PM to participate in National PM Vishwakarma Programme
PM to lay foundation stone of PM MITRA Park in Amravati
PM to launch Acharya Chanakya Kaushalya Vikas Scheme and Punyashlok Ahilyabai Holkar Women Start-Up Scheme

பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

 

இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களைப் பிரதமர் வழங்குவார். இந்தத் திட்டத்தின் கீழ் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் உறுதியான ஆதரவை அடையாளப்படுத்தும் வகையில், 18 வர்த்தகங்களின் கீழ் 18 பயனாளிகளுக்கு பிரதமர், விஸ்வகர்மா கடன்களை வழங்குவார். அவர்களின் மரபு மற்றும் சமூகத்திற்கு நீடித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட நினைவு முத்திரையை அவர் வெளியிடுவார்.

 

மகாராஷ்டிராவின் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைப் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பூங்காவை மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்ஐடிசி) மாநில அமலாக்க நிறுவனமாக உருவாக்கி வருகிறது. ஜவுளித் தொழிலுக்காக 7 பிரதமரின் மித்ரா பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் பிரதமர் மித்ரா பூங்காக்கள் ஒரு முக்கிய படியாகும். இது உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவும், இது வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) உட்பட பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும். மேலும் இத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.

 

மகாராஷ்டிர அரசின் "ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாட்டு மையம்" திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். 15 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் தன்னம்பிக்கை பெறவும், பல்வேறு வேலை வாய்ப்புகளை அணுகவும் மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் சுமார் 1,50,000 இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

 

"புண்யஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் மகளிர் ஸ்டார்ட் அப் திட்டத்தை" பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கு ஆரம்ப கட்ட ஆதரவு வழங்கப்படும். 25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்த ஒதுக்கீட்டில் 25% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு நிர்ணயித்தபடி ஒதுக்கப்படும். பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தன்னிறைவுடன் சுதந்திரமாக இயங்க இது உதவும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Q4 GDP growth seen at 7.3%; CNBC-TV18 poll pegs FY26 at 7.5%

Media Coverage

India's Q4 GDP growth seen at 7.3%; CNBC-TV18 poll pegs FY26 at 7.5%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
June 05, 2026

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, June 28th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.