QuotePM Modi interacts with with NCC Cadets, NSS Volunteers and Tableaux Artists

குடியரசு தினக் கொண்டாட்டங்களையொட்டி, டெல்லிக்கு வந்திருந்த அலங்கார வாகன ஊர்தி கலைஞர்கள், பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) கேடட்டுகள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

|

தீன் மூர்த்தி பவன் புல்வெளியில் கூடிய தேசிய மாணவர் படை கேடட்டுகள் மத்தியில் நடந்தவாறே பேசிய பிரதமர், இந்தியாவின் வேற்றுமை குறித்து குறிப்பிட்டார்.

|

ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நம்மைச் சுற்றிலும் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று திரு.நரேந்திர மோடி வலியுறுத்தினார். நாட்டில் மாற்றக்கூடிய மாற்றங்களை இந்தியாவில் உள்ள இளைஞர்களால் கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

|

நமது ராணுவப் படைகளால் தேசம் மிகுந்த பெருமையடைவதாக அவர் தெரிவித்தார். இதே உணர்வுடன், நாட்டுக்காக சேவையாற்றிவரும் துணிச்சலான வீரர்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.காவல் படையைச் சேர்ந்த சிலர், நாட்டுக்காக தங்களது உயிரைத் தந்துள்ளதாகவும், அவர்களது தியாகங்களை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் திரு. நரேந்திர மோடி கூறினார்.

 

|

தூய்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டியது நமது கடமை என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த குடியரசு தினம் சிறப்பானது என்று தெரிவித்த அவர், ஏனெனில், நமது கொண்டாட்டத்தில் நம்முடன் 10 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர் என்று கூறினார்.

 

 

 

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Indian IPO market heads for busiest week with $1.7 billion in deals

Media Coverage

Indian IPO market heads for busiest week with $1.7 billion in deals
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 20, 2025
June 20, 2025

Appreciation for PM Modi’s Vision, Elevating India’s Cultural and Global Stature