இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 26, 2026 அன்று ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இந்திய-இஸ்ரேல் கூட்டாண்மையின் முழு வரம்பையும் உள்ளடக்கிய விரிவான விவாதங்களில் இரு பிரதமர்களும் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பைப் பிரதிபலிக்கும் வகையில், இருதரப்பு உறவை "அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மையாக" உயர்த்த தலைவர்கள் முடிவு செய்தனர். இந்த உயர்வு, இரு நாடுகளின் நலன்களின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்கின் அடையாளமாகும்.

 

இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, முக்கியமான தொழில்நுட்பங்கள், இணைய பாதுகாப்பு, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் ஒப்புக்கொண்டனர். விவசாயம், நீர் மேலாண்மை, புத்தொழில் நிறுவனங்கள், நிதி தொழில்நுட்பம், டிஜிட்டல் சுகாதாரம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட மருந்து ஆகியவற்றில் இந்திய-இஸ்ரேல் கூட்டாண்மையின் மாற்றத்தக்க ஆற்றலையும் அவர்கள் வலியுறுத்தினர். மக்களிடையேயான உறவுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், இயக்கம் சார்ந்த கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கான புதிய முயற்சிகளை இரு தலைவர்களும் வரவேற்றனர். முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க அழைப்பு விடுத்த அவர்கள், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், புதுமைக்கான இந்திய-இஸ்ரேல் பாலம், விவசாயத்திற்கான இந்திய-இஸ்ரேல் புதுமை மையம் மற்றும் இந்திய-இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதுமை நிதி ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, தொழில்முனைவு மற்றும் அறிவியல் ஒத்துழைப்புகளை கணிசமாக மேம்படுத்தும் என்று குறிப்பிட்டனர். இந்தியாவின் திறமையான பணியாளர்களையும், இஸ்ரேலின் புதுமைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் அதிக ஒத்துழைப்பிற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

 

இரு தலைவர்களும் பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். காசா அமைதித் திட்டத்திற்கு பிரதமர் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், இந்த முயற்சி பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இஸ்ரேல் அளித்த ஆதரவிற்காக திரு நெதன்யாகுவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஏராளமான உடன்படிக்கைகளும்,  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன. பிரதமரின் அரசு முறைப் பயணத்தின் போது இருதரப்பு கூட்டாண்மைக்கான எதிர்கால நடவடிக்கையை கோடிட்டுக் காட்டும் ஒரு கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

பிரதமர் திரு நெதன்யாகுவின் இணக்கம் மற்றும் விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut

Media Coverage

Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 12, 2026
April 12, 2026

Trust, Technology & Transformation: How India is Building a Viksit Bharat Under PM Modi