மாவோயிச அச்சுறுத்தலை அழிப்பதற்கும், நமது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்றமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதற்கும் அரசின் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், படையினரின் முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் திரு அமித் ஷாவின் பதிவிற்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:
“இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றிக்காக நமது படையினரைக் கண்டு பெருமைப்படுகிறோம். மாவோயிச அச்சுறுத்தலை அழிப்பதற்கும், நமது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்றமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதற்கும் நமது அரசு உறுதிபூண்டுள்ளது.”
Proud of our forces for this remarkable success. Our Government is committed to eliminating the menace of Maoism and ensuring a life of peace and progress for our people. https://t.co/XlPku5dtnZ
— Narendra Modi (@narendramodi) May 21, 2025


