வாரணாசி- புதுதில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டம் அறிமுகம்
"காசி மக்களின் பாராட்டு மழையில் நான் நனைந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்"
"காசி செழிக்கும் போது உத்தரப்பிரதேசம் செழிக்கும், உத்தரப்பிரதேசம் செழிக்கும் போது நாடு செழிக்கும்"
"காசியும் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் தீர்மானத்திற்கு உறுதிபூண்டுள்ளது"
"மோடியின் உத்தரவாத வாகனம் மாபெரும் வெற்றி, ஏனெனில் அரசு குடிமக்களை அடைய முயற்சிக்கிறது”
"இந்த ஆண்டு, பனாஸ் பால் பண்ணை உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளது"
"பூர்வாஞ்சலின் முழுப் பகுதியும் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டது, ஆனால் மகாதேவின் ஆசீர்வாதத்துடன், இப்போது மோடி உங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்"

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு  வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

சுமார் ரூ.4000 கோடி செலவில் சித்ரகூட் மாவட்டத்தில் 800 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா, மிர்சாபூரில் ரூ.1050 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய பெட்ரோலிய எண்ணெய் முனையம், ரூ.900 கோடி செலவில் வாரணாசி-பதோஹி தேசிய நெடுஞ்சாலை 731 பி (தொகுப்பு-2) அகலப்படுத்துதல் உள்ளிட்ட ரூ.6500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தேவ் தீபாவளியின் போது அதிக எண்ணிக்கையிலான தீபங்களை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைத்த வாரணாசி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தக் காட்சியை நேரில் காண தாம் வரவில்லை என்றாலும், வெளிநாட்டுப் பிரமுகர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட வாரணாசிக்கு வருகை தருபவர்களால் தான் நவீனமாக்கப்பட்டதாகவும், வாரணாசி மற்றும் அதன் மக்களுக்கான பாராட்டுகளைக் கேட்டதும் தான் பெருமை அடைந்ததாகவும் பிரதமர் கூறினார். "காசி மக்களின் பாராட்டு மழையில் நனைந்ததை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்" என்று பெருமிதத்துடன் பிரதமர் கூறினார்.

 

"காசி செழிக்கும்போது உத்தரப்பிரதேசம் செழிக்கும், உத்தரப்பிரதேசம் செழிக்கும் போது நாடு செழிக்கும்" என்று குறிப்பிட்ட பிரதமர், சுமார் ரூ.20,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிலும் இதே நம்பிக்கையைக் குறிப்பிட்டார்.   நேற்று மாலை காசி-கன்னியாகுமரி தமிழ் சங்கமம் ரயிலையும், வாரணாசி-புதுதில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் டோஹ்ரிகாட்-மவு மெமு ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

"வளர்ந்த பாரதம் தீர்மானத்திற்கு காசியும் முழு நாடும் உறுதிபூண்டுள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்களை அடைந்துள்ளது, அங்கு கோடிக்கணக்கான மக்கள் அதில் இணைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். வாரணாசியில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரையில் கலந்து கொண்டதைக் குறிப்பிட்ட திரு. மோடி, வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரை வேன்களை மக்கள் 'மோடியின் உத்தரவாத வாகனம்' என்று அழைக்கிறார்கள் என்றார். "அரசுத் திட்டங்களுக்கு உரிமையுள்ள அனைத்துத் தகுதிவாய்ந்த குடிமக்களையும் உள்ளடக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது", என்று கூறிய பிரதமர், அரசுதான் குடிமக்களைச் சென்றடைகிறது என்று கூறினார். 'மோடியின் உத்தரவாத வாகனம்' மாபெரும் வெற்றி" என்று வர்ணித்த பிரதமர், வாரணாசியில் முன்பு மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பயனாளிகள் வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரையுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.  " வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரை மற்ற எல்லாவற்றையும் விட மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறிய பிரதமர், இந்த நம்பிக்கை 2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். அங்கன்வாடி குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்து மிகுந்த திருப்தி தெரிவித்த பிரதமர், தனது வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரை வருகையின் போது பயனாளியும் லட்சாதிபதி சகோதரியுமான திருமதி சாந்தா  தேவியுடன் அவர் உரையாடியதையும் நினைவுகூர்ந்தார். வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரை பற்றிய தனது கற்றல் அனுபவத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "வளர்ந்த பாரதம் லட்சிய யாத்திரை என்பது பொதுக் களத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஒரு பயண பல்கலைக்கழகமாகும்" என்று கூறினார்.   

 

நகரத்தை அழகுபடுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். நம்பிக்கை மற்றும் சுற்றுலா மையமாக விளங்கும் காசியின் பெருமை நாளுக்கு நாள் தழைத்தோங்கி வருகிறது. திருப்பணிக்குப் பிறகு காசி விஸ்வநாதர் தாமில் 13 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதால் சுற்றுலா புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் தெரிவித்தார். வெளிநாடு செல்ல திட்டமிடும் முன் 15 உள்நாட்டு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து தான் அறிவுறுத்தியதை அவர் மக்களுக்கு நினைவூட்டினார். உள்நாட்டு சுற்றுலாவை மக்கள் நாடுவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டம் உள்ளிட்ட சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் பட்டியலிட்டார். மேலும் நகரத்தைப் பற்றிய தகவல்களை வழங்க சுற்றுலா வலைத்தளமான 'காசி' தொடங்கப்பட்டது. கங்கைப் படித்துறைகளின் புனரமைப்புப் பணிகள், நவீன பேருந்து நிழற்குடைகள், விமான நிலையம் மற்றும் ரயில் நிலைய வசதிகள் ஆகியவற்றைத் தொடங்குவதையும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே தொடர்பான திட்டங்கள் குறித்து விளக்கிய பிரதமர் மோடி, அர்ப்பணிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்கள், புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் திறப்பு குறித்துப் பேசினார். உள்ளூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 10,000-வது ரயில் என்ஜின் செயல்பாட்டுக்கு வந்தது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சூரிய மின்சக்தித் துறையில் இரட்டை இயந்திர அரசின் முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார். சித்ரகூடில் உள்ள 800 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா உ.பி.யில் நம்பகமான மின்சார விநியோகத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். பெட்ரோல் டீசல், பயோ-சி.என்.ஜி மற்றும் எத்தனால் பதப்படுத்துதல் தொடர்பாக தியோராய் மற்றும் மிர்சாபூரில் உள்ள நிறுவனங்கள் மாநிலத்தில் பெட்ரோலிய பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

 

விவசாயிகளின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று கூறிய பிரதமர், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.30,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்ட பிரதமர் கிசான் சம்மான் நிதி, கிசான் கடன் அட்டைகள், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் மற்றும் உரங்கள் தெளிப்பதை எளிதாக்கும் கிசான் ட்ரோன்கள் போன்ற திட்டங்களைக் குறிப்பிட்டார். சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் நமோ ட்ரோன் சகோதரி திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் நவீன பனாஸ் பால்பண்ணை ஆலையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு செய்து, கறவை மாடுகளை அதிகரிப்பதற்கான இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்தப் பால்பண்ணை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறினார். பனாஸ் பால்பண்ணை தொழிற்சாலைகள் ஏற்கனவே லக்னோ மற்றும் கான்பூரில் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு, பனாஸ் பால்பண்ணை உ.பி.யின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், பனாஸ் பால்பண்ணை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை உ.பி பால் உற்பத்தியாளர்களின் கணக்குகளில் ஈவுத்தொகையாக டெபாசிட் செய்தது.

வாரணாசியின் வளர்ச்சி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று மீண்டும்  கூறிய பிரதமர், பூர்வாஞ்சல் பகுதி பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், மகாதேவின் ஆசீர்வாதத்துடன் மோடி இப்போது அதன் சேவையில் ஈடுபட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், மூன்றாவது முறையாக பதவிக்கு வந்து, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்ற மோடி உத்தரவாதம் அளித்துள்ளார் என்றார். "நான் இன்று இந்த உத்தரவாதத்தை நாட்டிற்கு அளிக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் காசியின் என் குடும்ப உறுப்பினர்களான நீங்கள் அனைவரும்தான். எனது தீர்மானங்களை வலுப்படுத்தும் வகையில் நீங்கள் எப்போதும் எனக்குத் துணை நிற்பீர்கள்" என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத் துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வாரணாசியின் நிலைமையை மாற்றுவதற்கும், வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதற்கும் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இந்த திசையில் மற்றொரு படியாக, சுமார்  19,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணித்தார்.

சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு நடைபாதை திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார். பல்லியா-காசிப்பூர் நகர ரயில் பாதை இரட்டிப்புத் திட்டம் உள்ளிட்ட பிற ரயில்வே திட்டங்கள் தொடங்கப்படும். இந்தாரா-டோஹ்ரிகாட் ரயில் பாதை அளவு மாற்றும் திட்டம் போன்றவை அடங்கும்.

 

வாரணாசி- புதுதில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூடுதலாக, காவல்துறையினரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறைக் கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் கட்டப்பட்ட 132 கிலோவாட் துணை மின் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், விரிவான சுற்றுலா தகவல்களுக்கான இணையதளம் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பாஸ் ஸ்ரீ காசி விஸ்வநாத் தாம், கங்கை கப்பல் மற்றும் சாரநாத்தின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிக்கு ஒற்றை நடைமேடை டிக்கெட் முன்பதிவு செய்யும், இது ஒருங்கிணைந்த கியூஆர் குறியீடு சேவைகளை வழங்கும்.

6500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். புதுப்பிக்க முடியாத எரிசக்தி வளங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, சித்ரகூட் மாவட்டத்தில் சுமார் ரூ. 4000 கோடி செலவில் 800 மெகாவாட் சூரிய ஒளி பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பெட்ரோலிய விநியோக தொடரை அதிகரிக்க, மிர்சாபூரில் ரூ.1050 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய பெட்ரோலிய எண்ணெய் முனையத்தின் கட்டுமானத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
First multilingual Indian speech recognition model trained on 65 languages and dialects released

Media Coverage

First multilingual Indian speech recognition model trained on 65 languages and dialects released
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கடின உழைப்பு, முயற்சியின் வலிமையை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
August 14, 2026
PM shares Sanskrit Subhashitam highlighting the power of hard work and human endeavor

பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் இந்தத் தினத்தை அனுசரிக்கும் இந்த வேளையில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரது துணிச்சலான நடவடிக்கைளையும் நினைவுகூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தருணம் என்றும், இதன் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அன்புக்குரியவர்களை இழந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலைக் கடந்து மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துத் துன்பங்களைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் எடுத்துரைத்துள்ளார். அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மனித ஆன்மாவின் வலிமையை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகள் நிறைந்த காலத்திலிருந்து மீண்டெழுந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை வழங்கிய அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

இக்கட்டான தருணங்களில் தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைத் தங்களது துணிச்சல், திறமையின் மூலம் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ணம், ஒற்றுமையின் உணர்வைத் தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய முயற்சி மூலம் பல்வேறு கலைகள், அறிவியல், தொழில்நுட்பத் திறன், கைவினைத்திறன், புதுமைக் கண்டுபிடிப்புகள் செழித்து வளர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே விதியைச் சார்ந்திடாமல் துணிச்சல், விடாமுயற்சி, தொடர் செயல்பாடுகள் மூலம் இலக்குகளை அடைவதற்கு மன உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

“இன்றைய தினத்தை பிரிவினைவாதத்தின் கொடுமைகளை நினைவுகூரும் தினமாக அனுசரித்து வருகிறோம். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் துணிச்சலையும் இந்தத் தினத்தில் நினைவுகூர்கிறோம். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தருணம். குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்து அளவற்ற துன்பங்களை அனுபவித்தனர். இத்தகைய இக்கட்டான தருணங்களைக் கடந்து மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து சோதனைகளைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் மனிதகுல ஆன்மாவின் வலிமையை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தினம் நம் நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான மன வலிமையை அதிகரிக்கட்டும்.”

"विभाजन विभीषिका स्मृति दिवस पर उन सभी देशवासियों का हृदय से नमन, जिन्होंने उस वीभत्स दौर से निकलकर देश की प्रगति में अमूल्य योगदान दिया। उन्होंने अपने साहस और सामर्थ्य से दिखाया कि कैसे विपरीत परिस्थितियों में भी संकल्पों को सिद्ध किया जाता है। आइए, सद्भावना और एकजुटता की राष्ट्रीय भावना को और सशक्त करें।

उद्यमस्य प्रसादेन दृश्यन्ते विविधाः कलाः।
कातरा एव जल्पन्ति यद् भाव्यं तद् भविष्यति॥”

It is through hard work, enterprise and dedicated effort that diverse arts, science, technological skills, craftsmanship and innovations flourish, paving the way for success. Therefore, one should not remain dependent on fate; rather, one should move steadily towards one's goals with courage, diligence and persistent effort, for it is human endeavor that shapes destiny.