ரிஷி பங்கிம் சந்த்ரா சட்டோபாத்யாய் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ரிஷி பங்கிம் சந்த்ரா சட்டோபாத்யாய் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது விரிவான பணிகள் மூலம், இந்திய நெறிமுறைகளின் மகத்துவத்தை அவர் வெளிப்படுத்தினார். அவர் எழுதிய வந்தே மாதரம், நாட்டுக்கு அடக்கத்துடன் சேவை செய்யவும், நமது சக இந்தியர்களின் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கும் நம்மை தூண்டுகிறது.’’ என குறிப்பிட்டுள்ளார்.
Paying homage to Rishi Bankim Chandra Chattopadhyay on his Jayanti. Through his extensive body of work, he showcased the greatness of India’s ethos. #VandeMataram, penned by him, inspires us to serve India with humility and devote ourselves towards empowering our fellow Indians.
— Narendra Modi (@narendramodi) June 27, 2021


