On one side there is Vikas and Vishwas while on the other side there is Vanshwad: PM Modi in Gujarat
Congress has never liked Gujarat, has always preferred to see it lag behind: PM Modi in Kutch
Gujarat is my Atma, Bharat is my Parmatma. This land of Gujarat has cared for me, Gujarat has given me strength: PM Modi
Congress lacks Neeti, Niyat, a Neta and a Naata with the people: PM Modi in Gujarat

 

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் கட்ச், ஜஸ்தன், அம்ரேலி மற்றும் காம்றேஜ் நகரில் நடைபெற்ற பாரிய பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். மக்களின் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும், கொண்டு குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி மீண்டும் அமைக்கப்படவுள்ளது. காங்கிரஸின் தவறான ஆட்சி குஜராத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மோசமாக பாதித்தது என்று அவர் குற்றம்சாட்டினார்

ஒரு புறம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கை இருக்க மறு பக்கத்தில் 'வம்சாவளி' இருக்கிறது. குஜராத் ஒரு போதும் காங்கிரசை மன்னிக்கபோவதில்லை இந்த பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. காங்கிரஸ் குஜராத்தை ஒருபோதும் விரும்பியதில்லை, அது எப்போதும் பின் தங்கி இருப்பதை பார்க்க விரும்பியது என்று திரு மோடி கூறினார்

"காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை, அது எதையும் செய்ய விரும்பவில்லை, மற்றவர்களுக்காக மக்களுக்கு எதையும் செய்ய காங்கிரஸ் விரும்பவில்லை ", என்று அவர் கூறினார்.

மக்களுக்கு நர்மதா நீரை கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை, என்று பிரதமர் குறிப்பிட்டார்,” நர்மதா நீர் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்ச்சில் வந்திருந்தால் என்ன செய்யும்? அங்கு வாழும் மக்களுக்கு இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். "

ஜஸ்டன் பொதுகூட்டத்தில் அவர் கூறியதாவது, “நாங்கள் நர்மதாவின் நீர்த்தேக்கத்தை சவுராஸ்டராவிற்கு கொண்டு வர ஆரம்பித்தபோது, ​​எங்களை எள்ளி நகை ஆடினர்.அவர்களின் எதிர்மறை அரசியல் கொள்கைகள் பல ஆண்டுகளாக மாறவில்லை. எங்களது  வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சி அரசியல் மீது  நம்பிக்கை உள்ளது.”

கம்ரேஜில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கடுமையான தாக்குதலில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சிக்கு பா.ஜ.க உடன் எப்போதும் காங்கிரஸினால் ஒப்பிட முடியாது.

குஜராத் என்னுடைய ஆத்மா, பாரத் என்னுடைய பிரம்மாத்மா. குஜராத்தின் இந்த நிலம் என்னை கவனித்து வந்தது, குஜராத் எனக்கு பலம் அளித்துள்ளது. அவர்கள் குஜராத்திற்கு வந்து குஜராத்தின் மகனைப் பற்றி பொய்களை பரப்புகிறார்கள். முன்னதாக சர்தார் படேலுக்கு இதே போல் செய்தார்கள். குஜராத் இதை ஒருபோதும் ஏற்காது. குஜராத்தில் வாழும் மக்களுக்கு அவர்கள் பரவி வரும் பொய்களை ஏற்று ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. "

மேலும், பிரதமர் கூறியதாவது  காங்கிரஸ் ஒரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்றும்  நாட்டினுடைய மக்கள் நலன்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார்.கம்ரேஜ், ஆச்சார்யா கிரீபாலானி, சுபாஷ் பாபு, குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐ.நா.தாபர் ஆகியோரைப் பற்றி எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் பேசுகிறார்களா ... அவர்கள் ஒரு குடும்பத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்பதால் ... பாகிஸ்தானிய நீதிமன்றம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ததை காங்கிரஸ் கொண்டாடுகிறது

காங்கிரஸ் மக்களோடு நீதியும், நியாத்தும், அரசியல் கொண்டுஇருக்க வில்லை

காங்கிரஸ் எப்போதும் குஜராத்தை குற்றம் சாட்டும் என்று பிரதமர் கூறினார். சர்தார் படேல் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோரை காங்கிரஸ் எப்படிக் கையாண்டது என்பதை மாநில மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.

இரவு நேரத்தில், இந்திரா ஜி மொரார்ஜி பாய் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஏழைகளுக்கு வங்கியின் கதவுகளை அவர்கள் திறக்கவில்லை. எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது, நாங்கள் செய்த முதல் விஷயம், ஜன் தண் திட்டத்தை துவங்குவதோடு, நிதி சேர்க்கையையும் மையமாகக் கொண்டிருந்தது. மொரார்ஜி பாய தேசாய் வெற்றிகரமாக நிதி மந்திரி மற்றும் காந்தி ஜி அவர்களுக்கு ஒரு விசுவாசி. அவர் பிரதமராக வரவேற்றபோதும், காங்கிரஸ் ஏன் அவரை மிரட்டியது, "என கம்ரேஜில் மோடி கூறினார்

மேலும், அவர் கூறியதாவது: " நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் காங்கிரஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஒரு கட்சி மிகவும் தாழ்ந்ததா ஆம் ஏழைக் குடம்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நாட்டின் பிரதமராகியுள்ளார் என்பதை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் தேநீர் விற்றேன்ஆனால் நான் நாட்டை விற்கவில்லை.

வளர்ச்சியால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். குஜராத்தில் எந்த பாகுபாடுமின்றி பா.ஜ.க பணிபுரிந்ததாக அவர் கூறினார். 2001 நிலநடுக்கம் காரணமாக கட்ச்சில் உள்ள வளர்ச்சி வேலைகளை அனைவருக்கும் காணப்படுகிறது. விவசாயத் துறை வளர்ந்து வருகிறது. ரன் திருவிழாவை அனுபவிக்க இங்குள்ள மக்கள் இங்கு வருகிறார்கள். கட்ச்சின் துறைமுகங்கள் மிகப்பெரிய போக்குவரத்துகளை கையாளும். கட்ச் வர்த்தகத்தில் துறைமுகங்கள் அதிகரித்து வருகின்றன.

26/11 அன்று மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் சமாளிக்க முடியாமல் போனது காங்கிரஸ் கட்சி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.உரியில் 26/11 அன்று இந்தியா மீது தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் இந்தியா எப்படி பதிலளித்தது என்பதை நீங்கள் பார்க்கலாம். இது அவர்களின் அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது

ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டுள்ளது. பண மதிப்பிழப்பு விஷயத்தில் ஏழைகள் தங்கள் சுதந்தரத்தை பெறுவதை உறுதி செய்வோம். இந்த நாட்டை கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் இங்கு அதிகாரத்திற்காக இல்லை, 125 கோடி இந்தியர்களுக்காக இருக்கிறோம். இந்தியா புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்


I have the good fortune of knowing every part of Gujarat well: PM @narendramodi pic.twitter.com/b5hDO50dTw

— narendramodi_in (@narendramodi_in) November 27, 2017

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut

Media Coverage

Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 12, 2026
April 12, 2026

Trust, Technology & Transformation: How India is Building a Viksit Bharat Under PM Modi