Prime Minister releases a commemorative coin and postage stamp on the occasion
“The country is moving ahead as per the teachings of the revered Gurus”
“India’s freedom from hundreds of years of slavery cannot be separated from its spiritual and cultural journey”
“In front of Aurangzeb's tyrannical thinking Guru Tegh Bahadur ji, acted as  'Hind di Chadar'”
“We feel blessings of Guru Tegh Bahadur ji everywhere in the aura of 'New India’”
“We see 'Ek Bharat' everywhere in the form of the wisdom and blessings of Gurus”
“Today's India strives for peace with complete stability even in the midst of global conflicts, and India is equally firm for defence and security of the country”

மேடையில் இருக்கும் அனைத்துப் பிரமுகர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்களுக்கும், காணொலி மூலம் உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டுள்ள அனைத்துப் பிரமுகர்களுக்கும் வணக்கம்!

குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். ஷபாத் கீர்த்தனையைக் கேட்டவுடன் நான் உணர்ந்த அமைதியை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம். 

இன்று குருவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல்தலை மற்றும் நாணயத்தை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது நம் குருக்களின் ஆசிர்வாதம் என்று நான் நம்புகிறேன். முன்னதாக 2019-ல் குரு நானக் தேவ் ஜியின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றோம், 2017-ல் குரு கோவிந்த் சிங் ஜியின் 350-வது பிறந்த நாளை கொண்டாடினோம்.

இன்று நமது நாடு முழு பக்தியுடன் நமது குருக்களின் லட்சியங்களில் முன்னேறி வருவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், குருக்களின் பாதங்களில் மரியாதையுடன் வணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும், குருவாணி மீது நம்பிக்கை கொண்டுள்ள உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் பிரகாஷ் பர்வ் திருநாளில் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே,

பல முக்கியமான காலகட்டங்களுக்கு சாட்சியாக செங்கோட்டை இருந்து வருகிறது. இந்தக் கோட்டை குரு தேக் பகதூர் சாஹிப் அவர்களின் தியாகத்தைக் கண்டதோடு மட்டுமின்றி, நாட்டிற்காக தியாகம் செய்த மக்களின் மனதையும் கண்டுள்ளது. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், பல இந்தியக் கனவுகள் இங்கிருந்து எதிரொலித்தன. எனவே, விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியின் போது, ​​செங்கோட்டையில் இந்த நிகழ்வு நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.

நண்பர்கள்,

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் இன்று நாம் சென்றடைந்துள்ள இடம் சாத்தியமாகியுள்ளது. சுதந்திர இந்தியா, ஜனநாயக இந்தியா, தானே முடிவெடுக்கும் இந்தியா என்ற கனவை நனவாக்க கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இந்தியா உலகத்திற்கு தொண்டின் செய்தியை பரப்புகிறது.  

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, நம்முடையது ஒரு சிறந்த பாரம்பரியம் மற்றும் சிறந்த கலாச்சாரம்.

ரிஷிகளும், முனிவர்களும், குருக்களும் தங்களின் பல்லாயிரக்கணக்கான வருட தவத்தால் இந்நிலத்தை அழகுபடுத்தி, தங்கள் சிந்தனைகளால் வளப்படுத்தியுள்ளனர். இந்த பாரம்பரியத்தை போற்றும் வகையில், குருக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர்.

எனவே நண்பர்களே,

பல ஆண்டுகால காலனித்துவத்திலிருந்து இந்தியாவின் சுதந்திரத்தை இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பயணத்திலிருந்து தனித்து பார்க்க முடியாது. அதனால் தான்; இன்று நாடு விடுதலையின் அமிர்த பெருவிழாவைக் கொண்டாடுகிறது. 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Government eases defence export SOP to help local manufacturers tap global market

Media Coverage

Government eases defence export SOP to help local manufacturers tap global market
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on National Sports Day
August 29, 2026

The Prime Minister, Shri Narendra Modi has extended his greetings to all sports lovers on National Sports Day. Shri Modi said that the dedication, passion and determination of sportspersons make the entire nation proud.

The Prime Minister also paid homage to the legendary Major Dhyan Chand Ji, whose brilliance and contribution to Indian hockey continue to inspire generations.

Shri Modi posted on X:

“To every sports lover…your dedication, passion and determination make everyone proud.

We also pay homage to the legendary Major Dhyan Chand Ji, whose brilliance inspires generations.

#NationalSportsDay”