினார். தனது பயணம் மற்றும் பிரச்சாரங்கள் குறித்து விரிவாக கூறிய அவர், குப்பைகளை அகற்றும் அணுகுமுறைகள் மாற வேண்டும் என்று கூறினார். அவரது தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், தூய்மைக்கான சூழலை உருவாக்கியதற்காகவும் அவரைப் பாராட்டினார்.

 

ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது இன்ஸ்டாகிராமின் உள்ளடக்க படைப்பாளரான 20 வயதான ஜான்வி சிங்கிற்கு வழங்கப்பட்டது, அவர் இந்தியன் ஃபேஷன் பற்றி பேசுகிறார் மற்றும் இந்திய புடவைகளை ஊக்குவிக்கிறார். ஜவுளிச் சந்தை நாகரீகத்துடன் இணைந்தது என்று கூறிய பிரதமர், இந்திய ஜவுளிகளை மேம்படுத்துவதில் இந்நூலைப் படைத்தவரின் முயற்சிகளை பாராட்டினார். சமஸ்கிருதம், சாஸ்திரம் மற்றும் சேலை மூலம் இந்திய கருப்பொருள்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தனது குறிக்கோளை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆயத்த தலைப்பாகைகள், வேட்டி மற்றும் அணிய வேண்டிய ஆடைகளின் போக்கை சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்பது குறித்து அவரது கருத்துக்களை கேட்டறிந்தார். இந்திய ஆடைகளின் அழகையும் அவர் வலியுறுத்தினார். நவநாகரிகத்தில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

 

சிறந்த படைப்பாளி விருது பன்மொழி நகைச்சுவைத் தொகுப்புகளுக்காகவும், தலைமுறைகளைக் கடந்து ஈர்க்கக்கூடிய மற்றும் தொடர்புபடுத்தக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காகவும் புகழ்பெற்ற ஷ்ரத்தாவுக்கு வழங்கப்பட்டது. ஷ்ரத்தாவை அவரது வர்த்தக முத்திரையான 'அய்யோ' என்ற பெயருடன் வரவேற்ற பிரதமர், ஷ்ரத்தாவை சந்திப்பது இரண்டாவது முறை என்று கூறினார். இந்த விருது தங்கள் வீடுகளிலிருந்து உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கான அங்கீகாரம் என்று ஷ்ரத்தா கூறினார், மேலும் தீவிரமான கருப்பொருள்களில் லேசான நகைச்சுவையைக் கண்டுபிடிப்பதற்கான தனது அணுகுமுறையையும் அவர் சுட்டிக்காட்டினார். படைப்பாளிகளுடனான கலந்துரையாடலில் தன்னிச்சையான தன்மைக்காக பிரதமரை ஷ்ரத்தா பாராட்டினார்.

சிறந்த படைப்பாளி விருதை ஆர்.ஜே.ரவுனக் பெற்றார். மனதின் குரல் வாயிலாக வானொலித் துறையில் பிரதமர் மிக முக்கியமான, சாதனை படைத்த நபராகவும் திகழ்கிறார் என்று ரவுனக் கூறினார். வானொலி துறையின் சார்பில் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். ரௌனக் தனது டிரேட் மார்க் 'பாவ்' பாணியில் பேசினார்.

உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளருக்கான விருது தனது சமையல் குறிப்புகள் மற்றும் பயிற்சிகளால் டிஜிட்டல் தொழில்முனைவோராக மாறிய இல்லத்தரசி கபிதா'ஸ் கிச்சனுக்கு வழங்கப்பட்டது. மல்ஹரின் மெலிந்த உடலமைப்பு குறித்த தனது கவலையைத் தொடர்ந்த பிரதமர், அவரை கவனித்துக் கொள்ளுமாறு கபிதாவிடம் நகைச்சுவையாக கூறினார். சமையல் ஒரு முக்கிய வாழ்க்கைத் திறனாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பள்ளிகள் மாணவர்களுக்கு விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இதனால் அவர்கள் உணவின் முக்கியத்துவத்தையும், வீணாவதையும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார். பயணத்தின் போது உள்ளூர் உணவு வகைகளை மக்கள் முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். உணவு தொடர்பான படைப்பாளிகளிடம் சிறுதானியங்களை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து மதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தான் தைவான் சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், அங்கு சைவ உணவுக்காக புத்தமத உணவகம் ஒன்றைப் பரிந்துரைத்ததை நினைவு கூர்ந்தார். அங்கு அசைவ உணவுகளைப் பார்த்து விசாரித்தபோது, சைவ உணவுகள் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற உணவுகளைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் உள்ளூர் மக்கள் அத்தகைய உணவின் மீது ஈர்க்கப்படுவார்கள் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

 

நமன் தேஷ்முக் கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளருக்கான விருதைப் பெற்றார். அவர் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கேஜெட் உள்ளடக்கத்தை உருவாக்குபவர். தொழில்நுட்பம், கேஜெட்டுகள், நிதி, சமூக ஊடக மார்க்கெட்டிங் ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் குறியீட்டு முறை போன்ற தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களில் பார்வையாளர்களுக்கு பல்வேறு தகவல்களை அளிக்கிறது. பல்வேறு ஆன்லைன் மோசடிகள் குறித்தும், அரசின் திட்டங்களின் பயன்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கான வழிகள் குறித்தும் தமது படைப்புகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பிரதமரிடம் எடுத்துரைத்தார். பாதுகாப்பான உலாவல் மற்றும் சமூக ஊடக நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பிரதமர் அவரைப் பாராட்டினார். அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குமாறு படைப்பாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். சந்திரயான் போன்ற வெற்றிகள் குழந்தைகள் மத்தியில் புதிய அறிவியல் மனப்பான்மையை உருவாக்கியுள்ளதால் குழந்தைகளை அறிவியலை பாடமாக எடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அங்கித் பையான்பூரியாவுக்கு சிறந்த உடல்நலம் மற்றும் உடற்தகுதி படைப்பாளர் விருது பிரதமரால் வழங்கப்பட்டது. அங்கித் உடற்பயிற்சி துறையில் செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் தனது 75 கடினமான சவால்களை முடிப்பதில் பிரபலமானவர்.  அவர் பிரதமருடன் இணைந்துள்ளார். அங்கித் பார்வையாளர்களை தவறாமல் உடற்பயிற்சி செய்து சீரான வாழ்க்கை முறையை வழிநடத்துமாறு அறிவுறுத்தினார்.

'டிரிக்கர்டு இன்சான்' நிஷேவுக்கு கேமிங் கிரியேட்டர் விருது வழங்கப்பட்டது. அவர் தில்லியைச் சேர்ந்த யூடியூபர், லைவ்-ஸ்ட்ரீமர் மற்றும் கேமர் ஆவார். கேமிங் பிரிவை அங்கீகரித்ததற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சிறந்த மைக்ரோ கிரியேட்டர் விருது அரிதாமனுக்கு வழங்கப்பட்டது. இவர் வேத வானியல் மற்றும் பண்டைய இந்திய ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றை ஆராய்கிறார். முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் கைரேகை பார்ப்பது போல் நடித்து ஒவ்வொரு முறையும் தனக்கு இருக்கை வழங்கப்பட்ட ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பிரதமர் விவரித்தார். தர்ம சாஸ்திரத்தில் தான் உள்ளடக்கத்தை உருவாக்குவதாகக் கூறிய அரிதாமன், தர்ம சக்கரம், ரிஷபம் மற்றும் சிம்ஹாவுடன் சாஸ்திரங்களின் பல கூறுகளைக் கொண்டுள்ளது என்றார். தர்ம சக்ராவின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். அரிதமான் இந்திய உடையை அணிய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதிகம் அறியப்படாத இடங்கள், மக்கள் மற்றும் பிராந்திய திருவிழாக்களை முன்னிலைப்படுத்தும் சமோலி உத்தராகண்டைச் சேர்ந்த பியூஷ் புரோஹித்துக்கு சிறந்த நானோ படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. மனதின் குரலில் சமோலியைச் சேர்ந்த பெண்கள் கேரளப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும் என்று தான் விடுத்த வேண்டுகோளை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

பாட் (BoAT) -இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும், ஷார்க் டேங்க் இந்தியாவில் ஈடுபட்டதற்காக பிரபலமான அமன் குப்தாவுக்கு சிறந்த பிரபல படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு புத்தொழில் நிறுவனம் மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா தொடங்கப்பட்ட போதே இந்த நிறுவனத்தை தொடங்கியதாக பிரதமரிடம் தெரிவித்தார். குறுகிய காலத்தில், அவை உலகின் மிகப்பெரிய ஆடியோ பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Skyroot to launch first private orbital mission Vikram-1, PM Modi calls it 'historic frontier' for India's space journey

Media Coverage

Skyroot to launch first private orbital mission Vikram-1, PM Modi calls it 'historic frontier' for India's space journey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends best wishes to Skyroot Aerospace
July 18, 2026
Prime Minister invites citizens to witness launch of Orbital Launch Vehicle, Vikram-1

Prime Minister Shri Narendra Modi, today, extended his best wishes to Skyroot Aerospace ahead of the maiden orbital launch of Vikram-1, India's first privately developed launch vehicle, describing it as a historic milestone in the nation's space journey. Shri Modi said that the launch of Vikram-1 marks the opening of a new frontier for India's space ambitions and reflects the country's growing capabilities in innovation, technology and entrepreneurship.

The Prime Minister also urged citizens, particularly the youth, to witness this landmark mission.

The Prime Minister posted on X:

A historic new frontier for India’s space journey!

At 11:30 AM today, Skyroot Aerospace will undertake the maiden orbital launch of Vikram-1, India’s first privately developed launch vehicle.

This four-stage rocket is designed to provide rapid and on-demand launch services. This mission highlights the talent, determination and entrepreneurial spirit of our youth. It also shows how our space-sector reforms are unlocking new opportunities for innovation and enterprise.

My best wishes to the entire Skyroot Aerospace team for a successful launch. May Vikram-1 soar high, create history and inspire a generation of innovators.

I urge all Indians, especially my young friends, to follow this historic mission and join in wishing Team Skyroot success using #IndiaWithVikram1.

@SkyrootA