கோவா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் மின்சாரத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி கோவா மக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின் உற்பத்தி முறைகளை பின்பற்ற ஊக்குவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்தின் ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது :
"கோவா சூரிய சக்தியைப் பயன்படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டு முயற்சி நிலையான வளர்ச்சியை அதிகரிக்கும்."
Happy to see Goa harnessing the power of the sun. This collaborative effort will boost sustainable development. https://t.co/uMEPlcW7SX
— Narendra Modi (@narendramodi) June 17, 2023


