செப்டம்பர் 24 அன்று, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன்; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி;  ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோரை முதன்முறையாக குவாட் தலைவர்கள் நேரில்  பங்கேற்ற குவாட் உச்சிமாநாட்டில் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வரவேற்றார்.

தலைவர்கள் நமது உறவுகளை ஆழப்படுத்தி, 21 ஆம் நூற்றாண்டின் சவால்களில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் லட்சிய முயற்சிகளை முன்வைத்துள்ளனர்:

பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகளைப் பெற வகை செய்தல், தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்தல்; உயர்தர உள்கட்டமைப்பை ஊக்குவித்தல், காலநிலை நெருக்கடியை எதிர் கொள்ளுதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விண்வெளி மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் கூட்டாண்மை, நமது அனைத்து நாடுகளிலும் அடுத்த தலைமுறை திறமைகளை வளர்த்தல், போன்ற பல்வேறு முயற்சிகளை முன்வைத்துள்ளனர்.

கோவிட் மற்றும் உலகளாவிய சுகாதாரம் குவாட் அமைப்பின் நான்கு நாடுகளுக்கும்,  உலகம் முழுவதும் , நமது உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் கோவிட் -19 தொற்றுநோய் என்பதை குவாட் தலைவர்கள் அங்கீகரிக்கின்றனர். எனவே மார்ச் மாதத்தில், குவாட் தலைவர்கள் குவாட் தடுப்பூசி கூட்டைத் தொடங்கினர். இந்திய-பசிபிக் பகுதியிலும், உலகம் முழுமையும் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகள் அனைவருக்கும் சமமான வகையில் கிடைக்கச் செய்வதை மேம்படுத்த உதவுவதற்காக. மார்ச் முதல், ”குவாட் தடுப்பூசி கூட்டு“ ஒன்றை குவாட் தலைவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.  பாதுகாப்பான, பயனுள்ள கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை குவாட் எடுத்துள்ளது. குவாட் நாடுகள் தங்கள் சொந்த விநியோகத்திலிருந்து தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்தன. தொற்றுநோயை எதிர்கொள்ள இந்தோ-பசிபிக்கிற்கு உதவ இணைந்து பணியாற்றியன.

குவாட் தடுப்பூசி நிபுணர்கள் குழு நமது ஒத்துழைப்பின் மையமாக உள்ளது. இந்திய-பசிபிக் பகுதியில்   சமீபத்திய தொற்றுநோய் போக்குகள் குறித்து பகிர்ந்து கொள்வதற்காக முறைப்படி சந்தித்தல் , கோவிட்-19 டாஷ் போர்டில் கோவிட்டுக்கு எதிரான கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை குவாட் ஒருங்கிணைக்கிறது.  அதிபர் பைடனின் செப்டம்பர் 22 கோவிட் -19 உச்சிமாநாட்டை நாங்கள் வரவேற்கிறோம், எங்கள் பணி தொடரும்.

குவாட் பின்வருவனவற்றைச் செய்யும்:

உலகம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவும்: குவாட் நாடுகளாக, நாங்கள் உலக அளவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை நன்கொடையாக வழங்க உறுதி பூண்டுள்ளோம். இது மட்டுமல்லாமல், நாங்கள் கோவாக்ஸ் மூலம் நிதியளித்துள்ளோம். இன்றுவரை நாங்கள் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசி மருந்து கிட்டத்தட்ட 79 மில்லியன் டோஸ், இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கு வழங்கியுள்ளோம்.

தடுப்பூசி கூட்டு தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான பாதையில் உள்ளது. இதன் மூலம், இந்த இலையுதிர்காலத்தில் உயிரியல் இ லிமிடெட், 2022 ஆம் ஆண்டிறுதிக்குள் குறைந்தது 1 பில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்க முடியும். அந்தப் புதிய திறனை நோக்கி முதல் படியாக,

பெருந்தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற இந்திய-பசிபிக் பகுதியின் முயற்சிக்கு உடனடியாக உதவும் வகையிலான துணிச்சலான நடவடிக்கைகளை தலைவர்கள் அறிவிப்பார்கள். தடுப்பூசி உற்பத்திக்கான வெளிப்படையான, பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம். அக்டோபர் 2021 முதல், கோவாக்ஸ் உட்பட பாதுகாப்பான, பயனுள்ள கோவிட்-19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான இந்தியாவின் அறிவிப்பை குவாட் வரவேற்றது. $ 3.3 பில்லியன் கொண்ட, “கோவிட் -19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அவசர ஆதரவுக் கடன்” திட்டத்தின் கீழ், ஜப்பான், பிராந்திய நாடுகளுக்கு பாதுகாப்பான, பயனுள்ள, தரமான தடுப்பூசிகளை வாங்க தொடர்ந்து உதவும். தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான தடுப்பூசிகளை வாங்க ஆஸ்திரேலியா $ 212 மில்லியன் மானிய உதவியை வழங்கும். கூடுதலாக, ஆஸ்திரேலியா கடைசி மைலில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி என்பதை ஆதரிக்க 219 மில்லியன் டாலர்களை ஒதுக்கும். அந்தப் பகுதிகளில் குவாட்டின் கடைசி மைல் விநியோக முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகிக்கும். குவாட் உறுப்பு நாடுகள் ஆசியான் செயலகம், கோவாக்ஸ் வசதி மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும்.

உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு ஹெச் ஓ ), கோவாக்ஸ், காவி, சீஈபீஐ (CEPI), மற்றும் யுனிசெஃப்  உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், கூட்டாண்மைகள் மற்றும் தேசிய அரசாங்கங்களின் உயிர்காக்கும் பணியை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி ஆதரிப்போம்.  அதே நேரம்,  தடுப்பூசி மீதான நம்பிக்கையை வலுப்படுத்த தலைவர்கள் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அதற்காக, குவாட் நாடுகள், 75 வது உலக சுகாதார மாநாட்டில் (WHA) ‘தயக்கத்தை எதிர்த்தல்’ என்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நடத்தும்.

இப்போது உயிர்களைக் காப்பாற்றுங்கள்: குவாட் என்ற வகையில், இந்திய-பசிபிக் பகுதியில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான இன்னும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜப்பான், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மூலம், கோவிட் -19 தொடர்பான தடுப்பூசி மற்றும் சிகிச்சை மருந்துகள் உட்பட சுமார் 100 மில்லியன் டாலர் அளவிற்கு, சுகாதாரத்துறையில் முக்கிய முதலீடுகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்படும். நாங்கள் குவாட் தடுப்பூசி வல்லுநர்கள் குழுவை பயன்படுத்தி, எங்கள் அவசர உதவி தொடர்பாக அவசர ஆலோசனைக்காக தேவைக்கேற்ப கூடுவோம்.

சிறந்த சுகாதார பாதுகாப்பை மீண்டும் உருவாக்குதல்: அடுத்த பெருந்தொற்றுநோய்க்கு நம் நாடுகளையும், உலகையும் சிறப்பாகத் தயார்படுத்துவதற்கு குவாட் உறுதி பூண்டுள்ளது. இந்திய -பசிபிக் பகுதியில் கோவிட் -19 ஐ எதிர்கொள்வது  மற்றும் சுகாதார-பாதுகாப்பு முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைப்பை உருவாக்குவோம் ,   2022 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு பெருந்தொற்றுநோய் ஆயத்த மேஜை அல்லது உடற்பயிற்சியை கூட்டாக உருவாக்கி நடத்துவோம். மேலும் நமது அறிவியலை மேலும் வலுப்படுத்துவோம். 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதரவாக அறிவியல் - தொழில்நுட்ப ஒத்துழைப்பு - பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் நோயறிதல்  சோதனை முடிவுகள் 100 நாட்களுக்குள் கிடைக்கும் - இப்போதும் எதிர்காலத்திலும்.

கோவிட் -19 சிகிச்சை தலையீடுகள் மற்றும் தடுப்பூசிகள் விரைவுபடுத்துதல் (ஏசிடியைவி ACTIV) சோதனைகளுக்கான கூடுதல் தளங்களைத் தொடங்குவது போன்றவை உட்பட தற்போதைய மற்றும் எதிர்கால மருத்துவப் பரிசோதனைகளிலான  ஒத்துழைப்பும் இதில் அடங்கும். புதிய தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பதை இது துரிதப்படுத்தலாம், அதே சமயம், இப்பகுதியிலுள்ள  நாடுகள், அறிவியல் பூர்வமான சிறந்த மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ளும் தங்களது திறனை மேம்படுத்த ஆதரவளிக்கும். "உலகளாவிய பெருந்தொற்றுநோய் ரேடார்" க்கான அழைப்பை நாங்கள் ஆதரிப்போம். மேலும் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு மற்றும் எதிர்கொள்ளுதல் அமைப்பை (ஜி ஐ எஸ் ஆர் எஸ்) வலுப்படுத்தவும் விரிவாக்கவும் இணைந்து  பணியாற்றுவது  உட்பட வைரஸ் மரபணு கண்காணிப்பை மேம்படுத்துவோம்.

உள்கட்டமைப்பு

டிஜிட்டல் இணைப்பு, காலநிலை, சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு, பாலின சமத்துவ உள்கட்டமைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பு கூட்டாண்மை (பி 3 டபிள் யூ) பற்றிய ஜி 7 இன் அறிவிப்பின் படி  குவாட் நிபுணத்துவம், திறன், செல்வாக்கு ஆகியவற்றைக் கொண்டு, அப்பகுதியின்  தற்போதைய உள்கட்டமைப்பு முயற் சிகளை வலுப்படுத்தும்.  அப்பகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய வாய்ப்புகளை அடையாளம் காணும்.

 குவாட் பின்வருவனவற்றைச் செய்யும்:

குவாட் உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடங்குதல்:

உயர்தர உள்கட்டமைப்பில் குவாட் கூட்டாளிகளிடமிருந்து தற்போதுள்ள தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி, மூத்த குவாட் உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்படும். இக்குழு பிராந்திய உள்கட்டமைப்புத் தேவைகளின் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்ளவும், வெளிப்படையான, உயர்தர உள்கட்டமைப்பை வழங்க தேவையான அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கவும் முறையாகச் சந்திப்புகள் நிகழ்த்தும்.

 

இந்திய -பசிபிக் பகுதியின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு தேவையைப் பூர்த்தி செய்வதில் எங்கள் முயற்சிகள் பரஸ்பரம் உதவியாக இருப்பதையும், வலுவூட்டுவதையும்,  உறுதி செய்வதற்காக, இக்குழு பிராந்திய கூட்டாளிகள் உட்பட தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்கும்.

உயர்தர உள்கட்டமைப்பில் முன்னணி: இந்திய-பசிபிக் பகுதியில் தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் குவாட் கூட்டாளிகள் தலைவர்கள். எங்கள் ஆதரவான அணுகுமுறைகள் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொதுத்துறை மற்றும் தனியார்துறை வளங்களைப் பயன்படுத்துகின்றன.

2015 முதல், குவாட் கூட்டாளிகள் இப்பகுதியின் உள்கட்டமைப்பிற்காக $ 48 பில்லியனுக்கும் அதிகமான அதிகாரபூர்வ நிதியை வழங்கியுள்ளனர். கிராமப்புற மேம்பாடு, சுகாதார உள்கட்டமைப்பு, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி (எ.கா., காற்று, சூரிய மற்றும் நீர்), தொலைத்தொடர்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் பல திட்டங்களுக்கு ஆதரவாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், திறன் மேம்பாடு உட்பட ஆயிரக்கணக்கான திட்டங்கள் இதில் அடங்கும். எங்கள் உள்கட்டமைப்பு கூட்டாண்மை இந்த பங்களிப்புகளை பெருக்கும். இப்பகுதியில்  தனியார் துறை முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும்.

காலநிலை

சமீபத்திய காலநிலை அறிவியல் குறித்த காலநிலை மாற்ற அறிக்கையின் ஆய்வுவிவரங்கள் குறித்த ஆகஸ்ட் அரசாங்கங்களுக்கிடையிலான குழுவுடன், குவாட் நாடுகள் தீவிர அக்கறையைப் பகிர்ந்து கொள்கின்றன. 

இது காலநிலை நடவடிக்கை மீதான குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. காலநிலை நெருக்கடியை அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய நிலை நிலவுவதற்கேற்ப , குவாட் நாடுகள் தங்கள் முயற்சிகளில், காலநிலை இலட்சியத்தின் கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். இதில் தேசிய கார்பன் உமிழ்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தூய-ஆற்றல் கண்டுபிடிப்பு, பயன்பாடு  ஆகியவற்றுக்கான 2030ஆம் ஆண்டுக்கான இலக்குகளை அடைவதற்காக பணியாற்றுதல், தழுவல்,   நெகிழ்வுத்தன்மை கொள்ளுதல், தயார்நிலையில் இருத்தல் ஆகியவையும் அடங்கும்.

இந்திய-பசிபிக் பகுதியில் நமது காலநிலை இலக்குகளை அடைவதற்கு, எதிர்பார்க்கப்படும் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், வேகத்திலும் அளவிலும் டிகார்போனைஸ் செய்வதற்கும் 2020 களில் குவாட் நாடுகள் மேம்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளிக்கின்றன. இயற்கை எரிவாயு துறையில் மீத்தேன் ஒழிப்பு மற்றும் பொறுப்பான மற்றும் நெகிழ் தன்மை கொண்ட தூய-ஆற்றல் விநியோகச் சங்கிலிகளை நிறுவுதல் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது கூடுதல் முயற்சிகளில் அடங்கும்.

குவாட் பின்வருவனவற்றைச் செய்யும்:

ஒரு கிரீன்-ஷிப்பிங் நெட்வொர்க்கை உருவாக்குதல்: குவாட் நாடுகள் உலகின் மிகப்பெரிய துறைமுகங்கள் சிலவற்றைக் கொண்ட பெரிய கடல்சார் கப்பல் மையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இதன் விளைவாக, குவாட் நாடுகள் பசுமை துறைமுக உள்கட்டமைப்பை உருவாக்கவும், பெருமளவில் கப்பல் எரிபொருட்களை தூய்மைப்படுத்தவும் உதவும் வகையில் தனித்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன.

குவாட் கூட்டாளிகள், குவாட் கப்பல் போக்குவரத்து பணிக்குழுவைத் தொடங்குவதன் மூலம் தங்கள் பணியை ஒழுங்குபடுத்துவார்கள். கப்பல் மதிப்பு சங்கிலியை பசுமையாக்குவதற்கும், கார்பனற்றதாக்குவதற்கும்  அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நெட்வொர்க்கை உருவாக்க லாஸ் ஏஞ்சல்ஸ், மும்பை போர்ட் டிரஸ்ட், சிட்னி (பாடனி), யோகோஹாமா உள்ளிட்ட முன்னணி துறைமுகங்களை அழைப்பார்கள்.

குவாட் கப்பல் போக்குவரத்து பணிக்குழு பல முயற்சிகளை  மேற்கொள்ளும். 2030 ஆம் ஆண்டுக்குள் இரண்டு முதல் மூன்று குவாட் குறைந்த -எமிஷன் அல்லது ஜீரோ-எமிஷன் ஷிப்பிங் காரிடர்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தூய-ஹைட்ரஜன் கூட்டாண்மையை நிறுவுதல்: தூய-ஹைட்ரஜன் மதிப்புச் சங்கிலியின் அனைத்து கூறுகளையும் வலுப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் குவாட் ஒரு தூய -ஹைட்ரஜன் கூட்டாண்மையை அறிவிக்கும். இதற்காக, மற்ற அரங்குகளில் இருக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஹைட்ரஜன் முயற்சிகளை மேம்படுத்தப்படும். இது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தூய ஹைட்ரஜன் உற்பத்தியை திறம்பட அதிகரித்தல் (புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், கார்பன் காப்ட்சர் மற்றும் சீக்வெஸ்ட்ரேஷன் புதைபடிவ எரிபொருள்கள், மற்றும் அதை பயன்படுத்த விரும்புவோருக்கான விதத்தில் பாதுகாத்தல்), பாதுகாப்பாகவும் திறமையாகவும் கொண்டு செல்லக்கூடிய வகையிலான விநியோக உள்கட்டமைப்பைக் கண்டறிதல், மேம்படுத்துதல் , தூய ஹைட்ரஜனை இறுதிப் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் சேமித்தல், விநியோகித்தல், இந்திய-பசிபிக் பகுதியில் தூய ஹைட்ரஜனில் வர்த்தகத்தை துரிதப்படுத்த சந்தைத் தேவையை ஊக்குவித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

காலநிலை மாற்றங்களுக்கேற்ப பின்பற்றுதல், நெகிழ்வுத்தன்மை கொள்ளுதல், ஆயத்தத்தை மேம்படுத்துதல்:

முக்கியமான காலநிலை தகவல் பகிர்வு மற்றும் பேரிடருக்கேற்ப நெகிழ்தன்மையுடன் மாற்றிக் கொள்ளக்கூடிய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான இந்திய-பசிபிக் பகுதியின்  தன்மையை அதிகரிக்க குவாட் நாடுகள் உறுதிபூண்டுள்ளன. குவாட் நாடுகள் ஒரு காலநிலை மற்றும் தகவல் சேவை பணிக்குழுவைக் கூட்டி, சிறிய தீவுகள் வளரும்  நாடுகளில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் பேரிடர் மீட்பு உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு மூலம் ஒரு புதிய தொழில்நுட்ப வசதியை உருவாக்கும்.

மக்களிடையேயான பரிமாற்றம் மற்றும் கல்வி

இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முன்னோடிகள். அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே உறவுகளை வளர்க்க, குவாட் கூட்டாளிகள் குவாட் பெல்லோஷிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். ஒவ்வொரு குவாட் நாட்டிலிருந்தும் தலைவர்களைக் கொண்ட, அரசு சாரா பணிக்குழுவின்  ஆலோசனையுடன்  ஒரு பரோபகார முன்முயற்சியால் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் இதுபோன்ற  முதல்-வகையான ஸ்காலர்ஷிப் திட்டம் இதுவே. . 

இந்தத் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற மிகச்சிறந்த அமெரிக்க, ஜப்பானிய, ஆஸ்திரேலிய, இந்திய மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்களை அமெரிக்காவில் படிக்க வைக்கும். இந்தப் புதிய ஃபெலோஷிப் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வலையமைப்பை உருவாக்கி, அவர்களின் சொந்த நாடுகள் மற்றும் குவாட் நாடுகளில் தனியார், பொதுத்துறை மற்றும் கல்வித் துறைகளில் புதுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் ஒவ்வொரு குவாட் நாட்டிற்கும் ஒருங்கிணைந்த அளவிலான பயணங்கள் மேற்கொள்ளுதல்;  ஒவ்வொரு நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் வலுவான தொடர்பு ஆகியவற்றின் மூலம் குவாட் அறிஞர்களிடையே ஒருவருக்கொருவர் தத்தமது  சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களின் ஒரு அடிப்படைப் புரிதலை உருவாக்கும்.

குவாட் பின்வருவனவற்றைச் செய்யும்:

குவாட் பெல்லோஷிப்பைத் தொடங்குதல்: ஃபெலோஷிப் மூலம், அமெரிக்காவில் உள்ள முன்னணி எஸ்டிஇ எம் STEM பட்டதாரி பல்கலைக்கழகங்களில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற, ஒவ்வொரு குவாட் நாட்டிலிருந்தும் 25 மாணவர்களுக்கு - ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு  ஸ்பான்சர்ஷிப் வழங்கப்படும்.

இது உலகின் முன்னணி பட்டதாரி பெல்லோஷிப்களில் ஒன்றாகச் செயல்படும்; ஆனால் தனித்துவம் வாய்ந்த தாக இருக்கும். குவாட் பெல்லோஷிப் STEM இல் கவனம் செலுத்தும். ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் மிகச்சிறந்த அறிவாற்றலை ஒன்றிணைக்கும். ஸ்க்மிட் ஃபியூச்சர்ஸ், ஒரு பரோபகார முயற்சியாக, இத்திட்டத்தை செயல்படுத்தும்.  ஒவ்வொரு குவாட் நாட்டிலிருந்தும் கல்வி, வெளியுறவுக் கொள்கை மற்றும் தனியார் துறைத் தலைவர்களை உள்ளடக்கிய அரசு சாரா பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்த ஃபெலோஷிப் திட்டம் செயல்படும்.  பெல்லோஷிப் திட்டத்தின் நிறுவன ஆதரவாளர்களுள் ஆக்சென்ச்சர், பிளாக்ஸ்டோன், போயிங், கூகுள், மாஸ்டர்கார்டு மற்றும் வெஸ்டர்ன் டிஜிட்டல் ஆகியவையும் அடங்கும். பெல்லோஷிப்பை ஆதரிக்க ஆர்வமுள்ள கூடுதல் ஸ்பான்சர்களை இத்திட்டம் வரவேற்கிறது.

முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்

குவாட் தலைவர்கள், ஒரு வெளிப்படையான, அணுகக்கூடிய, பாதுகாப்பான, தொழில்நுட்பச்சூழல் அமைப்பை வளர்க்க இணைந்து பணிபுரிய உறுதிபூண்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் ஒரு புதிய, முக்கியமான, வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பணிக்குழுவை நிறுவியதிலிருந்து, நாங்கள் தொழில்நுட்ப தரநிலைகள், 5 ஜி பல்வகைப்படுத்தல், பயன்பாடு, புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிதல் ( ஹரைசான் ஸ்கேனிங்), தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் ஆகிய நான்கு முயற்சிகளைச் சுற்றி எங்கள் பணிகளை மேற்கொள்கிறோம்.

இன்று, குவாட் தலைவர்கள் தொழில்நுட்பம் பற்றிய கொள்கைகளின் அறிக்கையையும், நமது பொதுவான ஜனநாயக மதிப்புகள் மற்றும் உலகளாவிய மனித உரிமைகளுக்கான மதிப்பு  ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை முன்னேற்றும். குவாட் அமைப்பின் புதிய முயற்சிகளையும் வெளியிடுகின்றனர். குவாட் கோட்பாடுகளின் அறிக்கையை வெளியிடுதல்: பல மாத ஒத்துழைப்புக்குப் பிறகு, குவாட் தொழில்நுட்ப வடிவமைப்பு, வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் பயன்பாடு குறித்த கொள்கைகளின் அறிக்கையை வெளியிடும், இது இப்பகுதியை மட்டுமல்லாமல், உலகையும் பொறுப்பான, வெளிப்படையான, உயர் தர புதுமைகளை நோக்கி வழிநடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தொழில்நுட்ப தரநிலைகள் தொடர்புக் குழுக்களை நிறுவுதல்: தரநிலை-மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தரப்படுத்தலுக்கு முந்தைய அடித்தள ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மேம்பட்ட தகவல்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த தொடர்புக் குழுக்களை குவாட் நிறுவும்.

செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி  முன்முயற்சியைத் தொடங்குதல்: திறனை வரைபடமாக்குதல், பாதிப்புகளைக் கண்டறிதல், செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி  மற்றும் அவற்றின் முக்கிய கூறுகளுக்கு வலுவூட்டுதல்,ஆகியவற்றுக்காக குவாட் கூட்டாளிகள் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்குவார்கள். விநியோகச் சங்கிலி பாதுகாப்பைமேம்படுத்துதல்.

உலக அளவில், டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு அத்தியாவசியமான பாதுகாப்பான தொழில்நுட்பங்களை உருவாக்கும் மாறுபட்ட மற்றும் போட்டிச் சந்தையை ஆதரிக்க குவாட் கூட்டாளிகளுக்கு  இந்த முயற்சி உதவும்.

5 ஜி வரிசைப்படுத்தல் மற்றும் பல்வகைப்படுத்தலை ஆதரித்தல்: மாறுபட்ட, நெகிழ்தன்மையுடன் கூடிய, பாதுகாப்பான தொலைத்தகவல்தொடர்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், குவாட் அரசாங்கங்களின் முக்கிய பங்கை ஆதரிப்பதற்காக, குவாட் RAN பயன்பாடு மற்றும் செயல்பாடு குறித்த ஒரு டிராக் 1.5 தொழில் உரையாடலைத் தொடங்கியுள்ளது. இது ஆர் ஏ என்கொள்கைக் கூட்டணியின் ஒருங்கிணைப்புடன் நடைபெறுகிறது. சோதனை மற்றும் சோதனை வசதிகள் தொடர்பான முயற்சிகள் உட்பட 5G பல்வகைப்படுத்தலுக்கான சூழலை இணைந்து செயல்படுத்த குவாட் கூட்டு உதவும்.

உயிரி தொழில் நுட்ப ஸ்கேனிங்கை கண்காணித்தல்: செயற்கை உயிரியல், மரபணு வரிசைமுறை மற்றும் உயிரி உற்பத்தி உள்ளிட்ட மேம்பட்ட உயிரி தொழில்நுட்பங்களுடன் தொடங்கி முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் போக்குகளை குவாட் கண்காணிக்கும். செயல்பாட்டில், தொடர்புடைய அம்சங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை நாங்கள் அடையாளம் காண்போம்.

சைபர் பாதுகாப்பு

சைபர் பாதுகாப்பில் எங்கள் நான்கு நாடுகளிடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளைக் கொண்டு, நமது நாடுகளின் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, முக்கியமான உள்கட்டமைப்பு நெகிழ்தன்மையை அதிகரிக்க குவாட் புதிய முயற்சிகளைத் தொடங்கும்.

குவாட் பின்வருவனவற்றைச் செய்யும்:

ஒரு குவாட் சீனியர் சைபர் குழுவைத் தொடங்குதல்: பகிரப்பட்ட இணையத் தரங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்படுத்துதல்; பாதுகாப்பான மென்பொருளை உருவாக்குதல்; தொழிலாளர் மற்றும் திறமையை வளர்த்தல்; பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் இணைய பாதுகாப்பு வளர்ச்சியைப் பெருக்குதல்.உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான பணிகளை முன்னெடுப்பதற்காக தலைவர்-நிலை வல்லுநர்கள் தொடர்ந்து சந்திப்பார்கள்.

விண்வெளி

விண்வெளி உட்பட உலகின் அறிவியல் தலைவர்களாக, குவாட் நாடுகள் உள்ளன. இன்று, குவாட் முதன்முறையாக விண்வெளி ஒத்துழைப்பை ஒரு புதிய பணிக்குழுவுடன் தொடங்கும். குறிப்பாக, எங்கள் கூட்டாண்மை காலநிலை மாற்றம், பேரிடர் தயார்நிலை மற்றும் பகிரப்பட்ட களங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ளுதல், ஆகியவற்றைக்கண்காணித்தல் மற்றும் கவனம் செலுத்துதல் குறித்த செயற்கைக்கோள் தரவைப் பரிமாறிக்கொள்ளும்.

குவாட் பின்வருவனவற்றைச் செய்யும்:

பூமியையும் அதன் நீரையும் பாதுகாக்க சேட்டிலைட் தரவைப் பகிர்தல்: நமது நான்கு நாடுகளும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் தரவு, காலநிலை மாற்ற அபாயங்கள் குறித்த பகுப்பாய்வுகள், பெருங்கடல்கள் மற்றும் கடல் வளங்களின் தொடர் பயன்பாடு பற்றிய பகுப்பாய்வுகளை பரிமாறிக்கொள்ள விவாதங்களைத் தொடங்கும்.

இந்தத் தரவைப் பகிர்ந்து கொள்வது குவாட் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்திற்கேற்பச் சிறப்பாக மாற்றியமைக்க உதவும். குவாட் காலநிலைப் பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து, கடுமையான காலநிலை அபாயத்தில் இருக்கும் மற்ற இந்திய-பசிபிக் நாடுகளில்நிலையான தொடர் வளர்ச்சிக்கான திறனை வளர்க்க உதவும்.

அபாயங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள விண்வெளி தொடர்பான களங்களில் மற்ற இந்திய-பசிபிக் நாடுகளில் உள்ள திறனை வளர்க்க உதவும். விண்வெளி பயன்பாடுகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தொழில்நுட்பங்களை ஆதரிக்கவும், வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் குவாட் நாடுகள் இணைந்து செயல்படும்.

விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசித்தல்: விண்வெளிச் சூழலின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், கோட்பாடுகள் மற்றும் விதிகள் குறித்தும் நாங்கள் ஆலோசனை செய்வோம்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s space programme, a people’s space journey

Media Coverage

India’s space programme, a people’s space journey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Congratulates Shri S. Suresh Kumar Ji on Inspiring Cycling Feat
January 01, 2026

āThe Prime Minister, Shri Narendra Modi, today lauded the remarkable achievement of Shri S. Suresh Kumar Ji, who successfully cycled from Bengaluru to Kanniyakumari.

Shri Modi noted that this feat is not only commendable and inspiring but also a testament to Shri Suresh Kumar Ji’s grit and unyielding spirit, especially as it was accomplished after overcoming significant health setbacks.

PM emphasized that such endeavors carry an important message of fitness and determination for society at large.

The Prime Minister personally spoke to Shri Suresh Kumar Ji and congratulated him for his effort, appreciating the courage and perseverance that made this journey possible.

In separate posts on X, Shri Modi wrote:

“Shri S. Suresh Kumar Ji’s feat of cycling from Bengaluru to Kanniyakumari is commendable and inspiring. The fact that it was done after he overcame health setbacks highlights his grit and unyielding spirit. It also gives an important message of fitness.

Spoke to him and congratulated him for effort.

@nimmasuresh

https://timesofindia.indiatimes.com/city/bengaluru/age-illness-no-bar-at-70-bengaluru-legislator-pedals-702km-to-kanyakumari-in-five-days/articleshow/126258645.cms#

“ಬೆಂಗಳೂರಿನಿಂದ ಕನ್ಯಾಕುಮಾರಿಯವರೆಗೆ ಸೈಕಲ್ ಸವಾರಿ ಕೈಗೊಂಡ ಶ್ರೀ ಎಸ್. ಸುರೇಶ್ ಕುಮಾರ್ ಅವರ ಸಾಧನೆ ಶ್ಲಾಘನೀಯ ಮತ್ತು ಸ್ಫೂರ್ತಿದಾಯಕವಾಗಿದೆ. ಆರೋಗ್ಯದ ಹಿನ್ನಡೆಗಳನ್ನು ಮೆಟ್ಟಿ ನಿಂತು ಅವರು ಈ ಸಾಧನೆ ಮಾಡಿರುವುದು ಅವರ ದೃಢ ನಿರ್ಧಾರ ಮತ್ತು ಅಚಲ ಮನೋಭಾವವನ್ನು ಎತ್ತಿ ತೋರಿಸುತ್ತದೆ. ಇದು ಫಿಟ್ನೆಸ್ ಕುರಿತು ಪ್ರಮುಖ ಸಂದೇಶವನ್ನೂ ನೀಡುತ್ತದೆ.

ಅವರೊಂದಿಗೆ ಮಾತನಾಡಿ, ಅವರ ಈ ಪ್ರಯತ್ನಕ್ಕೆ ಅಭಿನಂದನೆ ಸಲ್ಲಿಸಿದೆ.

@nimmasuresh

https://timesofindia.indiatimes.com/city/bengaluru/age-illness-no-bar-at-70-bengaluru-legislator-pedals-702km-to-kanyakumari-in-five-days/articleshow/126258645.cms#