Country is not formed by governments alone. What is also important is fulfilling our duties as citizens: PM
Our conduct as citizens will determine the future of India, it will decide the direction of new India: PM

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று(16.02.2020), உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஜங்கம்வாடி மடத்தில் அமைந்துள்ள ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், 19 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த்’ நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். மேலும் ‘ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த்’ செல்போன் செயலியையும் அவர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதிய தசாப்தத்தின் தொடக்கத்தில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது பொருத்தமானது என்றும், இந்த தசாப்தம் 21 ஆம் நூற்றாண்டில் உலக அரங்கில் இந்தியாவின் பங்கை மீண்டும் நிலைநிறுத்தும் என்றும் தெரிவித்தார்.

செல்போன் செயலி மூலம் ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த் நூலை டிஜிட்டல் மயமாக்குவது, இளைய தலைமுறையினர் உடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அவர்களது வாழ்க்கையிலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த செல்போன் செயலி மூலம் கிரந்த் தொடர்பான தலைப்புகளில் ஆண்டுதோறும் விநாடிவினா போட்டிகளை நடத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். கிரந்த் நூலை 19 மொழிகளில் மொழிபெயர்த்திருப்பது, இந்த நூல் ஏராளமான மக்களை சென்றடைய உதவும் என்றார்.

“குடிமகன் என்ற முறையில் நமது செயல்பாடுகள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதோடு, புதிய இந்தியாவிற்கான வழியையும் காட்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார். மகான்கள் காட்டிய வழியில் செல்வதன் மூலம் நமது வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நாம் நிறைவேற்றிக் கொள்வதோடு, தேச வளர்ச்சிக்கும் முழுமையாக ஒத்துழைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தூய்மை இயக்கத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதிலும் பொதுமக்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார். இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். நீர்வள இயக்கத்தை வெற்றியடையச் செய்யவும் அனைவரும் பாடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பொதுமக்களின் பங்களிப்பு மூலமே இது சாத்தியமாயிற்று என்றும் கூறியுள்ளார். கங்கை புனரமைப்புத் திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருப்பதுடன், ரூ.21,000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ராமர்கோவில் கட்டுவதற்காக, ‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை துவங்கப்பட்டிருப்பதாக அரசு அண்மையில் அறிவித்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும். 67 ஏக்கர் பரப்பிலான நிலத்தை இந்த அறக்கட்டளைக்கு மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s jewellery exports rise 2.4% to $9.17 billion; studded gold emerges as bright spot

Media Coverage

India’s jewellery exports rise 2.4% to $9.17 billion; studded gold emerges as bright spot
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கடின உழைப்பு, முயற்சியின் வலிமையை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
August 14, 2026
PM shares Sanskrit Subhashitam highlighting the power of hard work and human endeavor

பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் இந்தத் தினத்தை அனுசரிக்கும் இந்த வேளையில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரது துணிச்சலான நடவடிக்கைளையும் நினைவுகூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தருணம் என்றும், இதன் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அன்புக்குரியவர்களை இழந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலைக் கடந்து மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துத் துன்பங்களைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் எடுத்துரைத்துள்ளார். அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மனித ஆன்மாவின் வலிமையை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகள் நிறைந்த காலத்திலிருந்து மீண்டெழுந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை வழங்கிய அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

இக்கட்டான தருணங்களில் தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைத் தங்களது துணிச்சல், திறமையின் மூலம் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ணம், ஒற்றுமையின் உணர்வைத் தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய முயற்சி மூலம் பல்வேறு கலைகள், அறிவியல், தொழில்நுட்பத் திறன், கைவினைத்திறன், புதுமைக் கண்டுபிடிப்புகள் செழித்து வளர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே விதியைச் சார்ந்திடாமல் துணிச்சல், விடாமுயற்சி, தொடர் செயல்பாடுகள் மூலம் இலக்குகளை அடைவதற்கு மன உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

“இன்றைய தினத்தை பிரிவினைவாதத்தின் கொடுமைகளை நினைவுகூரும் தினமாக அனுசரித்து வருகிறோம். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் துணிச்சலையும் இந்தத் தினத்தில் நினைவுகூர்கிறோம். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தருணம். குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்து அளவற்ற துன்பங்களை அனுபவித்தனர். இத்தகைய இக்கட்டான தருணங்களைக் கடந்து மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து சோதனைகளைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் மனிதகுல ஆன்மாவின் வலிமையை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தினம் நம் நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான மன வலிமையை அதிகரிக்கட்டும்.”

"विभाजन विभीषिका स्मृति दिवस पर उन सभी देशवासियों का हृदय से नमन, जिन्होंने उस वीभत्स दौर से निकलकर देश की प्रगति में अमूल्य योगदान दिया। उन्होंने अपने साहस और सामर्थ्य से दिखाया कि कैसे विपरीत परिस्थितियों में भी संकल्पों को सिद्ध किया जाता है। आइए, सद्भावना और एकजुटता की राष्ट्रीय भावना को और सशक्त करें।

उद्यमस्य प्रसादेन दृश्यन्ते विविधाः कलाः।
कातरा एव जल्पन्ति यद् भाव्यं तद् भविष्यति॥”

It is through hard work, enterprise and dedicated effort that diverse arts, science, technological skills, craftsmanship and innovations flourish, paving the way for success. Therefore, one should not remain dependent on fate; rather, one should move steadily towards one's goals with courage, diligence and persistent effort, for it is human endeavor that shapes destiny.