NCC provides a platform to strengthen the spirit of discipline, determination and devotion towards the nation: PM Modi
India has decided that it will confront the challenges ahead and deal with them: PM Modi
A young India will play key role in fourth industrial revolution: PM

தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையினரின் பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

இந்த பேரணியையொட்டி நடத்தப்பட்ட தேசிய மாணவர் படையின் பல்வேறு பிரிவினர் மற்றும் பிற நட்பு மற்றும் அண்டை நாடுகளின் மாணவர் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன், சாகச விளையாட்டுகள், இசை மற்றும் செயல்திறன் கலைகளையும், தேசிய மாணவர் படையினர் பிரதமர் முன்பாக செய்து காட்டினர்.  அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட தேசிய மாணவர் படையினருக்கு விருதுகளையும் பிரதமர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இளைஞர்கள் நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கான ஒழுக்க உணர்வு, குறிக்கோள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகளை வலுப்படுத்த தேசிய மாணவர் படை ஒருசிறந்த அமைப்பாக திகழ்கிறது என்றார்.  இதுபோன்ற மாண்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65%-க்கு மேல் 35 வயதிற்கு கீழே உள்ளவர்களைக் கொண்ட உலகின் இளமையான நாடுகளுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “இந்தக் கருத்து நமக்கு பெருமிதம் அளித்தாலும், இளமையாக சிந்திப்பது நமது பொறுப்பாகும்” என்றும் அவர் கூறினார்.  எந்தவொரு பிரச்சினைக்கும் காலந்தாழ்த்தாமல் உடனடித் தீர்வு காண வேண்டும் என்பதே இதன்பொருளாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  “இதுதான் ஒரு இளம் மனதின் ஏக்கம் என்பதோடு, இதுவே இளம் இந்தியா” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“கடந்த கால சவால்களை எதிர்கொள்ளும் போது, நிகழ்கால தேவைகளைக் கருத்தில் கொள்வதோடு, நமது எதிர்கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் நாம் பாடுபட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.  இந்தியா தற்போது இளம் துடிப்புமிக்க பேரார்வம் மற்றும் மனநிலையுடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. “இந்தியா தற்போது இளமையான மனநிலை மற்றும் உள்ளத்தை கொண்டிருப்பதால், துல்லிய தாக்குதல், விமானத் தாக்குதல் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது நேரடித் தாக்குதல்களை நடத்த முடிகிறது”.  யாரும் பின்தங்கிவிடாத வகையில், அனைவரையும் அரவணைத்து முன்னேற்றம் காண, இந்த இளமையான மனநிலை விரும்புவதாக அவர் கூறினார்.  “இந்த உணர்வோடுதான் நாம் போடோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே ஒப்பந்தம் கையெழுத்தானது”.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளோடு, இந்தப் பிராந்தியத்துடன் தொடர்புடைய அனைத்துத்தரப்பினருடனும் மிகவும் வெளிப்படையான மனநிலையுடனும், வெளிப்படையான இதயத்துடனும் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியிருக்கிறோம்.  இதன் விளைவாகத்தான் இன்று போடோ ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  “இதுவே இளம் இந்தியாவின் சிந்தனையாகும்.  அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, அனைவரையும் வளர்ச்சி அடையச் செய்வதோடு ஒவ்வொரு நம்பிக்கையையும் பெறுவதன் மூலம்  நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Startup India recognises 2.07 lakh ventures, 21.9 lakh jobs created

Media Coverage

Startup India recognises 2.07 lakh ventures, 21.9 lakh jobs created
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister inaugurates the first Emergency Landing Facility (ELF) of the northeast in Dibrugarh, Assam
February 14, 2026

The Prime Minister, Shri Narendra Modi inaugurated the first Emergency Landing Facility (ELF) of the northeast in Dibrugarh, Assam. Shri Modi stated that it is a matter of immense pride that the Northeast gets an Emergency Landing Facility, and is of great importance from a strategic point of view and during times of natural disasters.

The Prime Minister posted on X:

"It is a matter of immense pride that the Northeast gets an Emergency Landing Facility. From a strategic point of view and during times of natural disasters, this facility is of great importance."

"উত্তৰ-পূৰ্বাঞ্চলে ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি লাভ কৰাটো অপৰিসীম গৌৰৱৰ বিষয়। কৌশলগত দৃষ্টিকোণৰ পৰা আৰু প্ৰাকৃতিক দুৰ্যোগৰ সময়ত এই সুবিধাৰ গুৰুত্ব অতিশয় বেছি।"