டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரிசெலுத்துவோரின் பளுவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள அரசு விரும்புகிறது என்று கூறினார். நடைமுறையை மையமாகக் கொண்ட வரிமுறை இந்தியாவில் அதிக அளவில் இருந்துவந்தது என்றும், அது தற்போது மக்களை மையமாகக் கொண்டதாக மாற்றப்படுகிறது என்றும் கூறினார்.
ஜிஎஸ்டி, விருப்பப்படி அமைக்கப்பட்ட வரி அடுக்குகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, கம்பெனி வரிக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பேசினார். 14.4 சதவீதமாக இருந்த சராசரி ஜிஎஸ்டியை அரசு குறைத்து 11.8 சதவீதமாக குறைத்துள்ளது என்று அவர் கூறினார். வருமான வரி மதிப்பீடுகள் மற்றும் மேல்முறையீடுகள் ஆகியவை தனிப்பட்ட முறையில் இருப்பதை மாற்றியமைத்து, பாகுபாட்டையும், இன்னல்களையும் அகற்ற அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.
வரி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அது கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கும், அனைவரின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி விவரித்த பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தங்கள் வரிகளைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “மூன்று கோடி பேருக்கும் அதிகமானவர்கள் வர்த்தகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் வெளிநாடு சென்றனர். பலர் கார்களை வாங்கினார்கள். ஆனால், 130 கோடி மக்கள் தொகையில் 1.5 கோடி பேர்தான் வருமான வரி செலுத்தியுள்ளார்கள் என்பதுதான் தற்போதைய நிலைமை” என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் 2,200 தொழில்புரிவோர் மட்டுமே தங்களது ஆண்டு வருவாய் ரூ.1 கோடி என அறிவிப்பு செய்துள்ளது நம்பமுடியாத ஆனால் உண்மையான விஷயம்” என்று கூறினார்.