இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தில் சிறப்பாக மகத்தான பங்களிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் ஆழமான தேசபக்தி மற்றும் மூவண்ணக் கொடி மீதான அவர்களுடைய அசைக்க முடியாத பெருமையை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார். harghartiranga.com. தளத்தில் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களையும், சுய படங்களையும் பகிருமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தில் சிறப்பான பங்களிப்பு குறித்து கலாச்சார அமைச்சகத்தின் பதிவுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிலளித்திருப்பதாவது;
“இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கம் இந்தியா முழுவதும் சிறப்பான பங்களிப்பை பெறுவதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் ஆழமான தேசபக்தி மற்றும் மூவண்ணக் கொடி மீதான அவர்களுடைய அசைக்க முடியாத பெருமையை பிரதிபலிக்கிறது. harghartiranga.com. தளத்தில் தொடர்ந்து புகைப்படங்களையும், சுய படங்களையும் பகிருங்கள்”
Glad to see #HarGharTiranga receiving phenomenal participation across India. This shows the deep patriotic spirit that unites our people and their unwavering pride in the Tricolour. Do keep sharing photos and selfies on https://t.co/uJuh3CXyQS https://t.co/Ua5fHfYFcU
— Narendra Modi (@narendramodi) August 9, 2025


