வணக்கம் நண்பர்களே,

குளிர் காலம், ஒருவேளை தாமதமாக இருக்கலாம், அது மிக மெதுவாக நெருங்கி வருகிறது, ஆனால் அரசியல் வெப்பம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றுதான், நான்கு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன, முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன.

இந்த முடிவுகள் சாமானிய மக்களின் நல்வாழ்வில் அர்ப்பணிப்புடன், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கு, குறிப்பாக அனைத்து சமூகங்களின் அனைத்து பிரிவினருக்கும், ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தைச் சேர்ந்த பெண்கள், அனைத்து சமூக குழுக்களின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் என் நாட்டின் ஏழை மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

 

இந்த நான்கு முக்கிய பிரிவினருக்கும் அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்தல் மற்றும் உறுதியான திட்டங்களை கடைக்கோடியில் இருப்பவருக்கும் வழங்குதல் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு வலுவான ஆதரவு கிடைத்தது.

நல்லாட்சியும், மக்கள் நலனுக்கான நிலையான ஆதரவும் இருக்கும்போது, 'ஆட்சிக்கு எதிரான மனநிலை' என்ற சொல் பொருத்தமற்றதாகி விடுகிறது. சிலர் இதை ஆட்சிக்கு ஆதரவான, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, தேச நலன் அல்லது மக்கள் நலனுக்கான உறுதியான திட்டங்கள் என்று அழைக்கலாம்,

ஆனால் இது நாம் தொடர்ந்து பார்த்து வரும் அனுபவமாகும். அத்தகைய சிறந்த மக்கள் தீர்ப்புக்குப் பிறகு இன்று நாடாளுமன்றத்தின் இந்த புதிய கோவிலில் நாம் சந்திக்கிறோம்.

 

இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, அது ஒரு குறுகிய கூட்டத்தொடராக இருந்தது, ஆனால் அது ஒரு வரலாற்று தருணம். இருப்பினும், இந்த முறை இந்த அவையில் நீண்ட காலம் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

இது ஒரு புதிய சபை, எனவே, ஏற்பாடுகளில் சிறிய விவரங்கள் இன்னும் குறைவாக இருக்கலாம். எனினும், இது வழமையாக இயங்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அந்த குறைபாடுகளை அவதானித்து அதனை நிவர்த்தி செய்வார்கள்.

குடியரசுத் துணைத்தலைவரும், சபாநாயகரும் இந்த விஷயங்களில் முழு விழிப்புடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சில சிறிய விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்தால், அதை சுட்டிக்காட்டவும் நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த விஷயங்கள் (புதிய நாடாளுமன்றக் கட்டிடம்) செயல்படும்போது, தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களும் தேவைப்படுகின்றன.

 

எதிர்மறை எண்ணங்களை நாடு நிராகரித்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் எதிர்க்கட்சி சகாக்களுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். எங்கள் பிரதான குழு அவர்களுடன் விவாதித்து அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறது. இந்த முறையும், இந்த நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன.

மக்களின் விருப்பங்களுக்கான “வளர்ச்சியடைந்த இந்தியா” அடித்தளத்தை வலுப்படுத்த இந்த ஜனநாயகக் கோயில் ஒரு முக்கியமான தளமாகும் என்று உங்கள் மூலம் அனைத்து எம்.பி.க்களுக்கும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

மதிப்பிற்குரிய அனைத்து எம்.பி.க்களும் முழுமையாக தயாராக வந்து, அவையில் சமர்ப்பிக்கப்படும் எந்த மசோதாக்கள் குறித்தும் முழுமையாக விவாதித்து சிறந்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஆலோசனையை வழங்கும்போது, அதில் நடைமுறை அனுபவத்தின் கூறுகள் உள்ளன. ஆனால் விவாதம் இல்லை என்றால், நாடு அந்த விஷயங்களைத் தவறவிடுகிறது, அதனால்தான் நான் மீண்டும் தீவிர விவாதங்களுக்கு அனைத்து உறுப்பினர்களையும் வலியுறுத்துகிறேன்.

தற்போதைய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், எனது எதிர்க்கட்சி சகாக்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த கூட்டத்தொடரில் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்த விரக்தியை வெளிப்படுத்தத் திட்டமிடுவதற்குப் பதிலாக, இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிலவும் எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டு, இந்த கூட்டத்தொடரில் நேர்மறை எண்ணத்துடன் முன்னேறினால், அவர்கள் மீதான நாட்டின் பார்வை மாறும்.

அவர்களுக்கு ஒரு புதிய கதவு திறக்கலாம். அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், நேர்மறையான எண்ணங்களுடன் முன் வர நான் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குகிறேன். நாம் பத்து படிகள் எடுத்தால், முடிவுகளை எடுக்கும்போது நீங்கள் பன்னிரண்டு படிகளை எடுக்க வேண்டும்.

அனைவரின் எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது; விரக்தி தேவையில்லை . ஆனால், தோல்வியின் விரக்தியை சபையில் வெளிப்படுத்த வேண்டாம். ஏமாற்றம் ஏற்படலாம். உங்கள் உறுப்பினர்கள் தங்கள் பலத்தைக் காட்ட ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். ஆனால், குறைந்தபட்சம், இந்த ஜனநாயக கோவிலை விரக்தியை வெளிப்படுத்தும் தளமாக மாற்ற வேண்டாம்.

எனது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் இதை மீண்டும் சொல்கிறேன், உங்கள் அணுகுமுறையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள், எதிர்க்கட்சிக்காக மோதல் மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குங்கள்.

குறைகளை விவாதிக்கவும்.

இன்று நாட்டில் சில விஷயங்களில் வளர்ந்து வரும் வெறுப்பு இதுபோன்ற செயல்களின் மூலம் அன்பாக மாறக்கூடும். எனவே, ஒரு வாய்ப்பு உள்ளது; அதை நழுவ விடாதீர்கள்.

சபையில் உங்கள் ஒத்துழைப்பை வலியுறுத்தி வருகிறேன். அரசியல் கண்ணோட்டத்தில், நாட்டிற்கு நேர்மறையான செய்தியை தெரிவிப்பது உங்கள் நலனுக்கானது என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் பிம்பம் வெறுப்பு மற்றும் எதிர்மறையுடன் தொடர்புடையதாக மாறுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு மதிப்புமிக்கதாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் நலனுக்காக மீண்டும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

இப்போது நாடு தனது வளர்ச்சி இலக்கிற்காக நீண்ட காலம் காத்திருக்க விரும்பவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும், நாம் முன்னேற வேண்டும் என்ற உணர்வு உள்ளது. இந்த உணர்வுக்கு மதிப்பளித்து அவையை வழிநடத்துமாறு மதிப்பிற்குரிய அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade

Media Coverage

India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister attends the Defence Investiture Ceremony 2026 (Phase-1)
June 08, 2026

Prime Minister Shri Narendra Modi today attended the Defence Investiture Ceremony 2026 (Phase-1) where Gallantry Awards were conferred upon our brave personnel.

The Prime Minister expressed pride in their extraordinary courage, commitment and selfless service to the nation.

The Prime Minister posted on X:

"Attended the Defence Investiture Ceremony 2026 (Phase-1) where Gallantry Awards were conferred upon our brave personnel. We are proud of their extraordinary courage, commitment and selfless service to the nation."