பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிணைக் கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் எந்த பகுதியிலும் தீவிரவாதத்தில் எந்த வடிவத்தையும் ஏற்க முடியாது என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“எனது நண்பர் பிரதமர் திரு நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக வாழ்த்து தெரிவித்தேன். பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. உலகின் எந்தவொரு பகுதியிலும் தீவிரவாதத்தின் எந்தவொரு வடிவத்தையும் ஏற்க முடியாது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளேன்.”
@netanyahu”
Called my friend, Prime Minister Netanyahu, to congratulate him on the progress made under President Trump’s Gaza peace plan. We welcome the agreement on the release of hostages and enhanced humanitarian assistance to the people of Gaza. Reaffirmed that terrorism in any form or…
— Narendra Modi (@narendramodi) October 9, 2025


