பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய சிறார் விருதுபெற்றவர்களுடன் இன்று கலந்துரையாடினார். 

 இந்த விருதுகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டன.   இந்த விருதுபெற்றவர்கள் குடியரசுத் தின அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள். 

ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 49 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.  கலை மற்றும் கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு, கல்வி, சமூக சேவை, விளையாட்டு, தீரச் செயல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சிறுவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

 நாட்டு நிர்மாணத்தில்  சிறார்கள் மிகமுக்கிய பங்கு வகிப்பவர்கள் என்பதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு அரசு ஆண்டுதோறும் இந்த விருதுகளை வழங்குகிறது.  புதிய கண்டுபிடிப்பு, கல்வியில் சாதனை, சமூக சேவை, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, தீரச்செயல் போன்ற துறைகளில் சிறப்பான சாதனை படைத்த சிறுவர்கள் இதன்மூலம் அங்கீகரிக்கப்படுகின்றனர்.