The atmosphere of Bengaluru,the environment here, is something quite unique;This city is known worldwide for software and services, but this city has also taken India's cultural identity, Spirituality, and spiritual consciousness to new heights: PM
Seva Paramo Dharma (Service is the supreme duty), is the natural character of our society: PM
Our Swachh Bharat Abhiyan, is not just a government programme, but it has become a natural part of people's lives; Now, it is advancing driven by the strength of the society: PM
The realization of Viksit Bharat will only be possible through such youth, who are mentally calm, who are socially responsible, and who are sensitive towards society: PM

"மதிப்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்களே, இங்கே கூடியிருக்கும் துறவிகளே, சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!

இந்த காலைப் பொழுது ஒரு மிகச்சிறந்த உணர்வைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைகளின் வேத மந்திர ஓதுதலுடன் கூடிய வரவேற்பு, பகவான் ஸ்ரீ கணேசரின் தரிசனம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜியின் 70 ஆண்டுகள் மற்றும் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் 45 ஆண்டுகள் - இவை அனைத்தும் எனது நினைவில் என்றும் நிலைத்திருக்கக்கூடிய தருணங்களாகும். இந்த அற்புதமான கொண்டாட்டத்திற்கு என்னை அழைத்ததற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

 

சற்று நேரத்திற்கு முன்பு குருதேவ் பல விஷயங்களைக் கூறினார். அவர் என்னைப் புகழ்வதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவர் எனக்கு வேலைகளை ஒதுக்கிக் கொண்டிருப்பதாகவே நான் உணர்ந்தேன். நீங்கள் சரியாகச் சொன்னீர்கள், எனக்கு நன்றி சொல்ல முடியாது; ஏனெனில் நான் உங்களுக்குச் சொந்தமானவன். நான் உங்கள் மத்தியிலும் உங்களுக்காகவுமே வந்துள்ளேன், நான் இன்று எங்கே இருந்தாலும் அது உங்களால்தான். இன்று குருதேவின் 70-வது ஆண்டிற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது, ஆனால் நான் இந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் வெளிப்படையாகச் சொல்கிறேன் - உங்கள் நூற்றாண்டு விழா வரும்போதும், நான் மீண்டும் வருவேன்."

இன்று தெய்வீகமான மற்றும் பிரம்மாண்டமான தியானக் கோயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சியம் தெளிவாக இருந்து, சேவை மனப்பான்மையுடன் செயல்படும்போது, ஒவ்வொரு முயற்சியும் இனிமையான பலனைத் தரும். மற்றவை நடக்குமோ இல்லையோ, நாம் அனைவரும் அந்தத் தாமரையின் நிழலில்  இருக்கிறோம். உங்கள் புரிதல் வளர வளர, கைதட்டுங்கள். குருதேவின் ஆசீர்வாதத்துடன், இந்தத் தாமரையின் நிழல் தேசத்தைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும். இந்த தியானக் கோயிலுக்காக 'வாழும் கலை' குடும்பத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பெங்களூருவின் சூழல் எப்போதும் தனித்துவமானது. இந்த நகரம் மென்பொருள் மற்றும் சேவைகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால், இந்த நகரம் இந்தியாவின் கலாச்சார அடையாளம், ஆன்மீகம் மற்றும் ஆன்மீக உணர்வுக்கும் புதிய உயரங்களைக் கொடுத்துள்ளது. யோகா, தியானம், பிராணாயாமம் ஆகியவை எப்போதும் இந்தியாவின் பாரம்பரியத்தில் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்து வருகின்றன. குருதேவ் சொன்னது போல, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவின் இந்த ஆன்மீகப் பாரம்பரியங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்; இந்தியாவின் பல நிறுவனங்கள் இந்தத் தொன்மையான பாரம்பரியங்களிலிருந்துதான் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.

 

நண்பர்களே,

இந்த உத்வேகத்தில்தான், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பு வாழும் கலை எனும் விதையை விதைத்தார். இன்று அது ஒரு மிகப்பெரிய ஆலமரமாக நம் முன்னே நிற்கிறது. இந்த ஆலமரத்தின் ஆயிரக்கணக்கான விழுதுகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. நான் அரசுப் பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், உங்களோடு தொடர்புடைய யாரோ ஒருவரை நான் எப்போதும் சந்திக்கிறேன்.

நண்பர்களே,

இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த ஒரு நாடு. எத்தனையோ மொழிகள், எத்தனையோ பாரம்பரியங்கள், வெவ்வேறு ஆசாரங்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் - இவை அனைத்தையும் நாம் காணும்போது, ஒரு இயல்பான கேள்வி நம் மனதில் எழுகிறது: இந்த அழகான பன்முகத்தன்மைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் அடிப்படை அம்சம் எது? அதற்கான விடை - நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வது என்பதே ஆகும்.

நமது வேத நூல்கள் கூறுகின்றன: 'அஷ்டாதச புராணேஷு வியாஸஸ்ய வசனத்வயம்; பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்'. அதாவது, பிறருக்குச் சேவை செய்வதே புண்ணியம், பிறருக்குத் துன்பம் விளைவிப்பதே பாவம். சேவையே உன்னதமான தர்மம், இதுவே நமது சமூகத்தின் இயல்பான குணமாகும். தலைமுறை தலைமுறையாக, இந்த விழுமியங்களின் ஓட்டம் நம்மை வடிவமைத்துள்ளது, நமக்கு உத்வேகம் அளித்துள்ளது, மேலும் நம்மை ஆற்றல்மிக்கவர்களாக மாற்றியுள்ளது. இந்தியாவின் பல ஆன்மீக இயக்கங்கள் இறுதியில் மனிதநேயத்திற்கான சேவையின் மூலமே தங்களை வெளிப்படுத்தியுள்ளன.

 

வாழும் கலை அமைப்பின் ஒவ்வொரு முயற்சியிலும் இந்தச் சேவை மனப்பான்மை பிரதிபலிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது திரையிடப்பட்ட வீடியோவில் கூட சேவைகளும், மக்களின் நலன்களுமே நிறைந்திருந்தன. வாழும் கலை பயணத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

"சமூகத்தின் சக்தி இணையும்போதுதான் எந்தவொரு பிரச்சாரமும் வெற்றியடைகிறது. எனவே, ஒவ்வொரு முக்கியமான பணிக்கும் சமூகத்தின் சக்தியை விழித்தெழச் செய்வது மிகவும் அவசியமாகும். அரசியலையும் அரசாங்கங்களையும் விட சமூகமே அதிக சக்தி வாய்ந்தது என்று நான் எப்போதும் நம்புகிறேன். தேசத்தை நிர்மாணிப்பதில் சமூகம் தானாகவே முன்வந்து தீவிரமாகப் பங்கேற்கும் போதுதான் எந்தவொரு அரசாங்கமும் வெற்றி பெற முடியும். நமது 'தூய்மை பாரத இயக்கத்தை' உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு அரசாங்கத் திட்டம் மட்டுமல்ல, இது மக்களின் வாழ்க்கையில் ஒரு இயல்பான அங்கமாகிவிட்டது. சமூகத்தின் சக்தியைக் கொண்டே இது முன்னோக்கி நகர்கிறது.

நண்பர்களே,

சமூகம் சுறுசுறுப்பாகச் செயல்படும்போது, நாட்டின் மிகப்பெரிய சவால்களுக்குக் கூட கூட்டுத் தீர்வுகளைக் காண முடியும். வாழும் கலை நிறுவனம் எப்போதும் சமூகத்தின் சக்தியைத் தன்னுடன் அழைத்துச் செல்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் சமூக அணுகுமுறைக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளீர்கள். மரக் கன்றுகளை நடுதல் பிரச்சாரங்கள், கிராமப்புறங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய  கிராம மையங்கள், பெண்கள் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் அல்லது சிறைக்கைதிகளின் மனநலத்தை மேம்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் என - இந்த முயற்சிகள் அனைத்தும் நாட்டின் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

 

நண்பர்களே,"

"இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவரையும் இன்னும் ஒரு விஷயத்திற்காகவும் நான் பாராட்ட வேண்டும், அது இளைஞர் சக்தி மீது நீங்கள் காட்டும் அக்கறையாகும். இன்றைய உலகில், மிகப்பெரிய மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் அறிவியல் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்து கொண்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே உருமாற்றி வருகின்றன. இந்தியா இந்த மாற்றங்களில் பங்கேற்பது மட்டுமல்லாமல், பல துறைகளில் முன்னணியிலும் உள்ளது.

நமது டிஜிட்டல் புரட்சி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவை உலகளவில் முதன்மை நாடாக மாற்றியுள்ளது. இன்று உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும், எதிர்கால நோக்கோடும் முன்னேறி வருகின்றன. இந்தியா மிக விரைவாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் நாடாக உருவெடுத்துள்ளது. நமது இளைஞர்கள் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகின்றனர்.

நாட்டின் இந்த அனைத்து சாதனைகளுக்கும் மிகப்பெரிய காரணம் நமது இளைஞர்கள்தான். இதில் குருதேவ் மற்றும் வாழும் கலை அமைப்பு, இன்றைய நவீன கால சவால்களுக்குத் தீர்வு காண்பதில் இளைஞர்களுக்குப் பெரிதும் உதவி வருகிறது.

 

நண்பர்களே,"

"இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், எங்கோ தொலைதூரத்தில் இருப்பவர்கள் கூட ஒரு நொடியில் ஒருவரோடு ஒருவர் இணைந்து விடுகிறார்கள். ஆனால், நாம் உலகத்தோடு இணைகிறோமோ இல்லையோ, முதலில் நமக்குள் நாம் இணைவது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமக்குள் நாம் இணைந்துகொள்ளும் அந்தத் திறன்—அது ஒரு விதையை விதைப்பதாக இருந்தாலும் சரி, அதை வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது அதை வலிமைப்படுத்துவதாக இருந்தாலும் சரி—இந்த உன்னதமான பாரம்பரியத்தின் மூலமே சாத்தியமாகும்.

மனதளவில் அமைதியாகவும், சமூகப் பொறுப்புணர்வுடனும், சமூகத்தின் மீதான அக்கறையுடனும் இருக்கும் இளைஞர்களால்தான் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா  உருவாக்கப்படும். அதனால்தான் ஆன்மீக நலம், மன ஆரோக்கியம், யோகா, தியானம் ஆகியவற்றில் நீங்கள் மேற்கொண்டு வரும் முக்கியமான பணிகள் மற்றும் உங்களைப் போன்ற அமைப்புகள் மிகவும் இன்றியமையாதவை. இத்தகைய நிறுவனங்கள் மக்களிடையே பிணைப்பு, ஒருமைப்பாடு மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்துகின்றன. அதே நேரத்தில், இத்தகைய அமைப்புகள் மக்கள் தங்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.

இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த 'தியானக் கோயில்', வரும் தலைமுறைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அமைதி மற்றும் ஆரோக்கியம் வழங்கும் மையமாகத் திகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,"

"நீங்கள் அனைவரும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் உங்கள் கடமைகளை மிகச்சிறப்பாக ஆற்றி வருகிறீர்கள். இருப்பினும், நான் உங்கள் மையத்திற்கு வரும்போதெல்லாம், சில கோரிக்கைகளை முன்வைக்காமல் என்னால் இருக்க முடியாது. நான் பேசுவதற்கு முன்பே குருதேவ், 'உங்கள் ஒன்பது கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன' என்று கூறிவிட்டார், எனவே சொல்வதற்கு ஏதுமில்லை; ஆனாலும் பழக்கங்கள் அவ்வளவு எளிதில் போகாது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பல நிலைகளில் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. வாழும் கலை போன்ற அமைப்புகள் இதில் முக்கியப் பங்காற்ற முடியும் மற்றும் இந்த மாற்றத்தின் வலுவான பாதுகாவலர்களாக மாற முடியும். உங்களில் பலர் விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்கள். இங்கே திரையிடப்பட்ட படத்தில் காட்டியது போல, விவசாயிகளை இயற்கை விவசாயத்துடன்  இணைக்க இன்னும் கூடுதலான முயற்சிகள் தேவைப்படுகின்றன. இன்று, மனிதர்கள் நோய்வாய்ப்படும்போது இயற்கை மருத்துவத்தைத் தேடுகிறார்கள்; அதுபோலவே நமது பூமித் தாய்க்கும் இயற்கை மருத்துவம் தேவைப்படுகிறது. ரசாயன உரங்கள் நமது வயல்களையும், நமது பூமித் தாயையும் சீரழித்துள்ளன. ரசாயனங்களிலிருந்து நமது பூமித் தாயைக் காப்பாற்றுவதும் ஒரு 'வாழும் கலை'  தான்.

'தாய்க்கு ஒரு மரக்கன்று'  பிரச்சாரத்தை விரிவுபடுத்துவதற்கு நீங்கள் பெரும் பலத்தை அளிக்க முடியும். ஏனெனில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் ஒரு 'வாழும் கலை' தான். சூழலியலையும்  பொருளாதாரத்தையும் பிரிக்க முடியாது. 'சொட்டு நீருக்கு அதிக விளைச்சல்' என்பதன் மூலம், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. உங்கள் ஒத்துழைப்புடன், இதில் இன்னும் சிறந்த முடிவுகள் கிடைக்கும். ஏனெனில், ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பதும் ஒரு 'வாழும் கலை' தான். இன்னும் சில வாரங்களில் பருவமழை தொடங்க உள்ளது.

நண்பர்களே,"

"நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை பரவலாகக் கொண்டு செல்ல இதுவே சரியான தருணமாகும். அதேபோல் மின்சாரத்தைச் சேமிப்பது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது என இவை அனைத்தும் கூட ஒரு 'வாழும் கலை' தான். இன்று நாடு சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வியல் இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது அதிக பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு உயிரோட்டமான இயக்கமாகும். இயற்கையோடு சமநிலை பேணும் ஒரு வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க இது அழைப்பு விடுக்கிறது. என் பார்வையில், 'மிஷன் லைஃப்' என்பதும் 'வாழும் கலை'யின் ஒரு வெளிப்பாடுதான்.வரும் நாட்களில், நீங்கள் எப்போதும் செய்வது போலவே 'வாழும் கலை'யின் பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். சமூகத்தின் பெரும்பகுதியை ஒன்றிணைப்பதில் நீங்கள் அதிக முன்னுரிமை அளிப்பீர்கள்; நாம் குருதேவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, இந்த இலக்குகள் அனைத்தையும் நாம் நிறைவேற்றி இருப்போம்.

மீண்டுமொருமுறை, குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழும் கலை குடும்பத்தின் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் அவர்களின் சேவை மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பிற்காக நான் இதயபூர்வமாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் மத்தியிலே வரவும், இந்த புனிதமான சூழலில் சில தருணங்களைச் செலவிடவும், அந்தத் தாமரையின் நிழலில் சிந்திக்கவும் எனக்கு வாய்ப்பளித்தீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் குருதேவ்!"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates

Media Coverage

PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 24, 2026
June 24, 2026

Appreciation for PM Modi’s Vision for Holistic Growth, Furthering Technology as well as Traditions