பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ரூ.11,718.24 கோடி செலவில் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்: (i) வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு - ஏப்ரல் முதல் செப்டம்பர், 2026 வரை (ii) மக்கள் தொகை கணக்கெடுப்பு - பிப்ரவரி 2027 (லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு இருக்கும் பகுதிகளுக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் 2026-ல் நடத்தப்படும்).

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரம்மாண்டமான பணியை சுமார் 30 லட்சம் களப்பணியாளர்கள் முடிப்பார்கள்.

தரவு சேகரிப்புக்கு மொபைல் செயலியும், கண்காணிப்பு நோக்கத்திற்காக மத்திய போர்ட்டலைப் பயன்படுத்துவதும் சிறந்த தரமான தரவை உறுதி செய்யும்.

தரவு பரவல் மிகவும் சிறப்பாகவும் பயனர் நட்பு முறையிலும் இருக்கும். இதனால் கொள்கை வகுப்பதற்கு தேவையான தகவல்கள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் பதில் கிடைக்கும்.

 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான பணிகளை முடிக்க, உள்ளூர் நிலைகளில் சுமார் 18,600 தொழில்நுட்ப பணியாளர்கள் சுமார் 550 நாட்களுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள். அதாவது சுமார் 1.02 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் இருக்கும். கிராமம், நகரம் மற்றும் வார்டு மட்டத்தில் முதன்மை தரவுகளின் மிகப்பெரிய ஆதாரமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. இது வீட்டுவசதி நிலை மற்றும் சொத்துக்கள், மக்கள்தொகை, மதம், எஸ்சி & எஸ்டி, மொழி, எழுத்தறிவு மற்றும் கல்வி, பொருளாதார செயல்பாடு, இடப்பெயர்வு மற்றும் கருவுறுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த நுண் தரவை வழங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள், 1990 ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகின்றன.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'We'll provide AI skill training to 1 crore youth': PM Modi's big announcement on Independence Day 2026

Media Coverage

'We'll provide AI skill training to 1 crore youth': PM Modi's big announcement on Independence Day 2026
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 15, 2026
August 15, 2026

Azadi Ka Amrit Mahotsav Continues: PM Modi’s Independence Day Vision Unites Growth, Youth Power & National Pride