அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தய்-அகோம் கலாச்சாரம், தய் மொழியைப் பிரபலப்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவை அசாம் இளைஞர்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“அசாம் தினத்தையொட்டி எனது அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருகிறது. சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தய்-அகோம் கலாச்சாரம், தய் மொழியைப் பிரபலப்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவை அசாம் இளைஞர்களுக்கு பெரும் பயனளிக்கும்.”
Best wishes to my sisters and brothers of Assam on Asom Diwas.
— Narendra Modi (@narendramodi) December 2, 2025
Today is an occasion to reiterate our commitment to fulfilling the vision of Swargadeo Chaolung Sukapha. Over the last few years, the NDA Governments in the Centre and Assam are working tirelessly to boost the…
অসমৰ মোৰ ভাই-ভনীসকললৈ অসম দিৱসৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো।
— Narendra Modi (@narendramodi) December 2, 2025
আজিৰ দিনটো হৈছে স্বৰ্গদেউ চাওলুং চুকাফাৰ দূৰদৰ্শী দৃষ্টিভংগী পূৰণৰ বাবে আমাৰ অংগীকাৰক পুনৰ দোহৰাৰ এক উপলক্ষ। যোৱা কেইবছৰমানৰ পৰা কেন্দ্র আৰু অসমৰ এন ডি এ চৰকাৰসমূহে অসমৰ প্রগতি বৃদ্ধিৰ বাবে অক্লান্তভাৱে কাম কৰি আছে৷ ভৌতিক…


