விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் உரையாடினேன், நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் துணிச்சலும், தொழில்முறையும் பாராட்டத்தக்கது: பிரதமர்
‘பாரத் மாதா கீ ஜெய்’ என்பது வெறும் முழக்கம் அல்ல, இது தமது நாட்டின் கௌரவம், கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரின் உறுதிமொழி: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான திறன் கொண்ட மூன்று அம்சங்களாகும்: பிரதமர்
நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் குங்குமம் அழிக்கப்பட்டபோது, பயங்கரவாதிகளை அவர்களின் மறைவிடங்களில் நாம் அழித்தோம்: பிரதமர்
இந்தியா மீது கண் வைப்பது அழிவைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை பயங்கரவாதத்திற்கு மூளையாக செயல்படுவோருக்கு தற்போது தெரியும்: பிரதமர்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் தீய நோக்கங்களும், துணிச்சலும் தோற்கடிக்கப்பட்டன: பிரதமர்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் லட்சுமண ரேகை தற்போது தெளிவாக உள்ளது, மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், இந்தியா பதிலடி கொடுக்கும், அது ஒரு தீர்க்கமான
அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்
அவர்களின் தியாகங்களை அங்கீகரித்து, முழு நாட்டின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
நவீன, தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்திய மற்றும் மிகவும் தொழில்முறை படையால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் பாராட்டினார்

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

இந்த முழக்கத்தின் சக்தியை உலகம் தற்போதுதான் கண்டிருக்கிறது. பாரத் மாதா கி ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, பாரத தாயின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதமாகும். நாட்டிற்காக வாழ விரும்பும், ஏதாவது சாதிக்க விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. நமது ட்ரோன்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, ​​நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் இலக்கை அடையும்போது, ​​எதிரி கேட்கிறான் - பாரத் மாதா கி ஜெய்! நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, ​​வானத்திலிருந்து உலகம் வரைக்கும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே எதிரொலிக்கிறது - பாரத் மாதா கி ஜெய்!

நண்பர்களே,

உண்மையில், நீங்கள் அனைவரும் லட்சக்கணக்கான இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். உங்களைப் பார்க்க காலையிலேயே நான் இங்கு வந்துள்ளேன். துணிச்சலானவர்களின் கால்கள் பூமியில் விழும்போது, ​​பூமி ஆசீர்வதிக்கப்படுகிறது, துணிச்சலானவர்களைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, ​​வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுகிறது. அதனால்தான் உங்களைப் பார்க்க நான் இங்கு வந்துள்ளேன். தற்போது முதல் பல ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவின் இந்த வீரம் பற்றி விவாதிக்கப்படும்போது, ​​அதன் மிக முக்கியமான அத்தியாயம் நீங்களும் உங்கள் நண்பர்களும் தான். நீங்கள் அனைவரும் நிகழ்காலத்திற்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு புதிய உத்வேகமாக மாறிவிட்டீர்கள். இந்த மாவீரர்களின் பூமியிலிருந்து, இன்று நான் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையின் நமது துணிச்சலான வீரர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். உங்கள் வீரத்தின் காரணமாக, ஆபரேஷன் சிந்தூரின் எதிரொலி ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படுகிறது. இந்த முழு நடவடிக்கையிலும், ஒவ்வொரு இந்தியரும் உங்களுடன் நின்றார்கள், ஒவ்வொரு இந்தியரின் பிரார்த்தனையும் உங்களுக்காக செய்யப்படுகிறது. தற்போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியுள்ளவர்களாகவும், அவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

நண்பர்களே,

நீங்கள் அவர்களை முன்பக்கத்திலிருந்து தாக்கி கொன்றீர்கள், பயங்கரவாதத்தின் அனைத்து பெரிய தளங்களையும் அழித்தீர்கள், 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டன, 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பயங்கரவாதத்தின் எஜமானர்கள் தற்போது இந்தியாவை நோக்கி கண் வைத்தால் ஒரே ஒரு விளைவு மட்டுமே இருக்கும் என்பதை புரிந்துகொண்டுள்ளனர் -அது அழிவு என்பதாகும்! இந்தியாவில் அப்பாவி மக்களின் இரத்தம் சிந்தினால் ஒரே ஒரு விளைவு மட்டுமே இருக்கும் – அது இழப்பு மற்றும் பெரும் பேரிழப்பாக அமையும் என்பதாகும்

என் துணிச்சல்மிக்க நண்பர்களே,

ஆபரேஷன் சிந்தூர் மூலம், நீங்கள் நாட்டின் தன்னம்பிக்கையை உயர்த்தியுள்ளீர்கள், நாட்டின் ஒற்றுமையை கட்டமைத்துள்ளீர்கள், மேலும் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்துள்ளீர்கள், இந்தியாவின் சுயமரியாதைக்கு புதிய உச்சத்தை அளித்துள்ளீர்கள்.

நண்பர்களே,

நீங்கள் முன்னெப்போதும் இல்லாத, கற்பனை செய்ய முடியாத, அற்புதமான ஒன்றைச் செய்தீர்கள். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை நமது விமானப்படை குறிவைத்தது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தொழில்முறை படையால் மட்டுமே இதைச் செய்ய முடியும், எல்லையைத் தாண்டிய இலக்குகளை ஊடுருவி, 20-25 நிமிடங்களுக்குள் துல்லியமான இலக்குகளைத் தாக்கினீர்கள். உங்கள் வேகமும் துல்லியமும் எதிரியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவுக்கு மேம்பட்டதால், அவர்களது இதயம் எப்போது துளைக்கப்பட்டது என்பதை அவர்கள் கூட உணரவில்லை.

நண்பர்களே,

பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாதத் தலைமையகத்தைத் தாக்கி, பயங்கரவாதிகளைத் தாக்குவதே எங்கள் இலக்கு. ஆனால், பாகிஸ்தான் தனது பயணிகள் விமானங்களைப் பயன்படுத்தித் தீட்டிய சதி பற்றி கூற வேண்டும். பொதுமக்கள் விமானம் பறக்கும் தருணம் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, மேலும் நீங்கள் மிகவும் கவனமாக, மிகவும் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் விமானங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இலக்குகளை அழித்ததில் நான் பெருமைப்படுகிறேன், நீங்கள் பொருத்தமான பதிலடி கொடுத்தீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் இலக்குகளை அடைந்துவிட்டீர்கள் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும்.

நண்பர்களே,

சிந்தூர் நடவடிக்கையால் விரக்தியடைந்த எதிரி, இந்த விமானப்படை தளத்தையும், நமது பல விமானப்படை தளங்களையும் தாக்க பல முறை முயன்றார். அது மீண்டும் மீண்டும் எங்களை குறிவைத்தது, ஆனால் பாகிஸ்தானின் தீய நோக்கங்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தன. பாகிஸ்தானின் ட்ரோன்கள், அதன் UAVகள், பாகிஸ்தானின் விமானங்கள் மற்றும் அதன் ஏவுகணைகள் அனைத்தும் நமது வலுவான வான் பாதுகாப்பின்னால் அழிக்கப்பட்டன. நாட்டின் அனைத்து விமானப்படை தளங்களுடனும் தொடர்புடைய தலைமையை நான் மனதாரப் பாராட்டுகிறேன், இந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானப்படை வீரரும், நீங்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளீர்கள்.

நண்பர்களே,

சிந்தூர் நடவடிக்கையின் ஒவ்வொரு தருணமும் இந்தியப் படைகளின் வலிமைக்கு சாட்சியமளிக்கிறது. இந்த நேரத்தில், நமது படைகளின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்தது. அது இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை எதுவாக இருந்தாலும், அனைத்தின் ஒருங்கிணைப்பும் மிகப்பெரியதாக இருந்தது. கடற்படை கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இராணுவம் எல்லையை வலுப்படுத்தியது. மேலும் இந்திய விமானப்படை தாக்கியதுடன், தற்காப்பும் செய்தது. எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற படைகளும் அற்புதமான திறன்களை வெளிப்படுத்தியுள்ளன. ஒருங்கிணைந்த வான் மற்றும் தரைவழி போர் அமைப்புகள் சிறந்த பணியைச் செய்துள்ளன

நண்பர்களே,

சிந்தூர் நடவடிக்கையில், மனிதவளத்துடன், இயந்திரங்களின் ஒருங்கிணைப்பும் அற்புதமானது. பல போர்களைக் கண்ட இந்தியாவின் பாரம்பரிய வான் பாதுகாப்பு அமைப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது ஆகாஷ் போன்ற நமது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளங்களாக இருந்தாலும் சரி, எஸ்-400 போன்ற நவீன மற்றும் வலுவான பாதுகாப்பு அமைப்புகள் அவற்றிற்கு முன்னெப்போதும் இல்லாத பலத்தை அளித்துள்ளன. ஒரு வலுவான பாதுகாப்பு கவசம் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் பல முயற்சிகள் இருந்தபோதிலும், நமது விமான தளங்கள் அல்லது நமது பிற பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படவில்லை. இதற்கான பெருமை உங்கள் அனைவருக்கும் சேரும், மேலும் உங்கள் அனைவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீரரும், இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரும் இதற்காகப் பாராட்டப்பட வேண்டும்.

நண்பர்களே,

தற்போது பாகிஸ்தான் நம்முடன் போட்டியிட முடியாத புதிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் திறன் நம்மிடம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், விமானப்படை உட்பட நமது அனைத்துப் படைகளும் உலகின் சிறந்த தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளன. இந்திய விமானப்படை தற்போது எதிரியை ஆயுதங்களால் மட்டுமல்ல, தரவுகள் மற்றும் ட்ரோன்கள் மூலமும் தோற்கடிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

நண்பர்களே,

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்குப் பிறகுதான் இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளையோ அல்லது இராணுவத் துணிச்சலையோ காட்டினால், அதற்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம். நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும், நாம் தயாராக இருக்க வேண்டும். இது ஒரு புதிய இந்தியா என்பதை எதிரிக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால், மனித சமுதாயம் தாக்கப்பட்டால், போர்முனையில் எதிரியை எவ்வாறு அழிப்பது என்பதையும் இந்த இந்தியா நன்கு அறிந்திருக்கிறது. இந்த உறுதியுடன், மீண்டும் ஒருமுறை கூறுவோம்

பாரத் மாதா கி ஜெய்.

பாரத் மாதா கி ஜெய்.

பாரத் மாதா கி ஜெய்.

பாரத் மாதா கி ஜெய்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s contribution to BRICS: Nari Shakti moves from promise to delivery

Media Coverage

India’s contribution to BRICS: Nari Shakti moves from promise to delivery
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with the President of Iran
June 30, 2026
President Pezeshkian briefs PM on the recent developments in West Asia.
PM welcomes the understanding reached and reiterates the need for continued efforts for lasting peace and stability.

Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with the President of the Islamic Republic of Iran, H.E. Dr. Masoud Pezeshkian.

President Pezeshkian briefed the Prime Minister on the recent developments in West Asia and the way forward.

Prime Minister welcomed the understanding reached, and reiterated India’s consistent position that all issues must be resolved through dialogue and diplomacy.

Prime Minister reiterated the need for continued efforts to ensure lasting peace and stability in the region, and for safeguarding freedom of navigation and commerce.