சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த வீரரான பகவான் பிர்சா முண்டாவிற்கு அவர் தியாகியான தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி உள்ளார்.
பகவான் பிர்சா முண்டா பழங்குடியின சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் நல்வாழ்விற்காகவும், அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தியாகமும், அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது,
பகவான் பிர்சா முண்டா பழங்குடியின சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் நல்வாழ்விற்காகவும், அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவருடைய தியாகமும், அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
स्वतंत्रता संग्राम के महानायक भगवान बिरसा मुंडा जी को उनके बलिदान दिवस पर आदरपूर्ण श्रद्धांजलि। आदिवासी भाई-बहनों के कल्याण और उनके अधिकारों की रक्षा के लिए उन्होंने अपना जीवन समर्पित कर दिया। उनका त्याग और समर्पण देशवासियों को सदैव प्रेरित करता रहेगा। pic.twitter.com/IU2wiFhhqO
— Narendra Modi (@narendramodi) June 9, 2025


