சுமார் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பீகாரில் ரூ. 13,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பரவுனியில் இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன நிறுவனத்தின் (HURL) உரத் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தார்
ரூ. 3917 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
கால்நடைகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளமான 'பாரத் பசுதான்' தளத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
1962 விவசாயிகள் செயலி என்ற செயலியை அறிமுகம் செய்தார்
"இரட்டை என்ஜின் அரசின் சக்தி காரணமாக பீகார் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உள்ளது"
"பீகார் வளர்ச்சி அடைந்தால், இந்தியாவும் வளர்ச்சி அடைந்ததாக மாறும்"
"பீகாரும் கிழக்கு இந்தியாவும் வளமாக இருந்தபோது இந்தியா அதிகாரம் பெற்றதாக இருந்தது என்பது வரலாற்றுச் சான்று"
“உண்மையான சமூக நீதி அரசுத் திட்டங்களின் பலன்கள் முழுமையாக கிடைப்பதன் மூலம் அடையப்படுகிறது"
மக்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்காக அவர் நன்றி தெரிவித்தார்.

பீகார் ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, கிரிராஜ் சிங் அவர்களே, ஹர்தீப் சிங் பூரி அவர்களே, துணை முதலமைச்சர்கள் விஜய் சின்ஹா அவர்களே, சாம்ராட் சவுத்ரி அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்களே, பெகுசராயிலிருந்து வந்துள்ள உற்சாகமான சகோதர, சகோதரிகளே!

ஜெய் மங்லா கர் மந்திர் மற்றும் நௌலாகா மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்களுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, 'வளர்ச்சியடைந்த இந்தியா வளர்ச்சியடைந்த பீகார்' வளர்ச்சிக்கு பங்களிக்கும் உறுதியுடன் நான் பெகுசராய்க்கு வந்துள்ளேன். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை சந்திப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.

 

நண்பர்களே

இந்த பெகுசராய் பூமி திறமையான இளைஞர்களுக்கு சொந்தமானது. இந்த மண் நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவரையும் எப்போதும் பலப்படுத்தியுள்ளது. இன்று, இந்த நிலத்தின் பழைய மகிமை திரும்பி வருகிறது. இன்று, பீகாருக்கும், நாடு முழுமைக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள்!

முன்னதாக, இதுபோன்ற நிகழ்ச்சிகள் டெல்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெறும், ஆனால் இன்று மோடி டெல்லியை பெகுசராய்க்கு அழைத்து வந்துள்ளார். சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பீகாருக்கு மட்டுமே சொந்தமானது.

ஒரே திட்டத்தில் அரசு இவ்வளவு பெரிய முதலீடு செய்திருப்பது, பாரதத்தின் திறன் எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. இது பீகார் இளைஞர்களுக்கு பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இன்றைய திட்டங்கள் பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கான வழிமுறையாக இருக்கும்.

கொஞ்சம் பொறுங்கள், சகோதரர்களே, உங்கள் அன்பு எனக்கு புரிகிறது. , தயவு செய்து காத்திருங்கள், உட்காருங்கள், நாற்காலியிலிருந்து கீழே வாருங்கள், தயவுசெய்து, நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன், உட்காருங்கள், ஆம். தயவுசெய்து உட்கார்ந்து, நாற்காலியில் வசதியாக உட்காருங்கள், இல்லையெனில், நீங்கள் சோர்வடைவீர்கள்.

இன்றைய திட்டங்கள் பீகாரில் வசதிக்கும், வளத்திற்கும் வழி வகுக்கும். இன்று, பீகாருக்கு புதிய ரயில் சேவைகளும் கிடைத்துள்ளன. அதனால்தான் இன்று நாடு முழு நம்பிக்கையுடன் சொல்கிறது, ஒவ்வொரு குழந்தையும் சொல்கிறது, கிராமங்கள் கூட சொல்லுகின்றன, நகரங்கள் சொல்கின்றன – தேசிய ஜனநாயக கூட்டணி, இந்த முறை, 400 இடங்களுக்கு மேல் பெறும் என்று சொல்கின்றன. '

நண்பர்களே

2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பளித்தபோது, கிழக்கு இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு நமது முன்னுரிமை என்று நான் கூறினேன். பீகாரும், கிழக்கு இந்தியாவும் எப்போதெல்லாம் செழிப்படைகிறதோ, அப்போதெல்லாம் நாடும் வலிமையடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

 

பீகாரில் நிலைமை மோசமடைந்தபோது, அது நாட்டிலும் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, பெகுசராய் பகுதியைச் சேர்ந்த பீகார் மக்களிடம் நான் கூறுகிறேன், பீகாருடன் இணைந்து நாடு வளர்ச்சியடையும் என்று. பீகாரைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும், நான் உங்களிடையே வரும்போது, நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் – இது வாக்குறுதி அல்ல, இது ஒரு தீர்மானம், இது ஒரு இயக்கம்.

இன்று, பீகாருக்கு கிடைத்துள்ள திட்டங்கள், நாட்டுக்கு கிடைத்துள்ளன, இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகும். இந்த திட்டங்களில் பெரும்பாலானவை பெட்ரோலியம், உரம் மற்றும் ரயில்வே தொடர்பானவை. எரிசக்தி, உரங்கள் மற்றும் இணைப்பு ஆகியவை வளர்ச்சியின் அடித்தளமாகும்.

விவசாயமாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, எல்லாமே அவர்களைப் பொறுத்ததுதான். இந்த பகுதிகளில் பணிகள் வேகமாக முன்னேறும்போது, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதும் இயற்கையானது.

பரானியில் மூடப்பட்ட உரத் தொழிற்சாலை நினைவிருக்கிறதா? அதை மீண்டும் திறப்பதாக நான் உத்தரவாதம் அளித்திருந்தேன். உங்கள் ஆசிர்வாதத்தால், அந்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றியுள்ளார். இது பீகார் மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.

முந்தைய அரசுகளின் அலட்சியம் காரணமாக, பரானி, சிந்த்ரி, கோரக்பூர் மற்றும் ராமகுண்டம் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இயந்திரங்கள் துருப்பிடித்தன. இன்று, இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் யூரியாவை  தயாரித்து இந்தியா தற்சார்பு கொண்டதன் பெருமையாக மாறி வருகின்றன. அதனால்தான் இந்த நாடு சொல்கிறது - மோடியின் உத்தரவாதம் நிறைவேறும் என்று அர்த்தம்!

நண்பர்களே

இன்று, பரவுனி சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தித் திறன் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் கட்டுமானத்தின் போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல மாதங்களாக தொடர்ந்து வேலை செய்துள்ளனர். இந்த சுத்திகரிப்பு ஆலை பீகாரின் தொழில் வளர்ச்சிக்கு புதிய சக்தியை வழங்குவதோடு, பாரதம் தற்சார்பு அடையவும் உதவும்.

 

கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பாக 65,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் பீகாரில் பெறப்பட்டுள்ளன என்பதையும், அவற்றில் பல ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன என்பதையும் உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பீகாரின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் எரிவாயுக் குழாய்களின் வலைப்பின்னல், சகோதரிகளுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க உதவுகிறது. இதனால் இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதும் எளிதாகி வருகிறது.

நண்பர்களே

தற்சார்பு இந்தியாவுடன் தொடர்புடைய மற்றொரு வரலாற்று தருணத்திற்கு இன்று நாம் சாட்சிகளாக மாறியுள்ளோம். கர்நாடகாவில் உள்ள கேஜி படுகையில் இருந்து எண்ணெய் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை நாம் சார்ந்திருப்பது குறையும்.

நண்பர்களே

தேசம் மற்றும் அதன் மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வலுவான அரசுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றன. குடும்ப நலன்கள் மற்றும் வாக்கு வங்கிகளுக்கு கட்டுப்பட்ட அரசுகளால் பீகார் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

2005க்கு முன்பு இருந்ததைப் போன்ற நிலைமைகள் இருந்தால், பீகாரில் பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு ஒருவர் நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கும். சாலைகள், மின்சாரம், தண்ணீர், ரயில்வேக்கள் ஆகியவற்றின் நிலை பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியும்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே வளங்கள் ரயில்வேயின் பெயரால் எப்படி சூறையாடப்பட்டன என்பது ஒட்டுமொத்த பீகாருக்கும் தெரியும். ஆனால் இன்று பாருங்கள், இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே வேகமாக மின்மயமாக்கப்பட்டு வருகிறது. நமது ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

நண்பர்களே

பீகார் பல தசாப்தங்களாக உறவினர்களின் விளைவுகளை அனுபவித்துள்ளது மற்றும் குடும்ப ஆதிக்கத்தை தாங்கியுள்ளது. குடும்ப நீதியும், சமூக நீதியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் திறமைசாலிகளுக்கு வாரிசு அரசியல் மிகப்பெரிய எதிரி.

பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் அவர்களின் வளமான பாரம்பரியத்தைக் கொண்ட பீகார் இது. நிதிஷ் ஜி தலைமையின் கீழ், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மறுபுறம், ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி ஆழமாக வேரூன்றிய குடும்ப ஆட்சியை பிரதிபலிக்கிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள், தலித்துகள், விளிம்புநிலை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்கள் குடும்ப ஆதிக்கத்தையும் ஊழலையும் நியாயப்படுத்துகிறார்கள்.

இது சமூக நீதி அல்ல, சமூகத்தின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம். இல்லையெனில், ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரம் பெற்று, சமூகத்தின் மற்ற குடும்பங்கள் பின்தங்கியதற்கு என்ன காரணம்? வேலை வழங்குவது என்ற பெயரில், இங்குள்ள ஒரு குடும்பத்தின் நலனுக்காக இளைஞர்களுக்கு சொந்தமான நிலம் எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாடு கண்டுள்ளது.

நண்பர்களே

உண்மையான சமூக நீதி செறிவூட்டல் மூலம் வருகிறது. உண்மையான சமூக நீதி திருப்தியின் மூலம் வருகிறது, திருப்திப்படுத்துவதன் மூலம் அல்ல. இத்தகைய சமூக நீதியிலும், மதச்சார்பின்மையிலும் மோடி நம்பிக்கை கொண்டவர்.

இலவச ரேஷன் பொருட்கள் ஒவ்வொரு பயனாளிக்கும் கிடைக்கும் போது, ஒவ்வொரு ஏழை பயனாளிக்கும் ஒரு நிலையான வீடு கிடைக்கும் போது, ஒவ்வொரு சகோதரிக்கும் தனது வீட்டில் எரிவாயு, தண்ணீர் இணைப்பு மற்றும் கழிப்பறை கிடைக்கும் போது, பரம ஏழைகள் கூட நல்ல மற்றும் இலவச மருத்துவ சேவையைப் பெறும்போது, ஒவ்வொரு விவசாய பயனாளியும் தங்கள் வங்கிக் கணக்குகளில் வேளாண் ஊக்குவிப்பு நிதியைப் பெறும்போது, செறிவு ஏற்படுகிறது.

இதுதான் உண்மையான சமூக நீதி. கடந்த 10 ஆண்டுகளில், மோடியின் உத்தரவாதம் ஏராளமான குடும்பங்களை சென்றடைந்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை தலித்துகள், பின்தங்கியவர்கள் மற்றும் மிகவும் பின்தங்கியவர்கள். அவர்கள் அனைவரும் என் குடும்பம்.

நண்பர்களே

எங்களைப் பொறுத்தவரை, சமூக நீதி என்பது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். என்னை ஆசீர்வதிக்க ஏராளமான எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இங்கு வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி சகோதரிகளை லட்சாதிபதி சகோதரிகள் ஆக மாற்றியுள்ளோம். பீகாரில் லட்சக்கணக்கான சகோதரிகள் இப்போது லட்சாதிபதி சகோதரியாக மாறியிருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போது, மூன்று கோடி சகோதரிகளை லட்சாதிபதி சகோதரிகளாக்குவதற்கான உத்தரவாதத்தை மோடி வழங்கியுள்ளார். மூன்று கோடி சகோதரிகளின் இந்த எண்ணிக்கையை லட்சாதிபதி சகோதரிகள்' என்று நினைவில் கொள்ளுங்கள்.

சமீபத்தில், மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் கொண்டு வரவும், மின்சாரத்திலிருந்து வருமானத்தை உருவாக்கவும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இது பிரதமரின் சூரிய இல்லம், இலவச மின்சார திட்டம்  என்று அழைக்கப்படுகிறது.

இது பீகாரில் உள்ள பல குடும்பங்களுக்கும் பயனளிக்கும். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் அனைவருக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இரட்டை என்ஜினின் இரட்டை முயற்சிகளுடன், பீகார் உருவாக்கப்படும்.

இன்று நாம் வளர்ச்சிக்கான மகத்தான திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்து, வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நான் குறிப்பாக வணக்கம் செலுத்துகிறேன். என்னுடன் சொல்லுங்கள் -

பாரத் மாதாவுக்கு - ஜே!

உங்கள் இரு கைகளையும் உயர்த்தி முழு பலத்துடன் சொல்லுங்கள்

பாரத் மாதாவுக்கு - ஜே!

பாரத் மாதாவுக்கு - ஜே!

பாரத் மாதாவுக்கு - ஜே!

மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
 FTA with New Zealand to boost India's export competitiveness, open growth avenues: India Inc

Media Coverage

FTA with New Zealand to boost India's export competitiveness, open growth avenues: India Inc
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting fundamental causes of progress
April 28, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today highlighting that effort, self-control, skill, vigilance, patience, memory, and initiating any task with thoughtful consideration are the fundamental causes of progress.

The Prime Minister remarked that hard work performed with patience and dedication can yield remarkable success, further pointing out that it also infuses the nation's prosperity and strength with fresh vigor.

The Prime Minister wrote on X:

"संयम और समर्पण के साथ किया गया परिश्रम अद्भुत सफलता दे सकता है। इससे राष्ट्र की समृद्धि और सामर्थ्य को भी एक नई ऊर्जा मिलती है।

उत्थानं संयमो दाक्ष्यमप्रमादो धृतिः स्मृतिः।

समीक्ष्य च समारम्भो विद्धिमूलं भवस्य तु॥"

Effort, self-control, skill, vigilance, patience, memory and initiating any task with thoughtful consideration, these are all the fundamental causes of progress.