தொலைநோக்கி மூலம் இரவு நேர விண்வெளியைக் கண்டுகளிக்கும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற மீராமார் கடற்கரைக்கு மக்கள் திரண்டு வரும் நிலையில் கோவா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தின் மூலம் மேம்படுத்தப்படும் இரவு நேர விண்வெளிக் காட்சி சுற்றுலா முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்களின் ட்விட்டர் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இத்தகைய வேகமான முயற்சிகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மனதின் குரல் நிகழ்வின் போது வானியலில் இந்தியாவின் வளமான பாரம்பரியம் குறித்து நான் பேசியிருந்தேன். “
Happy to see such efforts pick pace. I had also spoken about India’s rich heritage in astronomy during a #MannKiBaat episode a few years ago. https://t.co/42WY352s3I https://t.co/we95PEEWz5
— Narendra Modi (@narendramodi) March 29, 2023


