ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி, எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிக்கும் வலிமை, பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் பாகிஸ்தானை சில மணி நேரங்களுக்குள் மண்டியிட வைத்த திறன் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் புதிய முகத்தை உலகம் கண்டது: பிரதமர்
இப்போது, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது: பிரதமர்
கடந்த 11 ஆண்டுகளில், நமது பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து முதல் ஐந்து இடங்களுக்கு உயர்ந்துள்ளது - முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கி நாம் இப்போது வேகமாக நகர்கிறோம்: பிரதமர்
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான பயணம் டிஜிட்டல் இந்தியாவுடன் இணைந்து முன்னேறுகிறது: பிரதமர்
நமது அடுத்த பெரிய முன்னுரிமை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவதாக இருக்க வேண்டும்: பிரதமர்

வணக்கம். 


கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக்  அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!


கர்நாடக நிலத்தில் காலடி எடுத்து வைத்தவுடன்,  ஒரு சொந்த உணர்வு ஏற்படுகிறது; இங்குள்ள கலாச்சாரம், இங்குள்ள மக்களின் அன்பு மற்றும் கன்னட மொழியின் இனிமை இதயங்களைத் தொடுகிறது. முதலில், பெங்களூரு நகரத்தின் தலைமை தெய்வமான அன்னம்மா மாதாவின் பாதங்களை வணங்குகிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,  கெம்பேகவுடா, பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டார். அதன் மரபுகளுடன் இணைக்கப்பட்டு, அதே நேரத்தில் முன்னேற்றத்தின் புதிய உயரங்களைத் தொடும் ஒரு நகரத்தை அவர் கற்பனை செய்தார். பெங்களூரு எப்போதும் அந்த உணர்வை வாழ்ந்து, எப்போதும் அதைப் பாதுகாத்து வருகிறது. இன்று, பெங்களூரு அந்தக் கனவை நனவாக்குகிறது.

 

நண்பர்களே, 
புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக பெங்களூரு உருவாகி வருவதை நாம் காண்கிறோம். ஆன்மாவில் தத்துவத்தையும், செயல்களில் தொழில்நுட்பத்தையும் கொண்ட நகரம். உலக ஐடி வரைபடத்தில் இந்தியாவின் கொடியை ஏற்றிய நகரம். பெங்களூருவின் இந்த வெற்றிக் கதைக்குப் பின்னால் இருப்பது, இங்குள்ள மக்களாகிய, உங்கள் கடின உழைப்பும், திறமையும்தான்.


நண்பர்களே, 
21 ஆம் நூற்றாண்டில் நமது நகரங்களுக்கு நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஒரு பெரிய தேவையாகும். பெங்களூரு போன்ற நகரங்களை எதிர்காலத்திற்காக நாம் தயார்படுத்த வேண்டும். கடந்த காலங்களில், பெங்களூருவிற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இன்று இந்த பிரச்சாரம் புதிய வேகத்தைப் பெற்று வருகிறது. பெங்களூரு மெட்ரோ மஞ்சள் பாதை இன்று திறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ கட்டம்-3க்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 3 புதிய வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கப்பட்டுள்ளன. பெங்களூரு மற்றும் பெலகாவி இடையே வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பெலகாவியின் வணிகத்தையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும். இது தவிர, நாக்பூரிலிருந்து புனேவிற்கும், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிலிருந்து அமிர்தசரஸுக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பயனளிக்கும் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கும். இந்த திட்டங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களுக்காக பெங்களூரு, கர்நாடகா மற்றும் நாட்டு மக்களை நான் வாழ்த்துகிறேன்.


நண்பர்களே, 
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இன்று நான் முதல் முறையாக பெங்களூருக்கு வந்துள்ளேன். இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற வெற்றி, எல்லையைத் தாண்டி பல கிலோமீட்டர் தொலைவில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிக்கும் நமது திறன் மற்றும் பயங்கரவாதிகளை மீட்க வந்த பாகிஸ்தானை சில மணி நேரங்களிலேயே மண்டியிட வைக்கும் நமது திறன் ஆகியவற்றின் மூலம் புதிய இந்தியாவின் இந்த பிம்பத்தை முழு உலகமும் கண்டுள்ளது. இந்த ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், நமது தொழில்நுட்பத்தின் சக்தி மற்றும் பாதுகாப்பில் மேக் இன் இந்தியா. பெங்களூரு மற்றும் கர்நாடக இளைஞர்களும் இதில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதற்காக இன்று உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே, 
இன்று பெங்களூரு உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாம் உலகளவில் போட்டியிட வேண்டும், அது மட்டுமல்லாமல், நாம் வழிநடத்தவும் வேண்டும். நமது நகரங்கள் நவீன, வேகமான மற்றும் திறமையானதாக இருக்கும்போது மட்டுமே நாம் முன்னேறுவோம்! அதனால்தான் நவீன உள்கட்டமைப்புக்கான திட்டங்களை முடிப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். இன்று ஆர்.வி. சாலையிலிருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் பாதை தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூரிவின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும். பசவண்ணா-குடி முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை, இந்தப் பயணம் இப்போது குறைந்த நேரத்தையே எடுக்கும். 


நண்பர்களே, 
இன்று, மஞ்சள் பாதையின் தொடக்க விழாவுடன், 3வது கட்டமான ஆரஞ்சு பாதைக்கும் அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த பாதை செயல்பாட்டுக்கு வரும்போது, மஞ்சள் பாதையுடன் சேர்த்து தினமும் 25 லட்சம் பயணிகளுக்கு இது உதவும். இது பெங்களூருவின் போக்குவரத்து அமைப்புக்கு ஒரு புதிய பலத்தை அளிக்கும், மேலும் அதற்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கும். 


நண்பர்களே, பெங்களூர் மெட்ரோ, பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டின் புதிய மாதிரியையும் நாட்டிற்கு வழங்கியுள்ளது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, பயோகான் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பெங்களூரு மெட்ரோவின் பல முக்கியமான நிலையங்களுக்கு பகுதி நிதியுதவி செய்துள்ளன. சிஎஸ்ஆர்- ஐப் பயன்படுத்தும் இந்த மாதிரி ஒரு சிறந்த உத்வேகம். இந்த புதுமையான முயற்சிக்கு பெருநிறுவனத் துறையை நான் வாழ்த்துகிறேன்.


நண்பர்களே, 
இன்று இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், நமது பொருளாதாரம் 10வது இடத்திலிருந்து முதல் 5 இடங்களை எட்டியுள்ளது. முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கி நாம் வேகமாக நகர்ந்து வருகிறோம். இந்த வேகத்தை நாம் எவ்வாறு பெற்றோம்? சீர்திருத்தம்- செயல்படுத்துதல்- மாற்றம் என்ற உணர்விலிருந்து இந்த வேகத்தை நாம் பெற்றுள்ளோம். தெளிவான நோக்கங்கள் மற்றும் நேர்மையான முயற்சிகள் மூலம் இந்த வேகத்தை நாம் அடைந்துள்ளோம். 2014 ஆம் ஆண்டில், மெட்ரோ 5 நகரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது இருபத்தி நான்கு நகரங்களில் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மெட்ரோ இணைப்பு உள்ளது. இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ இணைப்பைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. 2014 க்கு முன்பு, சுமார் இருபதாயிரம் கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது, அதாவது, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து 2014 வரை, கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், நாற்பதாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதையை மின்மயமாக்கியுள்ளோம்.

 

நண்பர்களே, 
நீர், நிலம், வானம், எதுவும் விடுபட்டுவிடவில்லை. நண்பர்களே, நாட்டின் சாதனைகளின் கொடி வானில் உயரப் பறக்கிறது. 2014 வரை, இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அவற்றின் எண்ணிக்கை 160 க்கும் அதிகமாக உள்ளது. வானத்தின் சாதனை மற்றும் நிலத்தின் சாதனையைப் போலவே நீர்வழிகளின் புள்ளிவிவரங்களும் சமமாக அற்புதமானவை. 2014 இல், 3 தேசிய நீர்வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன, இப்போது இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. நண்பர்களே, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளிலும் நாடு ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014 வரை, நம் நாட்டில் 7 எய்ம்ஸ் மற்றும் 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இப்போது 22 எய்ம்ஸ் மற்றும் 704 மருத்துவக் கல்லூரிகள் மக்களுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நமது நடுத்தர வர்க்க குழந்தைகள் இதனால் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்! இந்த 11 ஆண்டுகளில், ஐ.ஐ.டி.க்களின் எண்ணிக்கை 16 லிருந்து 23 ஆகவும், டிரிபிள் ஐ.டி.க்களின் எண்ணிக்கை 09 லிருந்து 25 ஆகவும், ஐ.ஐ.எம்.களின் எண்ணிக்கை 13 லிருந்து 21 ஆகவும் அதிகரித்துள்ளது. அதாவது இன்று உயர்கல்வியில் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.


நண்பர்களே, 
இன்று, நாடு முன்னேறி வரும் அதே வேகத்தில், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையும் மாறி வருகிறது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்  கீழ் 4 கோடிக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இப்போது எங்கள் அரசு 3 கோடி வீடுகளை கட்டப் போகிறது. வெறும் பதினொரு ஆண்டுகளில் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளைக் கட்டியுள்ளோம். இது நாட்டின் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு கண்ணியம், தூய்மை மற்றும் பாதுகாப்பிற்கான உரிமையை வழங்கியுள்ளது. 
நண்பர்களே, 
நாடு இன்று வளர்ச்சியடைந்து வரும் வேகத்திற்கு நமது பொருளாதார வளர்ச்சி ஒரு பெரிய காரணியாகும். நீங்கள் பார்க்கிறீர்கள், 2014 க்கு முன்பு, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 468 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தது. இன்று அது 824 பில்லியன் டாலர்களாக மாறியுள்ளது. முன்பு நாம் செல்பேசிகளை இறக்குமதி செய்து வந்தோம், ஆனால் இப்போது செல்பேசிகளின் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களாக மாறிவிட்டோம். மேலும் பெங்களூருவிற்கும் இதில் மிகப் பெரிய பங்கு உண்டு. 2014 க்கு முன்பு, எங்கள் மின்னணு ஏற்றுமதி சுமார் 06 பில்லியன் டாலர்களாக இருந்தது. இப்போது இதுவும் தோராயமாக 38 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

 

நண்பர்களே, 
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வாகன ஏற்றுமதி சுமார் 16 பில்லியன் டாலர்களாக இருந்தது. இன்று அது இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இந்தியா நான்காவது பெரிய வாகன ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இந்த சாதனைகள் சுயசார்பு இந்தியாவுக்கான நமது உறுதியை வலுப்படுத்துகின்றன. நாம் ஒன்றாக முன்னேறி நாட்டை வளர்ச்சியடையச் செய்வோம். 


நண்பர்களே, வளர்ந்த இந்தியா, புதிய இந்தியா என்ற இந்தப் பயணம் டிஜிட்டல் இந்தியாவுடன் படிப்படியாக நிறைவடையும். இன்று இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் போன்ற திட்டங்களுடன், இந்தியா உலகளாவிய செயற்கை நுண்ணறவு தலைமையை நோக்கி முன்னேறி வருவதைக் காண்கிறோம். குறைக்கடத்தி இயக்கமும் இப்போது வேகம் பெறுகிறது. இந்தியா விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்களைப் பெறும். இன்று இந்தியா குறைந்த விலை உயர் தொழில்நுட்ப விண்வெளி பயணங்களுக்கு உலகளாவிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. அதாவது, எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது. மேலும், இந்தியாவின் இந்த முன்னேற்றத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால் - ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தல்! இன்று நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் நோக்கம் ஒவ்வொரு கிராமத்தையும் அடைந்துள்ளது. உலகின் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிகழ்நேர பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுகின்றன. உலகின் 50% தொழில்நுட்பத்தின் உதவியுடன், அரசிற்கும் குடிமக்களுக்கும் இடையிலான தூரத்தை நாங்கள் குறைத்து வருகிறோம். இன்று, நாட்டில் 2200 க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் செல்பேசியில் கிடைக்கின்றன. உமங் செயலியின் உதவியுடன், சாதாரண குடிமகன் வீட்டில் அமர்ந்தவாறே அரசுப் பணிகளை முடிக்கிறார். அரசு சான்றிதழ்களின் தொந்தரவு, டிஜிலாக்கருடன் முடிவுக்கு வந்துள்ளது. இப்போது ஏஐ-இயக்கப்படும் அச்சுறுத்தல் கண்டறிதல் போன்ற தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்கிறோம். நாட்டில் டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் சமூகத்தின் கடைசி நபரை சென்றடைவது எங்கள் முயற்சி. மேலும் பெங்களூரு இந்த முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


நண்பர்களே, 
தற்போதைய சாதனைகளுக்கு மத்தியில், நமது அடுத்த பெரிய முன்னுரிமை தொழில்நுட்ப தற்சார்பு இந்தியா! இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளன. உலகம் முழுவதும் மென்பொருள் மற்றும் தயாரிப்புகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தியாவின் தேவைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் நாம் வேகமாக முன்னேற வேண்டும். இன்று மென்பொருள் மற்றும் செயலிகள் ஒவ்வொரு களத்திலும் பயன்படுத்தப்படுகின்றன, இதில் இந்தியா புதிய உயரங்களை எட்டுவது மிகவும் முக்கியம். வளர்ந்து வரும் துறைகளிலும் முன்னணியில் இருக்க நாம் பாடுபட வேண்டும். மேக் இன் இந்தியாவில், உற்பத்தித் துறையில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் இருப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். மேலும், நமது தயாரிப்புகள் பூஜ்ஜிய குறைபாடு, பூஜ்ஜிய விளைவு என்ற தரத்தில் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இதன் பொருள் தயாரிப்புகள் குறைபாடுகள் இல்லாததாக இருக்க வேண்டும், அவற்றின் உற்பத்தி சுற்றுச்சூழலில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது. சுயசார்பு இந்தியா என்ற இந்த தொலைநோக்குப் பார்வையை கர்நாடகாவின் திறமையாளர்கள் வழிநடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

 

நண்பர்களே, 
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் பொதுமக்களுக்கு சேவை செய்ய இங்கே இருக்கிறோம். நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக நாம் ஒன்றாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த திசையில் மிக முக்கியமான பொறுப்பு - புதிய சீர்திருத்தங்கள்! கடந்த பத்தாண்டுகளில், நாம் தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறோம். உதாரணமாக, இந்திய அரசு சட்டங்களை குற்றமற்றதாக்க ஜன் விஸ்வாஸ் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இப்போது நாம் ஜன் விஸ்வாஸ் 2.0 ஐயும் நிறைவேற்றப் போகிறோம். தேவையற்ற குற்றவியல் விதிகளைக் கொண்ட சட்டங்களையும் மாநில அரசுகள் அடையாளம் கண்டு அவற்றை ஒழிக்க முடியும். அரசு ஊழியர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்குவதற்காக, மிஷன் கர்மயோகியை நாங்கள் நடத்தி வருகிறோம். மாநிலங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்தக் கற்றல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளலாம். முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டம் மற்றும் முன்னேற விரும்பும் வட்டாரம் திட்டத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். மாநிலங்கள் இதேபோல் தங்கள் மாநிலங்களில் சிறப்பு கவனம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணலாம். மாநில அரசு மட்டத்திலும் புதிய சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். நமது கூட்டு முயற்சிகள் கர்நாடகாவை வளர்ச்சியின் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவின் உறுதியை நாம் ஒன்றாக நிறைவேற்றுவோம். இந்த உணர்வுடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். மிக்க நன்றி!

 

நண்பர்களே, 
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் பொதுமக்களுக்கு சேவை செய்ய இங்கே இருக்கிறோம். நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக நாம் ஒன்றாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த திசையில் மிக முக்கியமான பொறுப்பு - புதிய சீர்திருத்தங்கள்! கடந்த பத்தாண்டுகளில், நாம் தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறோம். உதாரணமாக, இந்திய அரசு சட்டங்களை குற்றமற்றதாக்க ஜன் விஸ்வாஸ் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இப்போது நாம் ஜன் விஸ்வாஸ் 2.0 ஐயும் நிறைவேற்றப் போகிறோம். தேவையற்ற குற்றவியல் விதிகளைக் கொண்ட சட்டங்களையும் மாநில அரசுகள் அடையாளம் கண்டு அவற்றை ஒழிக்க முடியும். அரசு ஊழியர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்குவதற்காக, மிஷன் கர்மயோகியை நாங்கள் நடத்தி வருகிறோம். மாநிலங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்தக் கற்றல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளலாம். முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டம் மற்றும் முன்னேற விரும்பும் வட்டாரம் திட்டத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். மாநிலங்கள் இதேபோல் தங்கள் மாநிலங்களில் சிறப்பு கவனம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணலாம். மாநில அரசு மட்டத்திலும் புதிய சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். நமது கூட்டு முயற்சிகள் கர்நாடகாவை வளர்ச்சியின் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவின் உறுதியை நாம் ஒன்றாக நிறைவேற்றுவோம். இந்த உணர்வுடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். மிக்க நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
A big deal: The India-EU partnership will open up new opportunities

Media Coverage

A big deal: The India-EU partnership will open up new opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi interacts with Energy Sector CEOs
January 28, 2026
CEOs express strong confidence in India’s growth trajectory
CEOs express keen interest in expanding their business presence in India
PM says India will play decisive role in the global energy demand-supply balance
PM highlights investment potential of around USD 100 billion in exploration and production, citing investor-friendly policy reforms introduced by the government
PM calls for innovation, collaboration, and deeper partnerships, across the entire energy value chain

Prime Minister Shri Narendra Modi interacted with CEOs of the global energy sector as part of the ongoing India Energy Week (IEW) 2026, at his residence at Lok Kalyan Marg earlier today.

During the interaction, the CEOs expressed strong confidence in India’s growth trajectory. They conveyed their keen interest in expanding and deepening their business presence in India, citing policy stability, reform momentum, and long-term demand visibility.

Welcoming the CEOs, Prime Minister said that these roundtables have emerged as a key platform for industry-government alignment. He emphasized that direct feedback from global industry leaders helps refine policy frameworks, address sectoral challenges more effectively, and strengthen India’s position as an attractive investment destination.

Highlighting India’s robust economic momentum, Prime Minister stated that India is advancing rapidly towards becoming the world’s third-largest economy and will play a decisive role in the global energy demand-supply balance.

Prime Minister drew attention to significant investment opportunities in India’s energy sector. He highlighted an investment potential of around USD 100 billion in exploration and production, citing investor-friendly policy reforms introduced by the government. He also underscored the USD 30 billion opportunity in Compressed Bio-Gas (CBG). In addition, he outlined large-scale opportunities across the broader energy value chain, including gas-based economy, refinery–petrochemical integration, and maritime and shipbuilding.

Prime Minister observed that while the global energy landscape is marked by uncertainty, it also presents immense opportunity. He called for innovation, collaboration, and deeper partnerships, reiterating that India stands ready as a reliable and trusted partner across the entire energy value chain.

The high-level roundtable saw participation from 27 CEOs and senior corporate dignitaries representing leading global and Indian energy companies and institutions, including TotalEnergies, BP, Vitol, HD Hyundai, HD KSOE, Aker, LanzaTech, Vedanta, International Energy Forum (IEF), Excelerate, Wood Mackenzie, Trafigura, Staatsolie, Praj, ReNew, and MOL, among others. The interaction was also attended by Union Minister for Petroleum and Natural Gas, Shri Hardeep Singh Puri and the Minister of State for Petroleum and Natural Gas, Shri Suresh Gopi and senior officials of the Ministry.