சுமார் ரூ.5,450 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்
ரூ.1,650 கோடியில் கட்டப்படவுள்ள ரேவாரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்
குருஷேத்ராவில் உள்ள ஜோதிசாரில் அனுபவ அருங்காட்சியகமான 'அனுபவ மையத்தை'த் திறந்து வைத்தார்
பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ரோஹ்தக்-மெஹம்-ஹன்சி பிரிவில் ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
"ஹரியானாவின் இரட்டை என்ஜின் அரசு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது"
"வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஹரியானா வளர்ச்சியடைவது மிகவும் முக்கியமாகும்"
"அனுபவ கேந்திர ஜோதிசார் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாடங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும்"
"தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க ஹரியானா அரசு பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளது"
"ஹரியானா ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் தனக்கென ஒரு பெரிய பெயரைப் பெற்றுள்ளது"
"ஹரியானா முதலீட்டிற்கான சி

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

வீர பூமியான ரேவாரியிலிருந்து ஹரியானா முழுமைக்கும் ராம் ராம்! ரேவாரி செல்லும் போதெல்லாம் பல பழைய நினைவுகள் மீண்டும் பசுமையாகின்றன. ரேவாரியுடனான எனது தொடர்பு எப்போதும் தனித்துவமானது. ரேவாரி மக்கள் மோடியை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எனது நண்பர் ராவ் இந்தர்ஜித் அவர்களும் முதலமைச்சர் மனோகர் லால் அவர்களும் என்னிடம் கூறியதைப் போல, 2013 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, எனது முதல் நிகழ்ச்சி ரேவாரியில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ரேவாரி எனக்கு 272 க்கும் மேற்பட்ட இடங்களை ஆசீர்வதித்தது. உங்கள் ஆசீர்வாதம் வெற்றியாக மாறியது.

 

நண்பர்களே,

ஜனநாயகத்தில் இடங்களின் முக்கியத்துவம் மறுக்க முடியாதது, ஆனால் என்னைப் பொறுத்தவரை, அதனுடன், மக்களின் ஆசீர்வாதம் ஒரு பெரிய சொத்து. இன்று, உலகளவில் பாரதம் புதிய உயரங்களை எட்டியுள்ள நிலையில், அதற்கு உங்கள் ஆசீர்வாதங்கள் தான் காரணம், அது உங்கள் ஆசீர்வாதங்களின் அதிசயம். இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விட்டு நேற்று இரவு தாமதமாகத் திரும்பினேன். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் இன்று இந்தியாவுக்குக் கிடைக்கும் மரியாதை, ஒவ்வொரு மூலையிலிருந்தும் குவியும் நல்வாழ்த்துக்கள், இது மோடியின் மரியாதை மட்டுமல்ல; இது ஒவ்வொரு இந்தியரின் மரியாதை.  ஜி-20 உச்சிமாநாட்டை பாரதம் வெற்றிகரமாக நடத்தியது உங்கள் ஆசீர்வாதங்களால்தான். வேறு யாரும் சென்றடைய முடியாத சந்திரனை இந்திய மூவர்ணக் கொடி அடைந்தபோது, அது உங்களின் ஆசீர்வாதங்களால்தான். கடந்த 10 ஆண்டுகளில், பாரதம் 11 வது இடத்தில் இருந்து 5 வது பெரிய பொருளாதார சக்தியாக உயர்ந்துள்ளது, இது அனைத்தும் உங்கள் ஆசீர்வாதங்களால் தான். இப்போது, வரும் ஆண்டுகளில் பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்ற எனது மூன்றாவது பதவிக்காலத்தில் உங்கள் ஆசீர்வாதம் எனக்குத் தேவைப்படுகிறது.

ஹரியானாவின் எனது சகோதர சகோதரிகளே,

வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்க, ஹரியானா வளர்ச்சியடைவதும் முக்கியம். இங்கு நவீன சாலைகள் அமைக்கப்பட்டால் மட்டுமே ஹரியானா முன்னேறும். நவீன ரயில்வே நெட்வொர்க் இருந்தால் மட்டுமே ஹரியானா முன்னேறும். இங்கு பெரிய மற்றும் நல்ல மருத்துவமனைகள் இருந்தால் மட்டுமே ஹரியானா முன்னேறும். சிறிது நேரத்திற்கு முன்பு, இத்தகைய பணிகள் தொடர்பான சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஹரியானாவுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இதில் ரேவாரி எய்ம்ஸ், குருகிராம் மெட்ரோ, பல ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில்கள் ஆகியவை அடங்கும். இவற்றில், ஜோதிசாரஸில் கிருஷ்ணா சர்க்யூட் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட நவீன மற்றும் அற்புதமான அருங்காட்சியகமும் உள்ளது. ராமரின் ஆசீர்வாதம் அத்தகையது, இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் இதுபோன்ற புனிதமான பணிகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை நான் பெறுகிறேன்; இது இராமபிரானின் கருணை. இந்த அருங்காட்சியகம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையின் செய்தியையும், இந்தப் புனித பூமியின் பங்கையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும். இந்த வசதிகளுக்காக ரேவாரி உட்பட ஒட்டுமொத்த ஹரியானா மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சகோதர சகோதரிகளே,

இந்த நாட்களில், மோடியின் உத்தரவாதங்கள் குறித்து நாட்டிலும் உலகெங்கிலும் நிறைய விவாதங்கள் நடக்கின்றன. மோடியின் உத்தரவாதத்தின் முதல் சாட்சி ரேவாரி. இங்கே, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நாட்டுக்கு சில உத்தரவாதங்களை நான் வழங்கினேன். உலக அளவில் பாரதத்தின் அந்தஸ்து உயர வேண்டும் என்று தேசம் விரும்பியது. இதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று தேசம் விரும்பியது. இன்று, பிரமாண்டமான ராமர் கோயிலில் ராமரின் தெய்வீக இருப்பை முழு தேசமும் காண்கிறது. நமது கடவுள் ராமரை கற்பனையானதாகக் கருதிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் கூட, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுவதை ஒருபோதும் விரும்பாதவர்கள், இப்போது 'ஜெய் சியா ராம்' என்று கோஷமிடத் தொடங்கியுள்ளனர்.

நண்பர்களே,

பல தசாப்தங்களாக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்குவதில் காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்குவேன் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளித்தேன். காங்கிரஸின் பல முயற்சிகள் இருந்தபோதிலும், இன்று, 370 வது பிரிவு வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துள்ளது. இன்று, ஜம்மு-காஷ்மீரில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

நண்பர்களே,

ரேவாரியில், முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த நான் உத்தரவாதம் அளித்திருந்தேன். வெறும் 500 கோடி பட்ஜெட்டை ஒதுக்கி ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக காங்கிரஸ் பொய்யாக வாக்குறுதி அளித்தது. ரேவாரியின் வீர பூமியிலிருந்து எடுக்கப்பட்ட உறுதிமொழியை உங்கள் ஆசிர்வாதங்களுடன் நிறைவேற்றியுள்ளேன். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் இதுவரை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றுள்ளனர். மேலும் முக்கிய பயனாளிகளில் ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களும் உள்ளனர். ரேவாரியைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களைப் பற்றி மட்டும் நான் பேசினால், அவர்கள் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்திடமிருந்து மட்டும் 600 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது சொல்லுங்கள், ரேவாரியின் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கிடைத்த தொகையை விடக் குறைவாகவே காங்கிரஸ் பட்ஜெட்டில் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கியது. 500 கோடி ரூபாய் மட்டுமே!

 

நண்பர்களே,

இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ரேவாரி மக்களுக்கும், ஹரியானா மக்களுக்கும் நான் உறுதியளித்திருந்தேன். இன்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நமது ராவ் இந்தர்ஜித் இந்தப் பணியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது மட்டுமின்றி, அதை விடாமுயற்சியுடன் பின்பற்றி வருகிறார். இன்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது உங்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும், இளைஞர்கள் மருத்துவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும், மேலும் ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கும். நாட்டின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை ரேவாரியில் அமைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 2014 வரை நாட்டில் சுமார் 380 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில், 300-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. ஹரியானாவிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவும் பணி வேகமாக முன்னேறி வருகிறது.

சகோதர சகோதரிகளே,

 ஹரியானாவில் 10 ஆண்டுகளாக இரட்டை என்ஜின் ஆட்சி நடந்து வருகிறது. எனவே, ஏழைகளின் நலனுக்காக மோடி என்னென்ன திட்டங்களை வைத்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் ஹரியானா முன்னணியில் உள்ளது. விவசாயத் துறையில் ஹரியானா முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. தொழிற்சாலைகளின் நோக்கம் இங்கு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. வளர்ச்சியில் பின்தங்கியிருந்த ஹரியானாவின் தெற்குப் பகுதி தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. சாலைகள், ரயில்வே மற்றும் மெட்ரோக்கள் தொடர்பான பெரிய திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தின் வழியாக செல்கின்றன.

நண்பர்களே,

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஹரியானாவில் ரயில்வே மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் சராசரியாக 300 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஹரியானாவில் ரயில்வேக்கு கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது, 300 கோடி ரூபாய்க்கும் 3,000 கோடி ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். இந்த வேறுபாடு கடந்த 10 ஆண்டுகளில் வந்துள்ளது. ரோஹ்தக்-மெஹம்-ஹன்சி மற்றும் ஜிந்த்-சோனிபட் போன்ற புதிய ரயில் பாதைகள், அம்பாலா கண்டோன்மென்ட்-தப்பர் போன்ற இரட்டை ரயில் பாதைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். இத்தகைய வசதிகள் உருவாக்கப்படும்போது, வாழ்க்கை எளிதாகிறது, வியாபாரமும் எளிதாகிறது.

 

சகோதர சகோதரிகளே,

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்த பிரச்சினையை தீர்க்க மாநில அரசும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான முக்கிய நிறுவனங்கள் இன்று ஹரியானாவில் செயல்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஜவுளித் துறையிலும் ஹரியானா தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வருகிறது. நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கம்பளங்களில் 35% க்கும் அதிகமானவை, ஜவுளிகளில் சுமார் 20% ஹரியானாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது சிறு தொழில்கள் ஹரியானாவில் ஜவுளித் தொழிலை முன்னெடுத்துச் செல்கின்றன. பானிபட் கைத்தறி பொருட்களுக்கும், ஃபரிதாபாத் ஜவுளி உற்பத்திக்கும், குருகிராம் ஆயத்த ஆடைகளுக்கும், சோனிபட் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கும், பிவானி நெய்யப்படாத துணிகளுக்கும் புகழ் பெற்றவை. கடந்த 10 ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு மத்திய அரசு பில்லியன் கணக்கான ரூபாய் உதவியை வழங்கியுள்ளது. இது தற்போதுள்ள சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், ஹரியானாவில் ஆயிரக்கணக்கான புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதற்கும் வழிவகுத்தது.

நண்பர்களே,

ரேவாரி விஸ்வகர்மா தோழர்களின் கைவினைத்திறனுக்காகவும் அறியப்படுகிறது.  இங்குள்ள பித்தளை வேலைப்பாடுகள் மற்றும் கைவினைத்திறன் மிகவும் பிரபலமானது. முதன்முறையாக, 18 வணிகங்களுடன் தொடர்புடைய கைவினைஞர்களுக்காக பிரதமரின் விஸ்வகர்மா என்ற பெரிய திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாடு முழுவதும் மில்லியன் கணக்கான பயனாளிகள் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் இணைகின்றனர். இதற்காக ரூ.13,000 கோடி செலவிட பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் நமது பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறது.

 

சகோதர சகோதரிகளே,

பிணையமாக வழங்க எதுவும் இல்லாதவர்களுக்கு மோடியின் உத்தரவாதம் உள்ளது. நாட்டில் உள்ள சிறு விவசாயிகள் வங்கிகளுக்கு பிணையமாக வழங்குவதற்கு எதுவும் இல்லை. பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற உத்தரவாதத்தை மோடி அவர்களுக்கு வழங்கினார். ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் மகன்கள், மகள்களுக்கு வங்கிகளில் பிணையமாக வழங்க எதுவும் இல்லை. முத்ரா திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, எந்தவித பிணையும் இல்லாமல் கடன் வழங்கத் தொடங்கினார். நாட்டில் பல தோழர்கள் தள்ளுவண்டிகள் மற்றும் ஸ்டால்களில் சிறு வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் பல தசாப்தங்களாக நகரங்களில் இந்த வேலைகளைச் செய்து வருகின்றனர். அவர்களிடம் பிணையமாக வழங்க எதுவும் இல்லை. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலமும் மோடி உத்தரவாதம் பெற்றுள்ளார்.

 

நண்பர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் உள்ள நமது சகோதரிகளின் நிலை என்ன? பெரும்பாலான நேரங்களில், எங்கள் சகோதரிகள் தண்ணீர் ஏற்பாடு செய்வது, விறகு சேகரிப்பது அல்லது சமைப்பதற்கான பிற ஏற்பாடுகளில் ஈடுபடுவார்கள். மோடி இலவச எரிவாயு இணைப்புகளைக் கொண்டு வந்தார், குடிநீர் குழாய்களை வீட்டு வாசலுக்கு கொண்டு வந்தார். இன்று, ஹரியானாவின் கிராமங்களில் உள்ள எனது சகோதரிகள் வசதிகளைப் பெற்று வருகின்றனர், அவர்களின் நேரமும் சேமிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், சகோதரிகளுக்கு இப்போது போதுமான ஓய்வு நேரம் இருப்பதால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதிலுமிருந்து 10 கோடி சகோதரிகளை சுய உதவிக் குழுக்களுடன் இணைத்துள்ளோம். இதில் ஹரியானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான சகோதரிகளும் அடங்குவர். இந்த சகோதரிகள் குழுக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முடிந்தவரை பல சகோதரிகளை 'லட்சாதிபதி சகோதரிகளாக ' மாற்றுவதே எனது முயற்சி. இதுவரை 1 கோடி சகோதரிகள் லட்சாதிபதி சகோதரிகளாகியுள்ளனர். சில நாட்கள் முன்பாக நாங்கள் அறிமுகப்படுத்திய பட்ஜெட்டில் 3 கோடி சகோதரிகளை லட்சாதிபதி சகோதரிகளாக ஆக்குவது என்ற இலக்கு இருந்தது. நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். இதன் கீழ், சகோதரிகள் குழுக்களுக்கு ட்ரோன்களை இயக்க பயிற்சி அளிக்கப்படும், அவர்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும். இந்த ட்ரோன்கள் விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும், இது சகோதரிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்கும்.

 

 

ஹரியானா மிகப்பெரிய வாய்ப்புகள் நிறைந்த மாநிலம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடன் சொல்லுங்கள்:

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.

Media Coverage

India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds Suprabhatam programme on Doordarshan for promoting Indian traditions and values
December 08, 2025

The Prime Minister has appreciated the Suprabhatam programme broadcast on Doordarshan, noting that it brings a refreshing start to the morning. He said the programme covers diverse themes ranging from yoga to various facets of the Indian way of life.

The Prime Minister highlighted that the show, rooted in Indian traditions and values, presents a unique blend of knowledge, inspiration and positivity.

The Prime Minister also drew attention to a special segment in the Suprabhatam programme- the Sanskrit Subhashitam. He said this segment helps spread a renewed awareness about India’s culture and heritage.

The Prime Minister shared today’s Subhashitam with viewers.

In a separate posts on X, the Prime Minister said;

“दूरदर्शन पर प्रसारित होने वाला सुप्रभातम् कार्यक्रम सुबह-सुबह ताजगी भरा एहसास देता है। इसमें योग से लेकर भारतीय जीवन शैली तक अलग-अलग पहलुओं पर चर्चा होती है। भारतीय परंपराओं और मूल्यों पर आधारित यह कार्यक्रम ज्ञान, प्रेरणा और सकारात्मकता का अद्भुत संगम है।

https://www.youtube.com/watch?v=vNPCnjgSBqU”

“सुप्रभातम् कार्यक्रम में एक विशेष हिस्से की ओर आपका ध्यान आकर्षित करना चाहूंगा। यह है संस्कृत सुभाषित। इसके माध्यम से भारतीय संस्कृति और विरासत को लेकर एक नई चेतना का संचार होता है। यह है आज का सुभाषित…”