“The seed that I sowed 12 years ago has become a grand banyan tree today”
“India is neither going to stop nor is it going to get tired”
“The youth of India themselves have taken the responsibility of every campaign of New India”
“There is only one mantra for success - 'Long term planning, and continuous commitment'
“We started recognizing the talents of the country and giving them all necessary support”

 

பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத்தில் 11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இது வெறும் விளையாட்டு மகாகும்பமேளா மட்டுமல்ல என்றும், குஜராத் இளைஞர் சக்தியின் மகாகும்பமேளா என்றும் தெரிவித்தார்.

பெருந்தொற்று காரணமாக மகாகும்பமேளா இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி விளையாட்டு வீரர்களுக்கு புதிய நம்பிக்கையையும், ஆற்றலையும் நிறைத்துள்ளது என்று கூறினார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தாம் விதைத்த விதை இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.

2010 –ம் ஆண்டு அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த திரு நரேந்திர மோடி, இந்த விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். அப்போது 16 விளையாட்டுக்களில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இன்று 36 விளையாட்டுக்கள், 26 பாரா விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கலந்து கொள்ள 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

2010 –ம் ஆண்டு அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த திரு நரேந்திர மோடி, இந்த விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். அப்போது 16 விளையாட்டுக்களில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இன்று 36 விளையாட்டுக்கள், 26 பாரா விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கலந்து கொள்ள 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

இளைஞர்கள் குறுகிய வழிகளைபின்பற்றுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், நீண்டகால திட்டமிடுதல், தொடர் அர்ப்பணிப்பு ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும், எந்த வெற்றியும், தோல்வியும் அத்துடன் நின்று விடுவதில்லை என்றும் கூறினார். இதுவே வெற்றிக்கான  தாரக மந்திரம் என்று அவர் தெரவித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
FPOs’ sales rise via commodity exchanges in FY26

Media Coverage

FPOs’ sales rise via commodity exchanges in FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 11, 2026
May 11, 2026

Society Above Politics: PM Modi’s Call for a Stronger, Self-Reliant & Sacred Bharat