பகிர்ந்து
 
Comments
35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார்
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் 2021, அக்டோபர் அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் திரண்டிருக்கும் மக்களிடையே பிரதமர் உரையாற்றுவார்.

நாடு முழுவதும் தற்போது வரை பிஎம் கேர்ஸ் மூலம் மொத்தம் 1224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1100-க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன. இவற்றில் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதற்கு பின் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இதுவொரு சான்றாக உள்ளது.

மலைப்பகுதிகள், தீவுகள், சிக்கலான நிலைமை கொண்ட பகுதிகள் ஆகியவற்றின் சவால்களை கையாள்வதுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

7,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் இந்த உற்பத்தி நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இணையப் பக்கத்தின் மூலம் இவற்றின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை நிகழ் நேர கண்காணிப்புக்கான கருவிகளுடன் இவர்கள் செயல்பட்டனர்.

உத்தரகாண்ட் ஆளுனர் மற்றும் முதலமைச்சருடன் மத்திய சுகாதார அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
First batch of Agniveers graduates after four months of training

Media Coverage

First batch of Agniveers graduates after four months of training
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Secretary of the Russian Security Council calls on Prime Minister Modi
March 29, 2023
பகிர்ந்து
 
Comments

Secretary of the Security Council of the Russian Federation, H.E. Mr. Nikolai Patrushev, called on Prime Minister Shri Narendra Modi today.

They discussed issues of bilateral cooperation, as well as international issues of mutual interest.