இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது பயணத்தில் சிங்கப்பூர் மதிப்புமிக்க கூட்டாளியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
"இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமர் வோங்கிற்கு நன்றி!
'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது பயணத்தில் சிங்கப்பூர் ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாகும். மேம்பட்ட உற்பத்தி, திறன், டிஜிட்டல் கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நமது விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கான செயல் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்."
@LawrenceWongST
Thank you Prime Minister Wong for your words of confidence in India!
— Narendra Modi (@narendramodi) September 4, 2025
Singapore is a valued partner in our journey towards building a Viksit Bharat. We are committed to the swift implementation of the roadmap for our Comprehensive Strategic Partnership, with a focus on advanced… pic.twitter.com/9EjWWgeAeF





