பிகானிரின் பலானாவில் ரூ.26,000 கோடிக்கும் மேலான மதிப்புடைய பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
ரயில்வே, சாலைகள், மின்சாரம், நீர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்
இந்தியாவின் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் மறுசீரமைக்கப்பட்ட 103 அம்ரித் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 22 அன்று ராஜஸ்தானில் பயணம்  மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில் பிகானிரில் தேஷ்னோக்கில் உள்ள கர்ணி மாதா கோவிலில் தரிசனம் செய்கிறார்.

காலை 11:30 மணியளவில், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தேஷ்னோக் நிலையத்தையும், பிகானிர்-மும்பை விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து, பலானாவில் ரூ.26,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

நாட்டில் ரயில் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் இந்தியாவின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடிக்கு மேல் செலவில் 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அம்ரித் நிலையங்களைத் திறந்து வைக்கிறார். அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் பிராந்திய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையிலும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. கர்ணி மாதா கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் தேஷ்னோக் ரயில் நிலையம், கோயில் கட்டிடக்கலை மற்றும் வளைவு கருப்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் உள்ள பேகம்பேட் ரயில் நிலையம் காகதீய பேரரசின் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தாவே நிலையம் 52 சக்தி பீடங்களில் ஒன்றான மா தவேவாலியைக் குறிக்கும் பல்வேறு சுவரோவியங்கள் மற்றும் கலைப் படைப்புகளை உள்ளடக்கியது மற்றும் மதுபனி ஓவியங்களை சித்தரிக்கிறது. குஜராத்தில் உள்ள டகோர் நிலையம் ராஞ்சோத்ராய் ஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மறுசீரமைக்கப்பட்ட அம்ரித் நிலையங்கள், நவீன உள்கட்டமைப்பை கலாச்சார பாரம்பரியம், பயணிகளுக்கு உகந்த வசதிகள் மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்த நிலையான நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கின்றன.

இந்திய ரயில்வே அதன் கட்டமைப்பை 100% மின்மயமாக்குவதை நோக்கி முன்னேறுகிறது. இது ரயில்வே செயல்பாடுகளை மிகவும் திறமையானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் ஆக்குகிறது. இதன்படி, பிரதமர் சுரு-சாதுல்பூர் ரயில் பாதைக்கு (58 கி.மீ) அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் மின்மயமாக்கப்பட்ட சூரத்கர்-பலோடி (336 கி.மீ); புலேரா-தேகானா (109 கி.மீ); உதய்பூர்-ஹிம்மத்நகர் (210 கி.மீ); பலோடி-ஜெய்சால்மர் (157 கி.மீ) மற்றும் சம்தாரி-பார்மர் (129 கி.மீ) ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

 

மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பிற்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் 3 வாகன சுரங்கப்பாதைகள் கட்டுதல், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். ராஜஸ்தானில் 7 சாலைத் திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.4850 கோடிக்கு மேல் மதிப்புள்ள சாலைத் திட்டங்கள், சரக்குப் போக்குவரத்து மற்றும் மக்களின் சீரான போக்குவரத்தை எளிதாக்கும். இந்த நெடுஞ்சாலைகள் இந்திய-பாகிஸ்தான் எல்லை வரை நீண்டு, பாதுகாப்புப் படையினருக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன.

அனைவருக்கும் மின்சாரம், பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தி என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தித்வானா குச்சாமனில் உள்ள பிகானேர் மற்றும் நவாவில் சூரிய மின்சக்தி திட்டங்கள், சிரோஹி மின் கட்டமைப்பு பரிமாற்ற நிறுவனம் பகுதி பி-க்கு பதிலாக பரிமாற்ற முறை மற்றும் பகுதி இ மின்சார கட்டமைப்பு மேவார் பரிமாற்ற நிறுவனம் உள்ளிட்ட மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பிகானேரில் சூரிய மின்சக்தி திட்டம், பிகானேர் வளாகம் மற்றும் நீமுச் மின் கட்டமைப்புக்கு பதிலாக பரிமாற்ற முறை, தூய்மையான ஆற்றலை வழங்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் ஃபதேஹ்கர்-II மின் நிலையத்தில் உருமாற்றத் திறனை அதிகரித்தல் உள்ளிட்ட மின் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்கட்டமைப்பு, இணைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுகாதார சேவைகள் மற்றும் தண்ணீர் வசதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 25 முக்கியமான மாநில அரசு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து அர்ப்பணிக்க உள்ளார். 3,240 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 750 கி.மீ. தொலைவிலான 12 மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி பராமரிப்பதற்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணித்தல் ஆகியவை இதில் அடங்கும்; இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் விரிவாக்கத்தில் கூடுதலாக 900 கி.மீ. புதிய நெடுஞ்சாலைகள் அடங்கும். பிகானேர் மற்றும் உதய்பூரில் மின் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார். மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ராஜ்சமந்த், பிரதாப்கர், பில்வாரா, தோல்பூரில் செவிலியர் கல்லூரிகளையும் அவர் திறந்து வைக்கிறார். ஜுன்ஜுனு மாவட்டத்தில் கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் ஃப்ளோரோசிஸ் தணிப்புத் திட்டம், அம்ருத் 2.0-ன் கீழ் பாலி மாவட்டத்தின் 7 நகரங்களில் நகர்ப்புற நீர் வழங்கல் திட்டங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நீர் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டி, அர்ப்பணிக்க உள்ளார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year

Media Coverage

One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 17, 2026
July 17, 2026

Green Trains, Private Rockets & Global Partnerships — PM Modi’s New India is Playing to Win