தமது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் திரு டிரம்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். “இந்திய-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டுமுயற்சியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல உங்களைப் போலவே நானும் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். உக்ரைன் மோதலில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுவதை நோக்கிய உங்களது முன்முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“எனது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த எனதருமை நண்பர் திரு டிரம்ப் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்திய-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டுமுயற்சியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல உங்களைப் போலவே நானும் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். உக்ரைன் மோதலில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுவதை நோக்கிய உங்களது முன்முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.”
@POTUS
@realDonaldTrump
Thank you, my friend, President Trump, for your phone call and warm greetings on my 75th birthday. Like you, I am also fully committed to taking the India-US Comprehensive and Global Partnership to new heights. We support your initiatives towards a peaceful resolution of the…
— Narendra Modi (@narendramodi) September 16, 2025



