தனிப்பட்ட, சமூக, தேசிய கடமைகளை நிறைவேற்றுவதில் இலட்சியமிக்க உண்மையான சிறந்த தனிநபரின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
மற்றொருவருடைய பணிகளில் முழுமனதுடன் தன்னை அர்பணித்து, தனது சுயகடமைகளை விரைவாகவும், திறன்மிக்கதாகவும் நிறைவு செய்து, நண்பர்களுக்காக தன்னலமின்றி பணிகளை மேற்கொண்டு, தேசிய கடமைகளை நிறைவேற்றுவதில் தனது முழு வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்துபவரே உண்மையில் சிறந்தவராவார்.
परकार्येषु युक्तात्मा स्वकार्ये क्षिप्रसाधनम्।
— Narendra Modi (@narendramodi) July 22, 2026
सुहृत्कार्येषु निर्वृत्ती राजकार्येषु विक्रमः ।। pic.twitter.com/dqKMM8ACdw


