போஜ்பூரின் சிறுதானிய திருவிழா மக்களிடையே “ஸ்ரீ அன்னா” இயக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்கள் தங்களது உணவில் இதனை சேர்த்துக் கொள்ள இது ஊக்குவிக்கும் என்று திரு.மோடி மேலும் கூறியுள்ளார். பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் இரண்டு நாள் சிறுதானிய திருவிழா பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை நடைபெற்றது.
மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு.பசுபதி குமார் பராஸ் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட பதிவு வருமாறு:
“போஜ்பூரில் சிறுதானிய திருவிழா மக்களிடையே “ஸ்ரீ அன்னா” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களது உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும்”.
भोजपुर का मिलेट महोत्सव श्री अन्न के प्रति लोगों की जागरूकता तो बढ़ाएगा ही, साथ ही इसे खानपान में भी शामिल करने के लिए प्रेरित करेगा।https://t.co/7ow0ArjgIY https://t.co/KDJU890cPz
— Narendra Modi (@narendramodi) March 2, 2023


