Rural India declared free from open defecation #Gandhi150 #SwachhBharat
We have to achieve the goal of eradicating single use plastic from the country by 2022: PM Modi #Gandhi150 #SwachhBharat
Inspired by Gandhi Ji's vision, we are building a clean, healthy, prosperous and strong New India: PM

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, அகமதாபாத்தில் இன்று (02.10.2019) தூய்மை இந்தியா தினம் – 2019 கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில், அஞ்சல் தலை மற்றும் வெள்ளி நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.  மேலும், தூய்மை இந்தியா விருதுகளையும் அவர் வழங்கினார்.  முன்னதாக, சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.   அங்குள்ள நூல்நூற்பு மையத்தை பார்வையிட்ட அவர், குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.

‘தூய்மை இந்தியா தின’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊராட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும், சில தினங்களுக்கு முன் ஐநா சபையின் சார்பில், காந்திஜி பற்றிய அஞ்சல் தலை வெளியிட்ட பிறகு, இந்த நிகழ்ச்சி மேலும் பிரபலமடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.  தமது வாழ்நாளில் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் வாய்ப்பு பலமுறை கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு முறை இங்கு வந்து செல்லும் போதும், புதிய சக்தி கிடைப்பதாகக் கூறினார்.

பல்வேறு கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்கள், குறிப்பாக இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கும், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தமது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.  வயது, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளுக்கு அப்பாற்பட்டு, தூய்மை, கண்ணியம் மற்றும் மரியாதையை ஏற்படுத்த ஒவ்வொருவரும் பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  நமது இந்த வெற்றியைக் கண்டு உலகமே வியப்பதாக கூறிய பிரதமர், இதற்காக நம்மை கவுரவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  நாடுமுழுவதும் 11 கோடி நவீனக் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்ததன் மூலம், 60 மாதங்களில் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்த இந்தியாவைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் பங்கேற்பும், தன்னார்வலர்களின் உழைப்பும், தூய்மை இந்தியா இயக்கத்தின் முத்திரையாகி இருப்பதுடன், இந்த இயக்கத்தின் வெற்றிக்கும் காரணமாகி இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  இந்த இயக்கத்திற்காக தங்களது இதயப்பூர்வ ஒத்துழைப்பை நல்கியதற்காக ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  பொதுமக்கள் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்கை 2022 க்குள் ஒழிப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும் தெரிவித்தார். 

 

தமது தலைமையிலான அரசு, மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.  அந்த வகையில், தற்சார்பு அடைதல், வாழ்க்கையை எளிமைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிப் பணிகளை கடைக்கோடிப் பகுதிக்கும் கொண்டு செல்வதை உறுதி செய்ய, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.   நாட்டின் மேம்பாட்டிற்காகவும், நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியடையச் செய்யவும் உறுதி ஏற்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.    இதுபோன்று 130 கோடி மக்களும் உறுதியேற்பதன் மூலம், நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi becomes first world leader to cross 100 million Instagram followers

Media Coverage

PM Modi becomes first world leader to cross 100 million Instagram followers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Condoles the Passing of Shri Maroof Raza Ji
February 26, 2026

Prime Minister Narendra Modi has expressed grief over the passing of Shri Maroof Raza Ji, honoring his legacy in the fields of journalism.

The Prime Minister stated that Shri Maroof Raza Ji made a rich contribution to the world of journalism. He noted that Shri Raza enriched public discourse through his nuanced understanding of defence, national security, and strategic affairs.

Expressing his sorrow, the Prime Minister said he is pained by his passing and extended his condolences to his family and friends.
The Prime Minister shared on X:

“Shri Maroof Raza Ji made a rich contribution to the world of journalism. He enriched public discourse with his nuanced understanding of defence, national security as well as strategic affairs. Pained by his passing. Condolences to his family and friends”