Let us view our diaspora not only in terms of 'Sankhya' but let us see it as 'Shakti' : PM Modi
Pravasi Bharatiya Kendra shows what it means to be Indian, the meaning of association with India: PM Modi
World's keenness to engage with India has risen. Our diaspora can play a vital role in furthering India's engagement with the world: PM
Indian community all over the world is a strength that can convert brain drain to brain gain: PM Modi
In the last two years, our Government has rescued people from conflict situations, not just Indians but also foreigners: PM

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மையத்தை புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் இதுபோன்ற நிகழ்வுக்கு மிகவும் பொருத்தமான நாள் என்று கூறினார். மகாத்மா காந்தி இந்தியாவை விட்டுச் சென்றுவிட்ட போதிலும், நாட்டுக்கான தேவை அவரை இங்கே திரும்பவும் கொண்டு வந்து சேர்த்தது என்றும் அவர் குறிப்பிட்டார் 

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை வெறும் எண்ணிக்கையாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு வலிமையாகப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். பல ஆண்டுகளாக “அறிவாளிகள் வெளியேறுகிறார்கள்” என்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். ஆனால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நமது வலிமையாக நாம் பார்த்தால், அதை “அறிவாளித்தனத்தின் ஆதாயம்” என மாற்றலாம் என்றும் பிரதமர் கூறினார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி தொடங்கி வைத்தார் என்றும், அடுத்தடுத்து வந்த அரசுகள் அதை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிடத்தக்க மனிதாபிமான பணிகளை ஆற்றியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். போர் மற்றும் பேரழிவு சூழ்நிலைகளில் இந்தியர்கள் மட்டுமின்றி, வேறு பல நாடுகளின் குடிமக்களையும் எவ்வாறு இந்தியா காப்பாற்றியது என்பது பற்றி அவர் குறிப்பிட்டார்.

எந்த நாட்டையும் இந்தியா தாக்கியது கிடையாது என்று பிரதமர் கூறினார். இரண்டு உலகப் போர்களில் அந்நிய நாடுகளைக் காப்பாற்ற இந்திய வீரர்கள் செய்தத் தியாகங்களை அவர் நினைவுகூர்ந்தார். இந்தத் தியாகத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எந்த நாட்டையும் இந்தியா தாக்கியது கிடையாது என்று பிரதமர் கூறினார். இரண்டு உலகப் போர்களில் அந்நிய நாடுகளைக் காப்பாற்ற இந்திய வீரர்கள் செய்தத் தியாகங்களை அவர் நினைவுகூர்ந்தார். இந்தத் தியாகத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s annual food exports nearing Rs 5 lakh crore mark: Piyush Goyal

Media Coverage

India’s annual food exports nearing Rs 5 lakh crore mark: Piyush Goyal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 11, 2026
March 11, 2026

From Silent Medical Revolution to Global Manufacturing Hub: Salute to PM Modi's Relentless Push for a Stronger, Self-Reliant India