நாட்டை கட்டமைக்கும் பணிகளில் இந்திய இளைஞர்களை தேசிய மாணவர் படை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது: பிரதமர்
இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தியாகத் திகழ்கின்றனர்: பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, அவர்களது திறன் அதிகரித்துள்ளது: பிரதமர்
அமிர்த காலத்தில், நாம் அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது ஒவ்வொரு செயலும் அதற்கான அளவுகோலாக அமையும்: பிரதமர்

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு ராஜ்நாத் சிங் ஜி, சஞ்சய் சேத் ஜி, ஜெனரல் அனில் சவுகான் ஜி, முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், என்சிசியில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 கேடட்களும் இங்கே நம்மிடையே உள்ளனர். இந்த கேடட்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு சாதனை. இந்த ஆண்டு அணிவகுப்பும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் நமது குடியரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நண்பர்களே, இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும். எதிர்காலத்தில், குடியரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​நாங்கள் அணிவகுப்பில் பங்கேற்றோம் என்பதை நீங்கள் நிச்சயமாக நினைவில் கொள்வீர்கள். சிறந்த கேடட் விருதைப் பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் இங்கு பல என்சிசி பணிகளைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்சிசியின் இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் பாரம்பரியத்தை இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைக்கின்றன. இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள கேடட்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

 

நண்பர்களே,

நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் என்சிசி நிறுவப்பட்டது. ஒரு வகையில், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே உங்கள் அமைப்பின் பயணம் தொடங்கியது. குடியரசின் 75 ஆண்டுகளில், இந்திய அரசியலமைப்பு எப்போதும் நாட்டிற்கு ஜனநாயக உத்வேகத்தை அளித்தது மற்றும் குடிமைக் கடமைகளின் முக்கியத்துவத்தை விளக்கியது. அதேபோல், என்சிசி எப்போதும் இந்திய இளைஞர்களை தேசத்தைக் கட்டியெழுப்ப ஊக்குவித்து, அவர்களுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியது. கடந்த ஆண்டுகளில், என்சிசியின் நோக்கம் மற்றும் பொறுப்பை அதிகரிக்க அரசு நிறைய வேலைகளைச் செய்துள்ளது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். நமது எல்லைப் பகுதிகளிலும், கடல் எல்லையை ஒட்டிய மாவட்டங்களிலும் என்சிசி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இன்று, என்சிசி 170க்கும் மேற்பட்ட எல்லை தாலுகாக்களையும், நாட்டின் கிட்டத்தட்ட 100 கடலோர தாலுகாக்களையும் அடைந்துள்ளது. முப்படைகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த மாவட்டங்களின் இளம் என்சிசி கேடட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இன்று எல்லையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். என்சிசி-யில் கேடட்டுகளின் எண்ணிக்கையில் சீர்திருத்தத்தின் விளைவையும் நாம் காண்கிறோம். 2014-ம் ஆண்டில், என்சிசி கேடட்டுகளின் எண்ணிக்கை தோராயமாக 14 லட்சமாக இருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் கேடட்டுகள் உள்ளனர். எங்கள் மகள்கள் இதில் இருப்பது பெருமைக்குரிய விஷயம். இன்று எங்கள் என்சிசி கேடட்டுகள் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். என்சிசி கேடட்டுகள் விளையாட்டு உலகிலும் தங்கள் கொடியை பறக்கவிடுகிறார்கள். என்சிசி உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பு என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

 

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் உலகின் வளர்ச்சியை நீங்கள் தீர்மானிக்கப் போகிறீர்கள். இந்திய இளைஞர்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக நன்மைக்கான சக்தியாகவும் உள்ளனர். இன்று உலகம் இதை ஏற்றுக்கொள்கிறது. சமீபத்தில் செய்தித்தாள்களில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளவை மிகவும் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில், இந்திய இளைஞர்கள் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களையும் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளனர். இன்று உலகின் 200க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களால் வழிநடத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோடிக்கணக்கான ரூபாய்களை பங்களித்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவுகின்றன. இந்திய விஞ்ஞானிகள், இந்திய ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் ஆசிரியர்கள் உலகின் முன்னேற்றத்தையும் துரிதப்படுத்துகின்றனர். அதாவது, அது எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியாவின் இளைஞர் சக்தி இல்லாமல், இந்தியாவின் திறமை இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்வது கடினம். அதனால்தான் நான் உங்கள் அனைவரையும் உலகளாவிய நன்மைக்கான சக்தி என்று அழைக்கிறேன்.

நண்பர்களே,

அது ஒரு நபராக இருந்தாலும் சரி, ஒரு நாடாக இருந்தாலும் சரி, தடைகளைத் தாண்டும்போது அதன் வலிமை அதிகரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்திய இளைஞர்கள் எதிர்கொண்ட அனைத்து தடைகளையும் அகற்ற நாங்கள் உழைத்துள்ளோம் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இது இந்திய இளைஞர்களின் பலத்தை, நாட்டின் பலத்தை அதிகரித்துள்ளது.

 

நண்பர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காலம் இருந்தது இளைஞர்களால் வங்கிக் கடன்களை எளிதில் பெற முடியாது. கடன் வேண்டுமென்றால் முதலில் சில உத்தரவாதங்களை வழங்குங்கள் என்று வங்கிகள் கூறுவார்கள். 2014-ம் ஆண்டு, நாட்டு மக்கள் எனக்கு பிரதமராக பணியாற்ற வாய்ப்பளித்தபோது, ​​எனது நாட்டின் இளைஞர்களுக்கான உத்தரவாதத்தை நான் ஏற்றுக்கொள்வேன் என்று கூறினேன். வங்கி உத்தரவாதம் இல்லாமல் கடன்களை வழங்கும் முத்ரா திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். முன்னதாக, ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் உத்தரவாதம் இல்லாமல் கிடைத்தன. இப்போது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில், அதை 20 லட்சமாக உயர்த்தியுள்ளோம். 10 ஆண்டுகளில், முத்ரா கடனின் கீழ் 40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளோம். உங்களைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தக் கடனின் உதவியைப் பெற்று தங்கள் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.

நண்பர்களே,

இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான மற்றொரு முக்கியமான பிரச்சினை நாட்டின் தேர்தல் முறை. இரண்டு நாட்களுக்கு முன்பு, நாங்கள் தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடினோம். உங்களில் பலர் முதல் முறையாக வாக்காளர்களாகி விட்டீர்கள். வாக்காளர் தினத்தின் நோக்கம், அதிகபட்ச எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பங்கேற்று தங்கள் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. இன்று, உலகின் மிகப்பெரிய தேர்தல்கள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன, ஆனால் இதன் மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்தியாவில் சில மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. ஆனால் பின்னர் இந்த முறை உடைந்தது, இதனால் நாடு நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் நமது ஆசிரியர்கள் பெரும்பாலும் இதில் பணியில் ஈடுபடுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும், இதனால் படிப்புகள் பாதிக்கப்படுகின்றன. தேர்வுகளுக்கான தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவதால், நிர்வாகத்திலும் சிரமங்கள் உள்ளன. எனவே, இந்த நாட்களில் நாட்டில் மிக முக்கியமான விவாதம் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் அனைவரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் இந்த விவாதம் மிகவும் அவசியம், அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்,  ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம் அவசியமாகும். மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட வேண்டும், மேலும் நேரம் நிர்ணயிக்கப்படும்போது ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அது நடத்தப்பட வேண்டும். எனவே, இடையில் நிறுத்தப்படும் புதிய பணிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இன்று, நான் குறிப்பாக இந்திய இளைஞர்களை, என்.சி.சி கேடட்களை, என் பாரதத்தின் தன்னார்வலர்களை, என்.எஸ்.எஸ் தோழர்களை கேட்டுக்கொள்கிறேன், நாம் எங்கிருந்தாலும், இந்த விவாதத்தை நடத்த வேண்டும், விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், விவாதத்தை வழிநடத்த வேண்டும், இந்த விவாதத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும். இது உங்கள் எதிர்காலத்துடன் நேரடியாக தொடர்புடைய ஒரு பாடமாகும். அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் கூட, ஒரு புதிய அரசு அமைக்கும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அங்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. உங்கள் சொந்த கல்லூரி அல்லது பள்ளியிலும், மாணவர் மன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் முடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் தேர்தல்கள் தொடர்ந்து நடந்தால், ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் படிக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எனவே, ஒரு நாடு-ஒரு தேர்தல் என்ற விவாதத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும்; நாடு சரியான திசையில் செல்ல முடிவு செய்ய நாடு தழுவிய விவாதம் இருக்க வேண்டும்.

 

நண்பர்களே,

இன்று, 21-ம் நூற்றாண்டின் உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. இன்று, காலத்தின் தேவை என்னவென்றால், நாமும் மிக வேகமாக முன்னேற வேண்டும். நாட்டின் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் இதில் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், அது கலை, ஆராய்ச்சி, புதுமை என எதுவாக இருந்தாலும், உங்கள் புதுமையான யோசனைகள், படைப்பாற்றல் மூலம் புதிய ஆற்றலை உருவாக்க வேண்டும். அத்தகைய மற்றொரு முக்கியமான துறை அரசியல். நமது நாட்டின் இளைஞர்கள் முடிந்தவரை அரசியல் துறையில் வர வேண்டும், புதிய பரிந்துரைகளுடன் வர வேண்டும், புதிய ஆற்றலுடன் வர வேண்டும், புதுமையான யோசனைகளுடன் வர வேண்டும். இதுவே இன்றைய நாட்டின் தேவை. அதனால்தான் ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் செங்கோட்டையில் இருந்து கூறியுள்ளேன். இளைஞர்களின் சக்தி என்ன, வளர்ச்சியடைந்த இந்தியா, இளம் இந்தியா உரையாடலின் போதும் இதைக் கண்டோம். நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் விலைமதிப்பற்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளனர், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

நண்பர்களே,

சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்த மக்களும் தங்கள் ஒரே இலக்கை - நாட்டின் சுதந்திரத்தை - நிர்ணயித்திருந்தனர், இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பங்கேற்றனர், தியாகங்களைச் செய்தனர், தங்கள் இளமையை சிறையில் கழித்தனர். அதேபோல், இந்த அமிர்தக் காலத்தில், நாம் ஒரே ஒரு இலக்கை மட்டுமே வைத்திருக்க வேண்டும் - வளர்ந்த இந்தியா. நமது ஒவ்வொரு முடிவின் அளவுகோல், ஒவ்வொரு வேலையின் அளவுகோல், வளர்ந்த இந்தியாவாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

நீங்கள் எப்போதும் உங்கள் கடமைகளை மனதில் கொள்ள வேண்டும். கடமைகளின் அடித்தளத்தில் ஒரு பிரமாண்டமான மற்றும் தெய்வீக வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும்.

 

மீண்டும் ஒருமுறை, உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

பாரத மாதாவுக்கு ஜெ

பாரத மாதாவுக்கு ஜெ

பாரத மாதாவுக்கு ஜெ

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions