உள்கட்டமைப்பு முன்னேற்றம் காரணமாக அசாம் தற்சார்பு இந்தியாவின் பெரிய மையமாக உருவெடுத்து வருகிறது; பிரதமர்

அன்னை இந்தியா வாழ்க! அன்னை இந்தியாவைப்போற்றுவோம்!

அசாமின் முதல்வர் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, மத்திய அமைச்சர் திரு ராமேஷ்வர் டெல்ஜி அவர்களே, அசாம் அரசின் அமைச்சர் டாக்டர் ஹேமந்த் பிஸ்வாஸ் ராமா அவர்களே, அவைத்தலைவர் திரு ரஞ்சித் குமார் தாஸ் அவர்களே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அசாமில் உள்ள என்னுடைய அருமை சகோதர சகோதரிகளே.

ஆங்கிலப் புத்தாண்டு, பொகாலி பிஹு ஆகியவற்றையொட்டி அசாம் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிவரும் நாட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் தரும் நாட்களாக அமையட்டும்.

நண்பர்களே, 

அசாம் மக்களின் ஆசிகளுக்குப் பாத்திரமானவனாக நான் திகழ்வது எனக்குப் பெருமையளிக்கிறது. உங்களுடைய அன்பு என்னை மீண்டும் மீண்டும் அசாம் பால் ஈர்க்கிறது. பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் அசாம் மக்களுடன் பேசிப் பழகும் பல வாய்ப்புகள் எனக்குக் கிடைத்துள்ளன..

சென்ற ஆண்டு போடோ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடத்தப்பட்ட விழாவில் நான் பங்கேற்றேன். இன்று அதே போன்று அஸ்ஸாம் மக்களுக்குப் பெருமையும், பாதுகாப்பும் அளிக்கக் கூடிய மற்றொரு பெரிய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்காக அசாம் அரசு பாராட்டத்தக்க பணி புரிந்திருக்கிறது. அசாமில் குடியிருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

சுயமரியாதை, விடுதலை, பாதுகாப்பு ஆகிய மூன்றும் இணையும் தருணமாக இது உள்ளது. முதலாவதாக, அசாம் மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திற்கு, சட்டரீதியான பாதுகாப்பு பெறுகிறார்கள். இரண்டாவதாக, ஜெரெங்கா பீடபூமி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிவசாகர் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. அசாமின் எதிர்காலத்துக்காக மகாசக்தி ஜோய்மதியின் தியாகத்திற்குச் சான்றாக இது உள்ளது. அவரது வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன். நாட்டின் முக்கியமான 5 தொல்லியல் தலங்களுள் ஒன்றாக சிவசாகரை அறிவிப்பதற்கான  நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சகோதர சகோதரிகளே,

நமது அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை நாடு கொண்டாடி வருகிறது. இந்த நாள், இனி “பராக்கிரம்திவஸ்”பராக்கிரம நாள் என்று கொண்டாடப்படும். நேதாஜியின் சுயமரியாதையும், அன்னை இந்தியாவின் விடுதலைக்காக அவரின் அர்ப்பணிப்பு உணர்வும் நம்மை ஊக்கப்படுத்துகின்றன. நம் நாட்டின் உறுதிப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் பாடுபட வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட வேண்டும்.

சென்ற ஆண்டு போடோ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடத்தப்பட்ட விழாவில் நான் பங்கேற்றேன். இன்று அதே போன்று அஸ்ஸாம் மக்களுக்குப் பெருமையும், பாதுகாப்பும் அளிக்கக் கூடிய மற்றொரு பெரிய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்காக அசாம் அரசு பாராட்டத்தக்க பணி புரிந்திருக்கிறது. அசாமில் குடியிருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

சுயமரியாதை, விடுதலை, பாதுகாப்பு ஆகிய மூன்றும் இணையும் தருணமாக இது உள்ளது. முதலாவதாக, அசாம் மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திற்கு, சட்டரீதியான பாதுகாப்பு பெறுகிறார்கள். இரண்டாவதாக, ஜெரெங்கா பீடபூமி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிவசாகர் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. அசாமின் எதிர்காலத்துக்காக மகாசக்தி ஜோய்மதியின் தியாகத்திற்குச் சான்றாக இது உள்ளது. அவரது வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன். நாட்டின் முக்கியமான 5 தொல்லியல் தலங்களுள் ஒன்றாக சிவசாகரை அறிவிப்பதற்கான  நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சகோதர சகோதரிகளே,

நமது அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை நாடு கொண்டாடி வருகிறது. இந்த நாள், இனி “பராக்கிரம்திவஸ்”பராக்கிரம நாள் என்று கொண்டாடப்படும். நேதாஜியின் சுயமரியாதையும், அன்னை இந்தியாவின் விடுதலைக்காக அவரின் அர்ப்பணிப்பு உணர்வும் நம்மை ஊக்கப்படுத்துகின்றன. நம் நாட்டின் உறுதிப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் பாடுபட வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட வேண்டும்.

நண்பர்களே,

நாம் நமது மண்ணை வெறும் புல், மண், கல் என்று பார்க்கும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. நமது மண்ணை நமது அன்னையாகவே நாம் மதிக்கிறோம். "பூமித்தாயே, உன் காலடியில் எனக்கு ஒரு இடம் தா.. நீ இல்லாமல் ஒரு உழவன் என்ன செய்துவிட முடியும்? மண் இல்லா விட்டால் அவன் நிர்க்கதியாக இருப்பான்" என்று அசாமின் மகனான பாரதரத்னா பூபென்ஹசாரிக்கா கூறியுள்ளார்.

நண்பர்களே,

விடுதலையடைந்து பல்லாண்டு காலத்திற்குப் பிறகும், அசாமில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் அவர்களுடைய நிலத்திற்கு சட்ட ரீதியான உரிமை பெற முடியாத நிலை இருந்தது என்பது மிகவும் வருந்தத்தக்கது. நமது அரசு பதவியேற்ற போது 6 லட்சம் குடும்பங்களுக்குமேல், தங்களது நிலங்களுக்கு சட்டரீதியான ஆவணங்கள் இல்லாமல் இருந்தனர். முந்தைய அரசுகள் இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. ஆனால் சர்பானந்த சோனோவால் தலைமையிலான தற்போதைய அரசு, இதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது 2.25 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிலக்குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால்பயன்பெறும்.

 

அசாமில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களது நிலத்திற்கான சட்ட ரீதியான உரிமைகளைப் பெறவேண்டும் என்பதே நமது குறிக்கோள்.

சகோதர சகோதரிகளே,

நிலக் குத்தகை உரிமை கிடைத்தது மட்டுமல்லாமல், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் இது வகை செய்துள்ளது. இதுவரை இம்மக்களுக்குக் கிடைக்காமலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்களின் கீழ் இவர்கள் பயன்பெற முடியும்.

பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் பயனடைந்த பல லட்சக்கணக்கான மக்களைப் போல இவர்களும், நேரடியாக வங்கிக் கணக்கில் பண உதவி பெறலாம். கிசான் கிரெடிட் கார்டு, (உழவர் கடன் அட்டை), பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறுதிட்டங்களின் கீழும் பயன் பெறலாம். தொழில் மேற்கொள்ள வங்கிக் கடனுதவியும் பெறலாம்.

சகோதர சகோதரிகளே,

அசாமில் உள்ள 70 சிறிய மற்றும் பெரிய பழங்குடியின மக்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும், அவர்களது துரித வளர்ச்சிக்கும், நமது அரசு உறுதி பூண்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் அரசு நடைபெற்ற போதும், தற்போது கடந்த சில ஆண்டுகளாக என் டி ஏ அரசு உள்ளபோதும், அசாமின் கலாச்சாரம், சுயமரியாதை, பாதுகாப்பு ஆகியவை, நமது முன்னுரிமையாக இருந்துள்ளது. அசாம் மொழியையும், இலக்கியத்தையும் வளர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பெரிய ஆளுமைகளின் பணிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமந்த் சங்கர்தேவ் அவர்களின் தத்துவம், மனித குலத்திற்கு மிகப்பெரிய சொத்தாகும். பட்டத்ரவஸ்த்ரா போன்ற நூல்களுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பது அசாம் மக்கள் அறியாததல்ல. இந்நாட்டில் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கு அசாம் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவை ஆக்கிரமிப்புகள் எதுவுமற்ற பூங்காவாக மாற்றி அதை அதிசயிக்கத்தக்க ஒன்றாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சகோதர சகோதரிகளே,

சுயசார்பு இந்தியா மலர்வதற்கு, வடகிழக்குப் பகுதி மற்றும் அசாம் மாநிலத்தின் துரிதமான வளர்ச்சி மிகவும் முக்கியமாகும். அசாம் மக்களின் தன்னம்பிக்கையின் மூலமே இது சாத்தியப்படும்.  குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளும், மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். 1.75 கோடி ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடி காலத்தின்போது அசாம் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான உழவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் பண உதவி செய்ய முடிந்தது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் குடிமக்கள் இலவச சிகிச்சை பெறும் பயனாளிகளாக உள்ளனர். இது அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் அசாமில் கழிப்பறை வசதி 38 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மின்சார வசதி 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் சென்ற ஒன்றரை வருட காலத்தில் இரண்டரை லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அசாமில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலமான குடிநீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் அயராது உழைக்கின்றன.

சகோதர சகோதரிகளே,

இந்த அனைத்து திட்டங்களிலிருந்தும் பயன் பெறுபவர்கள் நமது சகோதரிகளும், நமது பெண் குழந்தைகளும் ஆவர். உஜ்வாலா திட்டத்தின் கீழும் அவர்கள் பயனடைந்துள்ளனர்.

35 லட்சம் ஏழை சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு கிடைத்துள்ளது. இதில் 4 லட்சம் குடும்பங்கள் ஷெட்யூல்ட் வகுப்பு, ஷெட்யூல்ட் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவை. சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பல இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

அனைவருடனும் அனைவரின் வளர்ச்சிக்காகவும்... அசாமின் ஒவ்வொரு பிரிவும், வளர்ச்சி பெற ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேயிலை பயிரிடும் பழங்குடியின மக்களுக்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. நிலங்களுக்கான சட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கல்வி புகட்டப்படுகிறது. சுகாதார வசதி செய்து தரப்படுகிறது. தேயிலைத்தோட்ட  தொழிலாளர் தலைவர் சந்தோஷ் டோபானோ உட்பட பெரிய தலைவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு தலைவர்களை, தேயிலைப் பழங்குடியின மக்களைக் கௌரவித்து வருகிறது.

நண்பர்களே,

 

அசாமின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள ஒவ்வொரு பழங்குடியினத்தையும் ஒருங்கிணைக்கும் கொள்கையின் மூலம் அசாம் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போடோஒப்பந்தத்திற்குப் பிறகு, நில பிரதேச கவுன்சிலில் முதலாவது தேர்தல் நடைபெற்றது. போடோ பிரதேச கவுன்சில், வளர்ச்சிக்கான புதிய பாதை வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

சகோதர சகோதரிகளே,

அசாமின் தேவைகளைக் கண்டறிந்து, அரசு, ஒவ்வொரு முக்கிய திட்டத்திலும் விரைந்து செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பகுதியையும், அசாமையும் இணைப்பதற்காகவும், நவீனப்படுத்துவதற்காகவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அசாமின் ஏ சி டி கொள்கை, கிழக்காசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அதிகரித்து வருகிறது. அசாமின் கிராமங்களில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தொலைவிற்கு, பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் பூபேன் ஹசாரிகா சேது, போகிபீல் பாலம், போன்ற பல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் மூலம் அசாமிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எல்லைப் பகுதிகளுக்கும் இடையேயான இணைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியான்மர், ஆகியவற்றை நீர்வழிப் போக்குவரத்து மூலம் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நண்பர்களே,

ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து அசாமில் அதிகரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தொழில் துறைக்கும் வேலைவாய்ப்புக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

கோபிநாத் பொர்தோலாய்சர்வதேச விமான நிலையம் நவீனப் படுத்தப் பட்டது; கொக்ராஜ் ஹாரில் உள்ள விமான நிலையம் மாற்றியமைக்கப்பட்டது; பொன் காய் கிராமத்தில் பல்முனைப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது; போன்றவற்றின் மூலம் அசாமின் தொழில் வளர்ச்சி புதிய உத்வேகம் பெற்றுள்ளது.

சகோதர சகோதரிகளே,

இன்று நாடு வாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அசாமில் எண்ணெய் எரிவாயுத் துறையில் 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குவஹாத்தி பரோணி கேஸ் பைப் லைன் போன்ற பெரிய திட்டங்கள் மூலமாக அசாமில் வேலைவாய்ப்பு பெருகும். அசாமில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ரிஃபைனரி வசதி போன்றவற்றின் மூலமாக எத்தனால் போன்ற உயிரி எரிபொருள் தயாரிக்கும் முக்கிய மாநிலமாக அசாம்திகழும்.

சகோதர சகோதரிகளே,

சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் முக்கியதலமாகவும் அசாம் வளர்ந்து வருகிறது. எய்ம்ஸ் மற்றும் இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் ஆகியவை ஏற்படுத்தப்படவிருப்பதையடுத்து, இளைஞர்களுக்கு நவீன கல்விக்கான வாய்ப்புகள் பெருகும். கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது, அசாம், அதை எதிர்கொண்ட விதம் பாராட்டத் தகுந்தது. அசாம் மக்களுக்கும், சோனோவால் அவர்களுக்கும், ஹேமந்த் அவர்களுக்கும், அவர்களுடைய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். அசாம், தடுப்பு மருந்து செலுத்தும் இயக்கத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் 2 டோஸ் மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நண்பர்களே,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளுக்கு உலகம் முழுவதிலும் தேவை உள்ளது. இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. நாம் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறுதியாக, தங்கள் நிலங்களுக்கு சட்ட உரிமைகள் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும், செல்வச் செழிப்புக்கான பாதையில் செல்லவும், எனது வாழ்த்துக்கள். நன்றிகள் பற்பல.

அன்னை இந்தியா நீடூழி வாழ்க! வளர்க!

நன்றி

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan

Media Coverage

Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
“Maitri Parv” celebrates the friendship between India and Oman: PM Modi during community programme in Muscat
December 18, 2025

नमस्ते!
अहलन व सहलन !!!

ये युवा जोश आपकी एनर्जी यहां का पूरा atmosphere चार्ज हो गया है। मैं उन सब भाई बहनों को भी नमस्कार करता हूँ, जो जगह की कमी के कारण, इस हॉल में नहीं हैं, और पास के हॉल में स्क्रीन पर यह प्रोग्राम लाइव देख रहें हैं। अब आप कल्पना कर सकते हैं, कि यहाँ तक आएं और अंदर तक नहीं आ पाएं तोह उनके दिल में क्या होता होगा।

साथियों,

मैं मेरे सामने एक मिनी इंडिया देख रहा हूं, मुझे लगता है यहां बहुत सारे मलयाली भी हैं।

सुखम आणो ?

औऱ सिर्फ मलयालम नहीं, यहां तमिल, तेलुगू, कन्नड़ा और गुजराती बोलने वाले बहुत सारे लोग भी हैं।

नलमा?
बागुन्नारा?
चेन्ना-गिद्दिरा?
केम छो?

साथियों,

आज हम एक फैमिली की तरह इकट्ठा हुए हैं। आज हम अपने देश को, अपनी टीम इंडिया को सेलिब्रेट कर रहे हैं।

साथियों,

भारत में हमारी diversity, हमारी संस्कृति का मजबूत आधार है। हमारे लिए हर दिन एक नया रंग लेकर आता है। हर मौसम एक नया उत्सव बन जाता है। हर परंपरा एक नई सोच के साथ आती है।

और यही कारण है कि हम भारतीय कहीं भी जाएं, कहीं भी रहें, हम diversity का सम्मान करते हैं। हम वहां के कल्चर, वहां के नियम-कायदों के साथ घुलमिल जाते हैं। ओमान में भी मैं आज यही होते हुए अपनी आंखों के सामने देख रहा हूं।

यह भारत का डायस्पोरा co-existence का, co-operation का, एक लिविंग Example बना हुआ है।

साथियों,

भारत की इसी समृद्ध सांस्कृतिक विरासत का एक और अद्भुत सम्मान हाल ही में मिला है। आपको शायद पता होगा, यूनेस्को ने दिवाली को Intangible Cultural Heritage of Humanity में शामिल किया है।

अब दिवाली का दिया हमारे घर को ही नहीं, पूरी दुनिया को रोशन करेगा। यह दुनिया भर में बसे प्रत्येक भारतीय के लिए गर्व का विषय है। दिवाली की यह वैश्विक पहचान हमारी उस रोशनी की मान्यता है, जो आशा, सद्भाव, और मानवता के संदेश को, उस प्रकाश को फैलाती है।

साथियों,

आज हम सब यहां भारत-ओमान "मैत्री पर्व” भी मना रहे हैं।

मैत्री यानि:
M से maritime heritage
A से Aspirations
I से Innovation
T से Trust and technology
R से Respect
I से Inclusive growth

यानि ये "मैत्री पर्व,” हम दोनों देशों की दोस्ती, हमारी शेयर्ड हिस्ट्री, और prosperous future का उत्सव हैं। भारत और ओमान के बीच शताब्दियों से एक आत्मीय और जीवंत नाता रहा है।

Indian Ocean की Monsoon Winds ने दोनों देशों के बीच ट्रेड को दिशा दी है। हमारे पूर्वज लोथल, मांडवी, और तामरालिप्ति जैसे पोर्ट्स से लकड़ी की नाव लेकर मस्कट, सूर, और सलालाह तक आते थे।

और साथियों,

मुझे खुशी है कि मांडवी टू मस्कट के इन ऐतिहासिक संबंधों को हमारी एंबेसी ने एक किताब में भी समेटा है। मैं चाहूंगा कि यहां रहने वाला हर साथी, हर नौजवान इसको पढ़े, और अपने ओमानी दोस्तों को भी ये गिफ्ट करे।

अब आपको लगेगा की स्कूल में भी मास्टरजी होमवर्क देते हैं, और इधर मोदीजी ने भी होमवर्क दे दिया।

साथियों,

ये किताब बताती है कि भारत और ओमान सिर्फ Geography से नहीं, बल्कि Generations से जुड़े हुए हैं। और आप सभी सैकड़ों वर्षों के इन संबंधों के सबसे बड़े Custodians हैं।

साथियों,

मुझे भारत को जानिए क्विज़ में ओमान के participation बारे में भी पता चला है। ओमान से Ten thousand से अधिक लोगों ने इस क्विज में participate किया। ओमान, ग्लोबली फोर्थ पोज़िशन पर रहा है।

लेकिन में तालियां नहीं बजाऊंगा। ओमान तो नंबर एक पे होना चाहिए। मैं चाहूँगा कि ओमान की भागीदारी और अधिक बढ़े, ज्यादा से ज्यादा संख्या में लोग जुड़ें। भारतीय बच्चे तो इसमें भाग ज़रूर लें। आप ओमान के अपने दोस्तों को भी इस क्विज़ का हिस्सा बनने के लिए मोटिवेट करें।

साथियों,

भारत और ओमान के बीच जो रिश्ता ट्रेड से शुरू हुआ था, आज उसको education सशक्त कर रही है। मुझे बताया गया है कि यहां के भारतीय स्कूलों में करीब फोर्टी सिक्स थाउज़ेंड स्टूड़ेंट्स पढ़ाई कर रहे हैं। इनमें ओमान में रहने वाले अन्य समुदायों के भी हज़ारों बच्चे शामिल हैं।

ओमान में भारतीय शिक्षा के पचास वर्ष पूरे हो रहे हैं। ये हम दोनों देशों के संबंधों का एक बहुत बड़ा पड़ाव है।

साथियों,

भारतीय स्कूलों की ये सफलता His Majesty the Late सुल्तान क़ाबूस के प्रयासों के बिना संभव नहीं थी। उन्होंने Indian School मस्कत सहित अनेक भारतीय स्कूलों के लिए ज़मीन दी हर ज़रूरी मदद की।

इस परंपरा को His Majesty सुल्तान हैथम ने आगे बढ़ाया।

वे जिस प्रकार यहां भारतीयों का सहयोग करते हैं, संरक्षण देते हैं, इसके लिए मैं उनका विशेष तौर पर आभार व्यक्त करता हूं।

साथियों,

आप सभी परीक्षा पे चर्चा कार्यक्रम से भी परिचित हैं। यहां ओमान से काफी सारे बच्चे भी इस प्रोग्राम से जुड़ते हैं। मुझे यकीन है, कि यह चर्चा आपके काम आती होगी, पैरेंट्स हों या स्टूडेंट्स, सभी को stress-free तरीके से exam देने में हमारी बातचीत बहुत मदद करती है।

साथियों,

ओमान में रहने वाले भारतीय अक्सर भारत आते-जाते रहते हैं। आप भारत की हर घटना से अपडेट रहते हैं। आप सभी देख रहे हैं कि आज हमारा भारत कैसे प्रगति की नई गति से आगे बढ़ रहा है। भारत की गति हमारे इरादों में दिख रही है, हमारी परफॉर्मेंस में नज़र आती है।

कुछ दिन पहले ही इकॉनॉमिक ग्रोथ के आंकड़े आए हैं, और आपको पता होगा, भारत की ग्रोथ 8 परसेंट से अधिक रही है। यानि भारत, लगातार दुनिया की Fastest growing major economy बना हुआ है। ये तब हुआ है, जब पूरी दुनिया चुनौतियों से घिरी हुई है। दुनिया की बड़ी-बड़ी economies, कुछ ही परसेंट ग्रोथ अचीव करने के लिए तरस गई हैं। लेकिन भारत लगातार हाई ग्रोथ के पथ पर चल रहा है। ये दिखाता है कि भारत का सामर्थ्य आज क्या है।

साथियों,

भारत आज हर सेक्टर में हर मोर्चे पर अभूतपूर्व गति के साथ काम कर रहा है। मैं आज आपको बीते 11 साल के आंकड़े देता हूं। आपको भी सुनकर गर्व होगा।

यहां क्योंकि बहुत बड़ी संख्या में, स्टूडेंट्स और पेरेंट्स आए हैं, तो शुरुआत मैं शिक्षा और कौशल के सेक्टर से ही बात करुंगा। बीते 11 साल में भारत में हज़ारों नए कॉलेज बनाए गए हैं।

I.I.T’s की संख्या सोलह से बढ़कर तेईस हो चुकी है। 11 वर्ष पहले भारत में 13 IIM थे, आज 21 हैं। इसी तरह AIIMs की बात करुं तो 2014 से पहले सिर्फ 7 एम्स ही बने थे। आज भारत में 22 एम्स हैं।

मेडिकल कॉलेज 400 से भी कम थे, आज भारत में करीब 800 मेडिकल कॉलेज हैं।

साथियों,

आज हम विकसित भारत के लिए अपने एजुकेशन और स्किल इकोसिस्टम को तैयार कर रहे हैं। न्यू एजुकेशन पॉलिसी इसमें बहुत बड़ी भूमिका निभा रही है। इस पॉलिसी के मॉडल के रूप में चौदह हज़ार से अधिक पीएम श्री स्कूल भी खोले जा रहे हैं।

साथियों,

जब स्कूल बढ़ते हैं, कॉलेज बढ़ते हैं, यूनिवर्सिटीज़ बढ़ती हैं तो सिर्फ़ इमारतें नहीं बनतीं देश का भविष्य मज़बूत होता है।

साथियों,

भारत के विकास की स्पीड और स्केल शिक्षा के साथ ही अन्य क्षेत्रों में भी दिखती है। बीते 11 वर्षों में हमारी Solar Energy Installed Capacity 30 गुना बढ़ी है, Solar module manufacturing 10 गुना बढ़ी है, यानि भारत आज ग्रीन ग्रोथ की तरफ तेजी से कदम आगे बढ़ा रहा है।

आज भारत दुनिया का सबसे बड़ा फिनटेक इकोसिस्टम है। दुनिया का दूसरा सबसे बड़ा Steel Producer है। दूसरा सबसे बड़ा Mobile Manufacturer है।

साथियों,

आज जो भी भारत आता है तो हमारे आधुनिक इंफ्रास्ट्रक्चर को देखकर हैरान रह जाता है। ये इसलिए संभव हो पा रहा है क्योंकि बीते 11 वर्षों में हमने इंफ्रास्ट्रक्चर पर पांच गुना अधिक निवेश किया है।

Airports की संख्या double हो गई है। आज हर रोज, पहले की तुलना में डबल स्पीड से हाइवे बन रहे हैं, तेज़ गति से रेल लाइन बिछ रही हैं, रेलवे का इलेक्ट्रिफिकेशन हो रहा है।

साथियों,

ये आंकड़े सिर्फ उपलब्धियों के ही नहीं हैं। ये विकसित भारत के संकल्प तक पहुंचने वाली सीढ़ियां हैं। 21वीं सदी का भारत बड़े फैसले लेता है। तेज़ी से निर्णय लेता है, बड़े लक्ष्यों के साथ आगे बढ़ता है, और एक तय टाइमलाइन पर रिजल्ट लाकर ही दम लेता है।

साथियों,

मैं आपको गर्व की एक और बात बताता हूं। आज भारत, दुनिया का सबसे बड़ा digital public infrastructure बना रहा है।

भारत का UPI यानि यूनिफाइड पेमेंट्स इंटरफेस, दुनिया का सबसे बड़ा रियल टाइम डिजिटल पेमेंट सिस्टम है। आपको ये बताने के लिए कि इस पेमेंट सिस्टम का स्केल क्या है, मैं एक छोटा सा Example देता हूं।

मुझे यहाँ आ कर के करीब 30 मिनट्स हुए हैं। इन 30 मिनट में भारत में यूपीआई से फोर्टीन मिलियन रियल टाइम डिजिटल पेमेंट्स हुए हैं। इन ट्रांजैक्शन्स की टोटल वैल्यू, ट्वेंटी बिलियन रुपीज़ से ज्यादा है। भारत में बड़े से बड़े शोरूम से लेकर एक छोटे से वेंडर तक सब इस पेमेंट सिस्टम से जुड़े हुए हैं।

साथियों,

यहां इतने सारे स्टूडेंट्स हैं। मैं आपको एक और दिलचस्प उदाहरण दूंगा। भारत ने डिजीलॉकर की आधुनिक व्यवस्था बनाई है। भारत में बोर्ड के एग्ज़ाम होते हैं, तो मार्कशीट सीधे बच्चों के डिजीलॉकर अकाउंट में आती है। जन्म से लेकर बुढ़ापे तक, जो भी डॉक्युमेंट सरकार जेनरेट करती है, वो डिजीलॉकर में रखा जा सकता है। ऐसे बहुत सारे डिजिटल सिस्टम आज भारत में ease of living सुनिश्चित कर रहे हैं।

साथियों,

भारत के चंद्रयान का कमाल भी आप सभी ने देखा है। भारत दुनिया का पहला ऐसा देश है, जो मून के साउथ पोल तक पहुंचा है, सिर्फ इतना ही नहीं, हमने एक बार में 104 सैटेलाइट्स को एक साथ लॉन्च करने का कीर्तिमान भी बनाया है।

अब भारत अपने गगनयान से पहला ह्युमेन स्पेस मिशन भी भेजने जा रहा है। और वो समय भी दूर नहीं जब अंतरिक्ष में भारत का अपना खुद का स्पेस स्टेशन भी होगा।

साथियों,

भारत का स्पेस प्रोग्राम सिर्फ अपने तक सीमित नहीं है, हम ओमान की स्पेस एस्पिरेशन्स को भी सपोर्ट कर रहे हैं। 6-7 साल पहले हमने space cooperation को लेकर एक समझौता किया था। मुझे बताते हुए खुशी है कि, ISRO ने India–Oman Space Portal विकसित किया है। अब हमारा प्रयास है कि ओमान के युवाओं को भी इस स्पेस पार्टनरशिप का लाभ मिले।

मैं यहां बैठे स्टूडेंट्स को एक और जानकारी दूंगा। इसरो, "YUVIKA” नाम से एक स्पेशल प्रोग्राम चलाता है। इसमें भारत के हज़ारों स्टूडेंट्स space science से जुड़े हैं। अब हमारा प्रयास है कि इस प्रोग्राम में ओमानी स्टूडेंट्स को भी मौका मिले।

मैं चाहूंगा कि ओमान के कुछ स्टूडेंट्स, बैंगलुरु में ISRO के सेंटर में आएं, वहां कुछ समय गुज़ारें। ये ओमान के युवाओं की स्पेस एस्पिरेशन्स को नई बुलंदी देने की बेहतरीन शुरुआत हो सकती है।

साथियों,

आज भारत, अपनी समस्याओं के सोल्यूशन्स तो खोज ही रहा है ये सॉल्यूशन्स दुनिया के करोड़ों लोगों का जीवन कैसे बेहतर बना सकते हैं इस पर भी काम कर रहा है।

software development से लेकर payroll management तक, data analysis से लेकर customer support तक अनेक global brands भारत के टैलेंट की ताकत से आगे बढ़ रहे हैं।

दशकों से भारत IT और IT-enabled services का global powerhouse रहा है। अब हम manufacturing को IT की ताक़त के साथ जोड़ रहे हैं। और इसके पीछे की सोच वसुधैव कुटुंबकम से ही प्रेरित है। यानि Make in India, Make for the World.

साथियों,

वैक्सीन्स हों या जेनरिक medicines, दुनिया हमें फार्मेसी of the World कहती है। यानि भारत के affordable और क्वालिटी हेल्थकेयर सोल्यूशन्स दुनिया के करोड़ों लोगों का जीवन बचा रहे हैं।

कोविड के दौरान भारत ने करीब 30 करोड़ vaccines दुनिया को भेजी थीं। मुझे संतोष है कि करीब, one hundred thousand मेड इन इंडिया कोविड वैक्सीन्स ओमान के लोगों के काम आ सकीं।

और साथियों,

याद कीजिए, ये काम भारत ने तब किया, जब हर कोई अपने बारे में सोच रहा था। तब हम दुनिया की चिंता करते थे। भारत ने अपने 140 करोड़ नागरिकों को भी रिकॉर्ड टाइम में वैक्सीन्स लगाईं, और दुनिया की ज़रूरतें भी पूरी कीं।

ये भारत का मॉडल है, ऐसा मॉडल, जो twenty first century की दुनिया को नई उम्मीद देता है। इसलिए आज जब भारत मेड इन इंडिया Chips बना रहा है, AI, क्वांटम कंप्यूटिंग और ग्रीन हाइड्रोजन को लेकर मिशन मोड पर काम कर रहा है, तब दुनिया के अन्य देशों में भी उम्मीद जगती है, कि भारत की सफलता से उन्हें भी सहयोग मिलेगा।

साथियों,

आप यहां ओमान में पढ़ाई कर रहे हैं, यहां काम कर रहे हैं। आने वाले समय में आप ओमान के विकास में, भारत के विकास में बहुत बड़ी भूमिका निभाएंगे। आप दुनिया को लीडरशिप देने वाली पीढ़ी हैं।

ओमान में रहने वाले भारतीयों को असुविधा न हो, इसके लिए यहां की सरकार हर संभव सहयोग दे रही है।

भारत सरकार भी आपकी सुविधा का पूरा ध्यान रख रही है। पूरे ओमान में 11 काउंसलर सर्विस सेंटर्स खोले हैं।

साथियों,

बीते दशक में जितने भी वैश्विक संकट आए हैं, उनमें हमारी सरकार ने तेज़ी से भारतीयों की मदद की है। दुनिया में जहां भी भारतीय रहते हैं, हमारी सरकार कदम-कदम पर उनके साथ है। इसके लिए Indian Community Welfare Fund, मदद पोर्टल, और प्रवासी भारतीय बीमा योजना जैसे प्रयास किए गए हैं।

साथियों,

भारत के लिए ये पूरा क्षेत्र बहुत ही स्पेशल है, और ओमान हमारे लिए और भी विशेष है। मुझे खुशी है कि भारत-ओमान का रिश्ता अब skill development, digital learning, student exchange और entrepreneurship तक पहुंच रहा है।

मुझे विश्वास है आपके बीच से ऐसे young innovators निकलेंगे जो आने वाले वर्षों में India–Oman relationship को नई ऊंचाई पर ले जाएंगे। अभी यहां भारतीय स्कूलों ने अपने 50 साल celebrate किए हैं। अब हमें अगले 50 साल के लक्ष्यों के साथ आगे बढ़ना है। इसलिए मैं हर youth से कहना चाहूंगा :

Dream big.
Learn deeply.
Innovate boldly.

क्योंकि आपका future सिर्फ आपका नहीं है, बल्कि पूरी मानवता का भविष्य है।

आप सभी को एक बार फिर उज्जवल भविष्य की बहुत-बहुत शुभकामनाएं।

बहुत-बहुत धन्यवाद!
Thank you!