“வீர பாலகர் தினம் தேசத்தின் புதிய தொடக்கத்துக்கான நாள்”
“வீர பாலகர் தினம் இந்தியாவைப் பற்றி நமக்கு சொல்வதுடன் அதன் அடையாளத்தையும் எடுத்துரைக்கும்”
“வீர பாலகர் தினம், தேசத்தின் கௌரவத்தை காக்கும் பணியில் 10 சீக்கிய குருமார்களின் மகத்தான பங்களிப்பையும், சீக்கிய பாரம்பரியத்தின் தியாகத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது”
“ஷஹீதி சப்தா மற்றும் வீர பாலகர் தினம் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல; எல்லையற்ற உத்வேகத்தின் ஆதாரமாக திகழ்கின்றன”
“ஒருபுறம் பயங்கரவாதம் மற்றும் மதவெறி உச்சத்தில் இருந்த நிலையில் மற்றொருபுறம் ஒவ்வொரு மனிதனிடமும் கடவுளை காணும் ஆன்மீகம் மற்றும் கருணையும் இருந்தது”
“புகழ் பெற்ற வரலாற்றைக் கொண்ட எந்த நாடும் தன்னம்பி்க்கை மற்றும் சுயமரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும்: தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு சில இட்டுக்கட்டப்பட்ட கதைகள் கற்பிக்கப்படுகின்றன”
“முன்னேறிச்செல்வதற்கு கடந்த காலத்தின் குறுகிய கண்ணோட்டங்களில் இருந்து விடுபட வேண்டியது அவசியம்”
“வீர பாலகர் தினம், பாஞ்ச் பிராண்ஸ் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்றதாகும்”
இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
வீர பாலகர் தினம், பஞ்ச் பிரான் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்று திகழ்வதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதுவே வீரபாலகர் தினத்தை மிக முக்கியமானதாக ஆக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

எனது அமைச்சரவை நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, மதிப்பிற்குரிய நிறுவனங்களின் தலைவர்களே, தூதர்களே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாய்மார்களே, அன்பர்களே!

முதலாவது வீர பாலகர் தினத்தை நாடு இன்று அனுசரிக்கிறது. பல தலைமுறையாக நாம் போற்றி வந்த, இந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கான புதிய துவக்கமாக இந்நாள் அமைகிறது. ‘ஷஹீதி சப்தா' மற்றும் வீர பாலகர் தினம் ஆகியவை நமது சீக்கிய பாரம்பரியத்துடன் தொடர்புடைய உணர்வுகள் மட்டுமல்ல, அவை நம்மிடையே எழுச்சியையும் ஊட்டுகின்றன. வீரத்தை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை வீர பாலகர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது. நாட்டின் கௌரவத்திற்காக சீக்கிய பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ள தியாகத்தின் முக்கியத்துவத்தையும் 10 குருமார்களின் பங்களிப்பையும் இந்த தினம் நமக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும். நமது கடந்த காலங்களைப் போற்றிடவும், எதிர்காலத்தைக் கட்டமைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த புனித தினம் நமக்கு ஊக்கமளிக்கிறது. 

நண்பர்களே,

எதிர்காலத்தில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால் கடந்த கால குறுகிய மனப்பான்மையை நாம் தகர்த்தெறிய வேண்டும். அதனால்தான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற உறுதிப்பாட்டை விடுதலையின் அமிர்த பெருவிழாவில் நாம் மேற்கொண்டுள்ளோம். சீக்கிய பாரம்பரியம் என்பது வெறும் நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் அடிப்படையிலானது அல்ல. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற சிந்தனையின் ஆதாரமாகவும் அது திகழ்கிறது. 

நண்பர்களே,

ஒரு நாடு தனது கோட்பாடுகள், மாண்புகள் மற்றும் கொள்கைகளால் அறியப்படுகிறது. ஒரு நாட்டின் மாண்புகள் மாறும்போது உடனடியாக அதன் எதிர்காலமும் மாறும் என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம். நாட்டின் கடந்த கால கொள்கைகளில் தற்போதைய தலைமுறையினர் தெளிவாக இருக்கும் போது இந்த மாண்புகள் பாதுகாக்கப்படுகின்றன. இளம் தலைமுறையினர் முன்னேறுவதற்கு முன்மாதிரிகள் எப்பொழுதும் அவசியம். ஊக்கம் பெறுவதற்கு இளைஞர்களுக்கு சிறந்த ஆளுகைகள் தேவை. அதனால்தான் விடுதலையின் அமிர்த பெருவிழாவின் போது சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை புதுப்பிக்க நாம் முயல்கிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை பெருவாரியான மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறோம். 

ஒரு நாடு தனது கோட்பாடுகள், மாண்புகள் மற்றும் கொள்கைகளால் அறியப்படுகிறது. ஒரு நாட்டின் மாண்புகள் மாறும்போது உடனடியாக அதன் எதிர்காலமும் மாறும் என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம். நாட்டின் கடந்த கால கொள்கைகளில் தற்போதைய தலைமுறையினர் தெளிவாக இருக்கும் போது இந்த மாண்புகள் பாதுகாக்கப்படுகின்றன. இளம் தலைமுறையினர் முன்னேறுவதற்கு முன்மாதிரிகள் எப்பொழுதும் அவசியம். ஊக்கம் பெறுவதற்கு இளைஞர்களுக்கு சிறந்த ஆளுகைகள் தேவை. அதனால்தான் விடுதலையின் அமிர்த பெருவிழாவின் போது சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை புதுப்பிக்க நாம் முயல்கிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை பெருவாரியான மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறோம். 

வீர பாலகர் தினத்தின் செய்தியை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் மக்களுக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நமது இலக்கை அடைவதற்கு இந்தக் கூட்டு முயற்சிகள் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலாவது வீர பாலகர் தினத்தை நாடு இன்று அனுசரிக்கிறது. பல தலைமுறையாக நாம் போற்றி வந்த, இந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கான புதிய துவக்கமாக இந்நாள் அமைகிறது. ‘ஷஹீதி சப்தா' மற்றும் வீர பாலகர் தினம் ஆகியவை நமது சீக்கிய பாரம்பரியத்துடன் தொடர்புடைய உணர்வுகள் மட்டுமல்ல, அவை நம்மிடையே எழுச்சியையும் ஊட்டுகின்றன. வீரத்தை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை வீர பாலகர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது. நாட்டின் கௌரவத்திற்காக சீக்கிய பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ள தியாகத்தின் முக்கியத்துவத்தையும் 10 குருமார்களின் பங்களிப்பையும் இந்த தினம் நமக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும். நமது கடந்த காலங்களைப் போற்றிடவும், எதிர்காலத்தைக் கட்டமைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த புனித தினம் நமக்கு ஊக்கமளிக்கிறது. 

வீர பாலகர் தினத்தின் செய்தியை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் மக்களுக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நமது இலக்கை அடைவதற்கு இந்தக் கூட்டு முயற்சிகள் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
BrahMos and beyond: How UP is becoming India’s defence capital

Media Coverage

BrahMos and beyond: How UP is becoming India’s defence capital
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares Sanskrit Subhashitam emphasising the importance of Farmers
December 23, 2025

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam-

“सुवर्ण-रौप्य-माणिक्य-वसनैरपि पूरिताः।

तथापि प्रार्थयन्त्येव कृषकान् भक्ततृष्णया।।”

The Subhashitam conveys that even when possessing gold, silver, rubies, and fine clothes, people still have to depend on farmers for food.

The Prime Minister wrote on X;

“सुवर्ण-रौप्य-माणिक्य-वसनैरपि पूरिताः।

तथापि प्रार्थयन्त्येव कृषकान् भक्ततृष्णया।।"