"தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் புதிய பணியாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்"
தற்போதைய அரசு பாடத்திட்டத்தில் பிராந்திய மொழி புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
"நேர்மறையான சிந்தனை, சரியான நோக்கம் மற்றும் முழு ஒருங்கிணைப்புடன் முடிவுகளை எடுக்கும்போது, முழு சூழலும் நேர்மறையுடன் முழுமையடைகிறது"
"அமைப்பில் இருந்து தேவையற்ற செலவினங்களை தவிர்த்ததன் விளைவாக ஏழைகளின் நலனுக்கான செலவினங்களை அதிகரிக்க அரசுக்கு உதவியது"
"21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப விஸ்வகர்மாக்களின் பாரம்பரிய திறன்களை ஏற்படுத்த பிரதமர் விஸ்வகர்மா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது."

வணக்கம்,
இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் மிக முக்கியமான பொறுப்புடன் இன்று நீங்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். இந்த ஆண்டு, நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பு எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறித்து செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து விரிவாக பேசினேன். இந்தியாவின் எதிர்கால சந்ததியை வடிவமைத்து, அவர்களை நவீனமாக வடிவமைத்து, அவர்களுக்கு ஒரு புதிய வழியைக்காட்ட வேண்டியது உங்கள் அனைவரின் கடமையாகும். மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள 5500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசையும் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் நீங்கள் அனைவரும் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்றும் திசையில் தேசிய கல்விக் கொள்கை பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. இதன் கீழ், பாரம்பரிய அறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகிய இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்விக்கு புதிய பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் கல்வி கற்பிப்பதில் மற்றொரு பாராட்டத்தக்க பணி செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு, தாய்மொழியில் கல்வி கற்பிக்க விடாமல், பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இது சமூக நீதிக்கு எதிரானது. இப்போது நமது அரசு இந்த அநீதியை ஒழித்துள்ளது. இப்போது பாடத்திட்டத்தில், பிராந்திய மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுவே நாட்டின் கல்வி முறையில் பெரிய சீர்திருத்தத்திற்கு அடிப்படையாக அமையும்.
நண்பர்களே,
நேர்மறையான மனநிலை, சரியான எண்ணம் மற்றும் முழு அர்ப்பணிப்புடன் முடிவுகளை எடுக்கும்போது, முழு சூழலும் நேர்மறை எண்ணத்தால் முழுமையாகிறது. அமிர்தகாலத்தின் முதல் ஆண்டில் இரண்டு முக்கிய நேர்மறையான செய்திகளைப் பார்த்தோம். இவை நாட்டில் குறைந்து வரும் வறுமை மற்றும் அதிகரித்து வரும் செழிப்பு பற்றி நமக்குத் தெரிவிக்கின்றன. நித்தி ஆயோக்கின் அறிக்கையின்படி, வெறும் ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே சென்றுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு மற்றொரு அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் எண்ணிக்கையும் மிக முக்கியமான ஒன்றைக் குறிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருமானம் அதிகரித்துள்ளது. இந்திய வருமான வரித்தாக்கலின் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் சுமார் ரூ .4 லட்சமாக இருந்த சராசரி வருமானம் 2023 ஆம் ஆண்டில் ரூ .13 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில், குறைந்த வருவாய் பிரிவினரில் இருந்து, உயர் வருவாய் பிரிவினருக்கு மாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் உற்சாகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துத் துறையும் வலுவடைவதையும், பல புதிய வேலை வாய்ப்புகள் வளர்ச்சியடைந்து வருவதையும் உறுதியளிக்கிறது.
நண்பர்களே,
வருமான வரி தாக்கல் குறித்த புதிய புள்ளிவிவரங்களில் மேலும் ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, தங்கள் அரசு மீது நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் தங்கள் வரியை நேர்மையாக செலுத்த அதிக அளவில் முன்வருகின்றனர். தங்கள் வரியின் ஒவ்வொரு பைசாவும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு உலகில் 10-வது இடத்தில் இருந்த பொருளாதாரம் இன்று 5-வது இடத்தை எட்டியுள்ளது. ஊழல்கள் நிறைந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தை நாட்டு மக்கள் மறக்க முடியாது. ஏழைகளின் உரிமைகள், பணம் அவர்களைச் சென்றடைவதற்கு முன்பே பறிக்கப்பட்டது. இன்று, ஏழைகளுக்கான பணம் அனைத்தும் அவர்களின் கணக்குகளுக்கு நேரடியாக வந்து சேர்ந்துள்ளது.
நண்பர்களே,

அமைப்பில் ஏற்பட்ட தேவையற்ற செலவுகளை தவிர்த்ததன் மூலம் அரசு இப்போது முன்பை விட ஏழைகளின் நலனுக்காக அதிக செலவு செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. இவ்வளவு பெரிய அளவில் செய்யப்பட்ட முதலீடு நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதற்கு உதாரணம்தான் பொது சேவை மையங்கள். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை கிராமங்களில் 5 லட்சம் புதிய பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொது சேவை மையமும் இன்று பலருக்கு வேலை வழங்கி வருகிறது. எனவே, கிராமங்கள் மற்றும் ஏழைகளின் நலன் உறுதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.
நண்பர்களே,
கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் முடிவுகளுடன் இன்று நாட்டில் பல நிதி முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆகஸ்ட் 15 அன்று, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தையும் நான் அறிவித்துள்ளேன். இந்தத் திட்டமும் இந்த தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாகும். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்  21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நமது விஸ்வகர்மா நண்பர்களின் பாரம்பரிய திறன்களை மேம்படச்செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 18 வகையான திறன்களுடன் தொடர்புடைய குடும்பங்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்படும்; மேலும் அவர்கள் பயனடைவார்கள். இது சமூகத்தின் அந்த பிரிவினருக்கு பயனளிக்கும், அவர்களின் முக்கியத்துவம் விவாதிக்கப்பட்டது, கடந்த காலத்தில் ஆனால் அவர்களின் நிலையை மேம்படுத்த ஒருபோதும் ஒருங்கிணைந்த முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், பயிற்சியுடன், பயனாளிகளுக்கு நவீன கருவிகள் வாங்க உறுதி ரொக்கச்சீட்டுகள் வழங்கப்படும். அதாவது, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

நண்பர்களே,

இன்று ஆசிரியர்களாக மாறியுள்ள இந்த அற்புதமான மனிதர்களுக்கு நான் மற்றும் ஒரு விவரத்தை கூற விரும்புகின்றேன். நீங்கள் அனைவரும் கடின உழைப்பால் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு உதவ, அரசு ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி என்ற ஆன்லைன் கற்றல் தளத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வசதியை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்போது உங்கள் கனவுகளை நிறைவேற்ற உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இந்தப் புதிய வெற்றிக்கு, இந்தப் புதிய பயணத்திற்கு உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Nandan Nilekani to S Somnath: Meet the experts on Centre's exam reform task-force

Media Coverage

Nandan Nilekani to S Somnath: Meet the experts on Centre's exam reform task-force
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Shilpa Kanchugarakoppalu Shyla on winning Bronze in Women’s Shot Put F57 at Commonwealth Games 2026
July 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has congratulated Shilpa Kanchugarakoppalu Shyla on winning the Bronze medal in the Women’s Shot Put F57 Final at the Glasgow Commonwealth Games 2026.

The Prime Minister said that Shilpa’s personal best throw made the achievement even more remarkable.

Shri Modi congratulated her on the accomplishment.

The Prime Minister wrote on X;

“A brilliant performance by Shilpa Kanchugarakoppalu Shyla at the Commonwealth Games 2026!

Congratulations to Shilpa for having won the Bronze Medal in the Women's Shot Put F57 Final and that too with a personal best throw. This is indeed a remarkable accomplishment.

#CWG2026”