உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி 2025-ல், இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, சாதனை படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, 9 தங்கம் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை வென்று, இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமான பதக்கங்களைக் குவித்து, இந்திய குத்துச்சண்டைக்கு ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த வெற்றியானது நாட்டின் குத்துச்சண்டை வீரர்களின் உறுதிப்பாடு, மன உறுதி மற்றும் இடைவிடாத ஊக்கத்தால் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி “சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது அசாதாரணமான விளையாட்டு வீரர்கள் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி 2025-ல், குறிப்பிடத்தக்க, செயல்திறனை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்துள்ளனர்! அவர்கள் 9 தங்கம் உட்பட, இதுவரை கண்டிராத அளவுக்கு 20 பதக்கங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். இது நமது குத்துச்சண்டை வீரர்களின் விடா முயற்சியாலும் மன உறுதியினாலும் விளைந்தது. அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறக்க எனது நல்வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Our phenomenal athletes delivered an extraordinary, record-breaking performance at the World Boxing Cup Finals 2025! They brought home an unprecedented 20 medals including 9 Golds. This is due to the resolve and determination of our boxers. Congratulations to them. Best wishes… pic.twitter.com/jTLeJntODZ
— Narendra Modi (@narendramodi) November 24, 2025


