மேதகு தலைவர்களே,

இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உங்களை மனதார வரவேற்கிறோம்.

எனது சகோதரரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு நெருக்கடியான வேலைகளுக்கு மத்தியிலும், அவர் இங்கு வந்து, எங்களுடன் சில தருணங்களை செலவழித்து, அவரது ஆதரவைத் தருவது ஒரு பெரிய விஷயம்.

ஐக்கிய அரபு  எமிரேட்ஸுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த முயற்சியில் இணைந்த ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!

கார்பன் கடனின் நோக்கம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன், மேலும் இந்தத் தத்துவம் ஒரு வகையில் வணிகக் கூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கார்பன் கடன் முறையில் சமூகப் பொறுப்புணர்வின் பற்றாக்குறையை நான் கண்டிருக்கிறேன். புதிய தத்துவத்தை நாம் முழுமையான முறையில் வலியுறுத்த வேண்டும், இதுவே பசுமைக் கடனுக்கான அடித்தளமாகும்.

பொதுவாக மனித வாழ்க்கையில் நாம் மூன்று விதமான விஷயங்களை அனுபவிக்கிறோம். நம் இயல்பான தொடர்புகளில் கூட, மனிதர்களைப் பார்க்கும்போது, நம் இயல்பிற்கு  மூன்று விஷயங்கள் முன்னுக்கு வருகின்றன.

ஒன்று இயற்கை,

இரண்டாவது திரிபு,

மூன்றாவதாக கலாச்சாரம்.

சுற்றுச்சூழலுக்கு நான் தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சொல்லும் இயல்பான போக்கு உள்ளது.

உலகிற்கு ஏற்படும் விளைவுகள் அல்லது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைப் பொருட்படுத்தாமல், இழப்புகளின் அளவைப் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட நன்மை மேலோங்க வேண்டும் என்று ஒரு தனிநபர் நம்புவது, ஒரு சிதைவு, அழிவு மனப்பான்மை ஆகும். இது ஒரு சிதைந்த மனநிலை.

சுற்றுச்சூழலின் செழிப்பில் அதன் செழிப்பைக் காணும் ஒரு கலாச்சாரமும், மதிப்புகளும் உள்ளன.

நான் பூமிக்கு நன்மை செய்தால் அது தனக்கும் பயனளிக்கும் என்று அவர் நினைக்கிறார்.

சிதைவைக் கைவிட்டு, சுற்றுச்சூழலின் செழிப்பில் நமது செழிப்பான கலாச்சாரத்தை வளர்ப்போம், அப்போதுதான் இயற்கை அதாவது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

நம் வாழ்க்கையில் சுகாதார அட்டைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த வகையில் நாம் விழிப்புடன் இருக்கிறோம். நாம் அதில் நேர்மறையான புள்ளிகளைச் சேர்க்க முயற்சிக்கிறோம், அதேபோல் சுற்றுச்சூழலைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

பூமியின் சுகாதார அட்டையில் நேர்மறையான புள்ளிகளைச் சேர்க்க என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை பசுமைக் கடன் என்பதே சரியானதாக இருக்கும்.

பூமியின் சுகாதார அட்டையில் பசுமைக் கடன் எவ்வாறு சேர்க்கப்படும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

பசுமைக் கடன் என்ற கருத்தாக்கத்தை நாம் பின்பற்றினால், முதலில் தரிசு நிலங்களின் பட்டியல் தயாரிக்கப்படும்.

பின்னர் எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ அந்த நிலத்தை தன்னார்வ நடவுக்குப்  பயன்படுத்துவார்கள்.

பின்னர், இந்த நேர்மறையான செயலுக்காக அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு பசுமைக் கடன் வழங்கப்படும். இந்த பசுமைக் கடன்கள் எதிர்கால விரிவாக்கத்திற்கு உதவியாக இருக்கும்; வர்த்தகம் செய்யக்கூடியதாகவும் இருக்கும். பதிவு செய்தல், தோட்டத்தை சரிபார்த்தல் அல்லது பசுமைக் கடன்களை வழங்குதல் என பசுமைக் கடனின் முழு செயல்பாடும் டிஜிட்டல் முறையில் இருக்கும்.

இது நான் உங்களுக்குக் கொடுத்த ஒரு சிறிய உதாரணம். இத்தகைய எல்லையற்ற சிந்தனைகளில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதனால்தான் இன்று நாம்  ஓர்  உலகளாவிய தளத்தையும் தொடங்குகிறோம்.

இந்த இணையதளம் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான யோசனைகள், அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும்.

 

உலகளாவிய அளவில் பசுமைக் கடன்களுக்கான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் உலகளாவிய தேவையை வடிவமைக்க இந்த அறிவுக் களஞ்சியம் உதவியாக இருக்கும்.

நண்பர்களே,

இங்கே சொல்லப்படுவது, "இயற்கை", அதாவது, இயற்கையைப் பாதுகாப்பவரை இயற்கை பாதுகாக்கிறது.

இந்த முன்முயற்சியில் இணையுமாறு இந்த தளத்திலிருந்து நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றிணைந்து, இந்த பூமிக்கு, நமது எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான, தூய்மையான மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.

எங்களுடன் வந்து இணைவதற்கு நேரம் ஒதுக்கிய மொசாம்பிக் அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இந்த மன்றத்தில் இணைந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India, US achieve diplomatic breakthrough with trade deal; tariffs on Indian goods cut to 18%

Media Coverage

India, US achieve diplomatic breakthrough with trade deal; tariffs on Indian goods cut to 18%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam emphasising the Power of Self-Confidence in Building a Developed India
February 03, 2026

Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam emphasizing the transformative role of self-confidence in realizing the vision of a developed India.

In a post on X, he wrote:

"आत्मविश्वास वह शक्ति है, जिसके बल पर सब कुछ संभव है। विकसित भारत के सपने को साकार करने में देशवासियों की यही शक्ति बहुत काम आने वाली है।

श्रीर्मङ्गलात् प्रभवति प्रागल्भ्यात् सम्प्रवर्धते।

दाक्ष्यात् तु कुरुते मूलं संयमात् प्रतितिष्ठति॥ "