“This is a moment of capability of the 140 crore heartbeats and the confidence of new energy of India”
“In the first light of ‘Amrit Kaal’, this is ‘Amrit Varsha’ of success”
“India has reached the South Pole of the Moon where no country in the world could reach to date with the dedication and talent of our scientists”
“Time is not far when the children would say ‘Chanda Mama ek tour ke’ i.e. the moon is only a tour away”
“Our moon mission is based on human-centric approach. Therefore, this success belongs to all of humanity”
“We'll test the limits of our solar system, and work to realize the infinite possibilities of the universe for humans”
“India is proving again and again that the sky is not the limit”

எனதருமை நண்பர்களே,

இப்படி ஒரு வரலாறு நம் கண்முன்னே படைக்கப்படுவதைப் பார்க்கும்போது, வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுகிறது. இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் ஒரு தேசத்தின் வாழ்வின் நித்திய உணர்வாக மாறுகின்றன. இந்தத் தருணம் மறக்க முடியாதது. இந்தத் தருணம் முன்னெப்போதும் இல்லாதது. இந்தத் தருணம் வளர்ந்த இந்தியாவின் வெற்றி முழக்கம். இந்தத் தருணம் புதிய இந்தியாவின் வெற்றி. இந்த தருணம் கஷ்டங்களின் கடலை கடப்பது பற்றியது. இந்தத் தருணம் வெற்றிப் பாதையில் நடப்பது பற்றியது. இந்தத் தருணம் 1.4 பில்லியன் இதயத் துடிப்புகளின் திறனைக் கொண்டுள்ளது. இந்தத் தருணம் இந்தியாவில் புதிய ஆற்றலையும், புதிய நம்பிக்கையையும், புதிய உணர்வையும் குறிக்கிறது. இந்தத் தருணம் இந்தியாவின் உயரிய தலைவிதியின் அறைகூவல். 'அமிர்த கால' விடியலில் வெற்றியின் முதல் வெளிச்சம் இந்த ஆண்டு பொழிந்துள்ளது. நாம் பூமியில் ஒரு உறுதிமொழி எடுத்தோம், அதை சந்திரனில் நிறைவேற்றினோம். நமது அறிவியல் சகாக்களும், "இந்தியா இப்போது சந்திரனில் உள்ளது" என்று கூறினார்கள். இன்று, விண்வெளியில் புதிய இந்தியாவின் புதிய பறப்பை நாம் கண்டோம்.

நண்பர்களே,

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் தற்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ளேன். இருப்பினும், ஒவ்வொரு நாட்டு மக்களையும் போலவே, எனது இதயமும் சந்திரயான் திட்டத்தில் கவனம் செலுத்தியது. ஒரு புதிய வரலாறு விரிவடைவதால், ஒவ்வொரு இந்தியரும் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. எனது இதயத்திலிருந்து, எனது சக நாட்டு மக்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களுடன் நான் உற்சாகத்துடன் இணைந்துள்ளேன். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக அயராது உழைத்த சந்திரயான் குழு, இஸ்ரோ மற்றும் நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த இந்த அற்புதமான தருணத்திற்காக 140 கோடி நாட்டு மக்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

என் குடும்ப உறுப்பினர்களே,

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் திறமையால், உலகில் வேறு எந்த நாடும் அடையாத நிலவின் தென் துருவத்தை இந்தியா எட்டியுள்ளது. இன்று முதல் சந்திரன் தொடர்பான கட்டுக்கதைகள் மாறும், கதையாடல்கள் மாறும், புதிய தலைமுறைக்கான பழமொழிகள் கூட மாறும். இந்தியாவில், பூமியை எங்கள் தாய் என்றும், சந்திரனை எங்கள் 'மாமா' (தாய்மாமன்) என்றும் குறிப்பிடுகிறோம். "சந்தா மாமா வெகு தொலைவில் இருக்கிறார்" என்று சொல்வார்கள். "சந்தா மாமா ஒரு 'சுற்றுலா' தூரத்தில் இருக்கிறார்" என்று குழந்தைகள் சொல்லும் நாள் வரும்.

நண்பர்களே,

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், உலக மக்கள், ஒவ்வொரு நாடு மற்றும் பிராந்தியத்தின் மக்கள் அனைவருக்கும் நான் உரையாற்ற விரும்புகிறேன். இந்தியாவின் வெற்றிகரமான நிலவுப் பயணம் இந்தியா மட்டும் அல்ல. இந்தியாவின் ஜி-20 மாநாட்டை உலகமே உற்று நோக்கும் ஆண்டு இது. 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற எங்கள் அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மனித மைய அணுகுமுறை உலகளவில் வரவேற்கப்பட்டுள்ளது. நமது நிலவுப் பயணமும் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் முழுமைக்கும் உரியது. மேலும் இது எதிர்காலத்தில் மற்ற நாடுகளின் நிலவு பயணங்களுக்கு உதவும். உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் உள்பட உலகின் அனைத்து நாடுகளும் இத்தகைய சாதனைகளைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் சந்திரனுக்காகவும் அதற்கு அப்பாலும் ஆசைப்படலாம்.

என் குடும்ப உறுப்பினர்களே,

சந்திரயான் திட்டத்தின் இந்த சாதனை நிலவின் சுற்றுப்பாதைக்கு அப்பால் இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும். நமது சூரிய மண்டலத்தின் வரம்புகளை சோதித்து, மனிதகுலத்திற்கான பிரபஞ்சத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர தொடர்ந்து பணியாற்றுவோம். எதிர்காலத்திற்காக பல பெரிய மற்றும் லட்சிய இலக்குகளை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சூரியனை ஆழமாக ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விரைவில் 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. அதைத் தொடர்ந்து, வீனஸும் இஸ்ரோவின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம், நாடு தனது முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது. வானம் எல்லை இல்லை என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

நண்பர்களே,

அறிவியலும், தொழில்நுட்பமும் நமது தேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்தின் அஸ்திவாரம். எனவே, இந்த நாளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல இந்த நாள் நம் அனைவரையும் ஊக்குவிக்கும். நமது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பாதையை இந்த நாள் நமக்குக் காட்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதன் மூலம் வெற்றி எவ்வாறு அடையப்படுகிறது என்பதை இந்த நாள் குறிக்கிறது. மீண்டும் ஒரு முறை, நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் எதிர்கால பயணங்களுக்கு வாழ்த்துகள்! மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Apple overshoots iPhone production target under PLI scheme by 80%

Media Coverage

Apple overshoots iPhone production target under PLI scheme by 80%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi shares a Sanskrit Subhashitam highlights the significance of bravery and courage in influencing the world
March 18, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the importance of valor and the profound impact a brave individual can have on the entire world.

The Prime Minister remarked that bravery and prowess are the capital through which every difficulty can be faced. Shri Modi affirmed that the courage and self-confidence of India's youth serve as an inspiration in this regard.

The Prime Minister wrote on X;

"वीरता और पराक्रम वो पूंजी है, जिससे हर कठिनाई का सामना किया जा सकता है। भारत के युवाओं का साहस और आत्मविश्वास इसी की प्रेरणा देता है।

एकेनापि हि शूरेण पादाक्रान्तं महीतलम्।
क्रियते भास्करेणेव स्फारस्फुरिततेजसा ॥"

Just as the sun lights the whole earth with its bright rays, in the same way a brave person can influence the whole world with his courage.