அமராவதி விமான நிலையம் திறக்கப்பட்டது, மகாராஷ்டிராவுக்கு, குறிப்பாக விதர்பா பகுதிக்கு ஒரு நல்ல செய்தி என்று பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமராவதியில் செயல்படும் விமான நிலையம், வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
"மகாராஷ்டிராவுக்கு, குறிப்பாக விதர்பா பிராந்தியத்திற்கு இது ஒரு நற்செய்தி. அமராவதியில் செயல்படும் விமான நிலையம் வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்.”
Great news for Maharashtra, especially Vidarbha region. An active airport in Amravati will boost commerce and connectivity. https://t.co/WAq9PzCTZW
— Narendra Modi (@narendramodi) April 16, 2025


