பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் அதிபர் மாண்புமிகு டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார். சந்திப்புக்கு முன்னதாக, குடியரசு சதுக்கத்தில் பிரதமரை அதிபர் திரு முய்சு வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பான, ஆழமாக வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டும், இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சி குறித்தும் பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் நம்பிக்கையின் ஆழமான பிணைப்புகளைப் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர், இது வலுவான மக்களிடையேயான உறவுகளால் வலுப்படுத்தப்பட்டது. 2024 அக்டோபரில் மாலத்தீவு அதிபரின் இந்திய வருகையின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 'விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மை'க்கான இந்திய-மாலத்தீவு கூட்டுத் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை கொள்கைகளுக்கு ஏற்ப மாலத்தீவுடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்கும்போது மாலத்தீவுக்கு முதலில் பதிலளிப்பவராக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அதிபர் திரு முய்சு பாராட்டினார். வளர்ச்சி கூட்டாண்மை, உள்கட்டமைப்பு ஆதரவு, திறன் மேம்பாடு, காலநிலை நடவடிக்கை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர், மேலும் இது சம்பந்தமாக, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைக் குறிப்பிட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், இரு தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சுற்றுலாவை மேம்படுத்த, டிஜிட்டல் பொருளாதாரத்தை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், யுபிஐ பயன்பாடு, ரூபே அட்டையை ஏற்றுக்கொள்வது மற்றும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வது தொடர்பான சமீபத்திய புரிதல்களை வரவேற்றார். நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான மேம்பாட்டு கூட்டாண்மை, ஏற்கனவே மக்களிடையேயான வலுவான உறவுகளுக்கு புதிய மதிப்பைச் சேர்ப்பதாக இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர்.

உலகளாவிய தெற்கு கூட்டாளிகளாக, காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துதல், பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் வானிலை அறிவியல் போன்றவற்றில் பூமி மற்றும் அதன் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததற்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஒற்றுமைக்கும் அதிபர் திரு முய்சுவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு, வானிலை ஆய்வு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, யுபிஐ, இந்திய மருந்தகம் மற்றும் சலுகை கடன் வரி ஆகிய துறைகளில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர். புதிய கடன் வரி, மாலத்தீவில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 4850 கோடி ரூபாய் [தோராயமாக 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள்] வழங்குகிறது. தற்போதுள்ள  கடன் வரிகளுக்கான திருத்த ஒப்பந்தமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இது மாலத்தீவின் வருடாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளை 40% குறைக்கிறது [51 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 29 மில்லியன் டாலராக]. முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் குறிப்பு விதிமுறைகளையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.

அட்டு நகரில் சாலைகள் மற்றும் வடிகால் அமைப்புத் திட்டத்தையும், பிற நகரங்களில் 6 உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இரு தலைவர்களும் மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தனர். மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்காக 3,300 சமூக வீட்டுவசதி அலகுகள் மற்றும் 72 வாகனங்களை பிரதமர், மாலத்தீவு அரசிடம் ஒப்படைத்தார்.

மாலத்தீவுகள் அரசிடம் இரண்டு அலகுகள் நடமாடும் மருத்துவமனைகள் [பிஹெச்ஐஎஸ்ஹெச்எம்] தொகுப்புகளையும் பிரதமர் ஒப்படைத்தார். க்யூபின் ஒரு பகுதியாக அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன், ஆறு மருத்துவ பணியாளர்களைக் கொண்ட குழுவை 72 மணி நேரம் வரை பராமரிக்க, உள்ளமைக்கப்பட்ட ஆதரவுடன் 200 காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்க முடியும்.

இயற்கையைப் பாதுகாப்பதில் தங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கு இணங்க, இரு தலைவர்களும் இந்தியாவின் "தாயின் பெயரில் ஒரு மரம்" மற்றும் மாலத்தீவின் "5 மில்லியன் மரக்கன்றுகள் நடும் உறுதிமொழி" பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக மாமரக் கன்றுகளை நட்டனர்.

மாலத்தீவுகள் மற்றும் அதன் மக்களை அதன் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின்படி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
55.49 crore UPI users onboarded by June 2026

Media Coverage

55.49 crore UPI users onboarded by June 2026
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Mr. Andy Burnham on assuming office as Prime Minister of the United Kingdom
July 21, 2026

Prime Minister Shri Narendra Modi today extended congratulations to Mr. Andy Burnham on assuming office as Prime Minister of the United Kingdom.

Shri Modi noted that India and the UK are bound by shared democratic values and enjoy wide-ranging cooperation across trade, investment, technology, defence, and people-to-people relations. With CETA entering into force this month, the Prime Minister pointed out that the bilateral partnership is poised to grow even stronger.

The Prime Minister stated that he looks forward to working closely with him to further deepen the India-UK Comprehensive Strategic Partnership and advance their shared Vision 2035.

In a post on X, the Prime Minister shared:

"Warmest congratulations to Mr. Andy Burnham on assuming office as Prime Minister of the United Kingdom.

India and the UK are bound by shared democratic values and enjoy wide-ranging cooperation across trade, investment, technology, defence and people-to-people relations. With CETA entering into force this month, our bilateral partnership is poised to grow even stronger.

I look forward to working closely with you to further deepen the India-UK Comprehensive Strategic Partnership and advance our shared Vision 2035.

@andyburnham"