இந்தியா முழுவதும் உள்ள 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடிக்கும் அதிகமான நிதியை பிரதமரின் கிசான் திட்டத்தின் 20-வது தவணையாக பிரதமர் விடுவித்தார்
விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாய செலவைக் குறைக்கவும் அரசு முழு பலத்துடன் செயல்படுகிறது, விதை முதல் சந்தை வரை விவசாயிகளுடன் நாங்கள் நிற்கிறோம்: பிரதமர்
இந்தியாவைத் தாக்கும் எவரும் நரகத்தில் கூட பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் வலிமையை முழு உலகமும் கண்டது: பிரதமர்
நமது விவசாயிகளின் நலன்கள், நமது சிறு தொழில்கள் எங்களுக்கு மிக முக்கியமானவை, இந்தத் திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது: பிரதமர்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறப் போகிறது, அதன் பொருளாதார நலன்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மௌரியா அவர்களே, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்  அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எங்களுடன் இணைந்திருக்கும் ஆளுநர்களே, அமைச்சர்களே, உத்தரப்பிரதேச பாஜக தலைவர் திரு பூபேந்திர சிங் சௌத்ரி அவர்களே, நாடுளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் கே, என் அன்பான விவசாய சகோதர சகோதரிகளே, குறிப்பாக எனது எஜமானர்களான காசி மக்களே!

இன்று நாம் காசியிலிருந்து நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுடன் இணைந்திருக்கிறோம். இது சாவான் மாதம், காசியைப் போன்ற ஒரு புனிதத் தலம், நாட்டின் விவசாயிகளுடன் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதை விட பெரிய அதிர்ஷ்டம் என்ன இருக்க முடியும்? இன்று நான் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல் முறையாக காசிக்கு வந்துள்ளேன். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, 26 அப்பாவி மக்கள் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர், அவர்களின் குடும்பங்களின் வலி, அந்தக் குழந்தைகளின் துயரம், அந்த மகள்களின் வலியால், என் இதயம் மிகுந்த வேதனை அடைந்தது. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த துக்கத்தைத் தாங்கும் தைரியத்தை அளிக்குமாறு பாபா விஸ்வநாத்திடம் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். காசியின் என் எஜமானர்களே, என் மகள்களின் குங்குமத்திற்கு பழிவாங்குவதாக நான் அளித்த வாக்குறுதியும் நிறைவேறியுள்ளது. இது மகாதேவின் ஆசிர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை அவரது காலடியில் அர்ப்பணிக்கிறேன்.

 

நண்பர்களே,

இப்போதெல்லாம், காசியில் கங்காஜலத்தை சுமந்து செல்லும் சிவ பக்தர்களின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்போது, குறிப்பாக சாவன மாதத்தின் முதல் திங்கட்கிழமைகளில், நமது யாதவ சகோதரர்கள் பாபாவின் ஜலாபிஷேகம் செய்ய வெளியே சென்றபோது, கௌரி கேதாரேஷ்வரில் இருந்து கங்காஜலத்தை தோளில் யாதவ சகோதரர்களின் குழு சுமந்து செல்லும் காட்சி எவ்வளவு அழகானது! உடுக்கையின் சத்தம், தெருக்களில் ஒலிக்கும் சத்தம், உலகில் ஒரு அற்புதமான உணர்வை உருவாக்குகிறது. புனித சாவன மாதத்தில் பாபா விஸ்வநாத் மற்றும் மார்க்கண்டேய மகாதேவ் ஆகியோரைப் பார்க்க வேண்டும் என்ற மிகுந்த ஆசையும் எனக்கு இருந்தது! ஆனால் நான் அங்கு செல்வது மகாதேவ் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இன்று இங்கிருந்து போலேநாத் மற்றும் கங்கை அன்னைக்கு என் வணக்கத்தைச் செலுத்துகிறேன். சேவாபுரியின் இந்த நிலையிலிருந்து பாபா காசி விஸ்வநாத்துக்கு நாங்கள் எங்கள் வணக்கத்தைச் செலுத்துகிறோம். நம: பார்வதீ பதயே! ஹர ஹர மகாதேவா!!

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு, நான் தமிழ்நாட்டில் இருந்தேன். அங்குள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்றேன். இந்தக் கோயில் நாட்டின் சைவ மரபின் ஒரு பழங்கால மையமாகும். இந்தக் கோயில் நமது நாட்டின் புகழ்பெற்ற மன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் வட இந்தியாவிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து வடக்கையும் தெற்கையும் இணைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிவன் மற்றும் சைவ மரபின் மீதான தனது பக்தியின் மூலம், ராஜேந்திர சோழன் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்று அறிவித்தார். இன்று, காசி-தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் மூலம், அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் ஒரு  முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். சமீபத்தில் நான் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சென்றபோது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் ஆசீர்வாதத்துடன், நானும் கங்காஜலுடன் அங்கு சென்றது எனக்கு மிகுந்த திருப்தி அளித்தது. கங்கை அன்னையின் ஆசீர்வாதத்துடன், அங்கு மிகவும் புனிதமான சூழ்நிலையில் பூஜை செய்யப்பட்டது. கங்காஜலுடன் அங்கு ஜலாபிஷேகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நண்பர்களே,

வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் நிறைய உத்வேகத்தைத் தருகின்றன. நாட்டின் ஒற்றுமை ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு புதிய உணர்வை எழுப்புகிறது, அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக உள்ளது. 140 கோடி நாட்டு மக்களின் ஒற்றுமை ஆபரேஷன் சிந்தூரின் பலமாக மாறியது.

 

நண்பர்களே,

சிந்தூர் நடவடிக்கை என்பது வீரர்களின் வீரத்தின் தருணம், இன்று விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு வாய்ப்பாகும். இன்று இங்கு ஒரு பெரிய விவசாயிகளின் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் வடிவத்தில் நாட்டின் 10 கோடி விவசாய சகோதர சகோதரிகளின் கணக்குகளுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காசியிலிருந்து பணம் செல்லும்போது, அது தானாகவே பிரசாதமாக மாறுகிறது. விவசாயிகளின் கணக்குகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது.

நண்பர்களே,

இன்று, சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. பாபாவின் ஆசியுடன், காசியில் தடையற்ற வளர்ச்சி கங்கை நதியுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது. நாட்டின் விவசாயிகளான உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். சில நாட்களுக்கு முன்பு, காசியில் எம்.பி. சுற்றுலா வழிகாட்டி போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காசி நிலத்தில் இது போன்ற பல சோதனைகள் நடக்கின்றன. வரும் நாட்களில், காசி எம்.பி. புகைப்படப் போட்டி, எம்.பி. வேலைவாய்ப்பு கண்காட்சி உட்பட இன்னும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. அனைத்து அரசு ஊழியர்களையும், அரசு அதிகாரிகளையும் நான் இங்கு  வாழ்த்துகிறேன், இதனால் அவர்கள் இளம் தலைமுறையினரை பொதுமக்களின் பங்களிப்புடன் இணைத்து, அதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் பல வாழ்த்துகளுக்கு உரியவர்கள். இந்தப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

விவசாயிகளின் செழிப்புக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகளால், விவசாயிகளின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பைக் கூட நிறைவேற்றுவது கடினமாக இருந்தது. ஆனால் பாஜக அரசு சொல்வதைச் செய்கிறது! இன்று, பிரதமரின் கிசான் சம்மான் நிதி அரசின் உறுதியான நோக்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. சகோதர சகோதரிகளே, 2019 ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மான் நிதி தொடங்கப்பட்டபோது, வளர்ச்சிக்கு எதிரான மக்கள், சமாஜ்வாதி கட்சி-காங்கிரஸ் போன்ற வளர்ச்சிக்கு எதிரான கட்சிகள் என்ன மாதிரியான வதந்திகளைப் பரப்பின என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களை தவறாக வழிநடத்தினர், விவசாயிகளைக் குழப்பினர். அவர்கள் என்ன மாதிரியான பொய்களைச் சொல்கிறார்கள்? இது நாட்டின் துரதிர்ஷ்டம், எதிர்க்கட்சி மனநிலை கொண்ட மக்கள், விரக்தியின் ஆழத்தில் மூழ்கி, இதுபோன்ற பொய்யான உண்மைகளுடன் வாழ்கிறார்கள். அவர்களால் விவசாயிகளிடமும் நாட்டு மக்களிடமும் மட்டுமே பொய் சொல்ல முடியும். இத்தனை வருடங்களில் ஒரு தவணையாவது நிறுத்தப்பட்டதா? பிரதமரின் கிசான் சம்மான் நிதி எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை, 3.75 லட்சம் கோடி ரூபாய்,  விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் யாருடைய கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது? யாருடைய கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது? அது என் விவசாய சகோதர சகோதரிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது.

 

இங்கு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 2.5 கோடி விவசாயிகளும் இதன் பலனைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மாநில விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், எனது காசியின் விவசாயிகளும் சுமார் 900 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். 900 கோடி ரூபாய் உங்கள் கணக்கிற்கு வந்துள்ள அளவுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். மேலும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், எந்த கமிஷன், இடைத்தரகர், பண மோசடி இல்லாமல், இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் கணக்கை அடைந்துள்ளது. மேலும் மோடி இதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றியுள்ளார். இதில் எந்த கசிவும் இருக்காது, ஏழைகளின் உரிமைகளும் பறிக்கப்படாது.

நண்பர்களே,

மோடியின் வளர்ச்சிக்கான மந்திரம் - நாடு எவ்வளவு பின்தங்கியதோ, அவ்வளவு முன்னுரிமை பெறுகிறது! நாடு எவ்வளவு பின்தங்கியதோ, அவ்வளவு முன்னுரிமை பெறுகிறது! இந்த மாதம், மத்திய அரசு மற்றொரு பெரிய திட்டத்தை அங்கீகரித்துள்ளது. அதன் பெயர் - பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டம். விவசாயிகளின் நலனுக்காக, விவசாய முறைக்காக, விவசாய மேம்பாட்டிற்காக இந்தத் திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். முந்தைய அரசுகளின் தவறான கொள்கைகளால் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கிய மாவட்டங்கள், பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. விவசாய உற்பத்தியும் குறைந்து வருகிறது. விவசாயிகளின் வருமானமும் குறைவாக உள்ளது. கேள்வி கேட்க யாரும் இல்லை. பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தின் மையமாக அந்த மாவட்டங்கள் இருக்கும். இது உத்தரப்பிரதேசத்தின்  லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.

நண்பர்களே,

விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயத்திற்கான செலவினங்களைக் குறைக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முழு சக்தியுடன் செயல்பட்டு வருகிறது, அதன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. விதை முதல் சந்தை வரை விவசாயிகளுடன் நாங்கள் நிற்கிறோம். விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, நாட்டில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நண்பர்களே,

விவசாயிகளுக்கு வானிலை ஒரு பெரிய சவாலாக இருந்து வருகிறது, சில நேரங்களில் அதிக மழை பெய்யும், சில நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும், உறைபனி பெய்யும்! இதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு உரிமைகோரல்களாக வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

உங்கள் பயிருக்கு சரியான விலை கிடைப்பதை எங்கள் அரசு உறுதி செய்கிறது. இதற்காக, பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நெல், கோதுமை போன்ற முக்கிய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் விளைபொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாட்டில் ஆயிரக்கணக்கான புதிய கிடங்குகளையும் அரசு கட்டி வருகிறது. சகோதர சகோதரிகளே, விவசாயப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் லட்சாதிபதி சகோதரி பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம். நாட்டில் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.  இதுவரை ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். ரூ.3 கோடி இலக்கில் பாதி வேலை முடிந்துவிட்டது. கிராமங்களில் பணிபுரியும் ஏழைக் குடும்பங்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்றரை கோடி சகோதரிகள் லட்சாதிபதி சகோதரிகளாகி விட்டனர், இது ஒரு சிறந்த பணியாகும். அரசின் ட்ரோன் சகோதரி திட்டம் லட்சக்கணக்கான சகோதரிகளின் வருமானத்தையும் அதிகரித்துள்ளது.

 

நண்பர்களே,

நமது அரசு விவசாயம் தொடர்பான நவீன ஆராய்ச்சிகளை வயல்களுக்கு எடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பாக உருவாக்கப்பட்ட வேளாண் உறுதித் திட்டம் நடத்தப்பட்டது. ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு என்ற மந்திரத்துடன், 1.25 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேரடி தொடர்பு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில், விவசாயம் ஒரு மாநிலப் பாடம் என்று நம்பப்படுகிறது, ஒரு அமைப்பு உள்ளது, அதுவும் சரிதான், ஆனால் அதையும் மீறி இந்திய அரசு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மோடி அரசு, அது ஒரு மாநிலப் பாடமாக இருந்தாலும், மாநிலங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தது, அவர்களால் அதைச் செய்ய முடிந்தாலும் இல்லாவிட்டாலும், அதைச் செய்ய முடியாத பல மாநிலங்கள் உள்ளன, எனவே நாமே ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்து கோடிக்கணக்கான விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டோம்.

நண்பர்களே,

இன்று நான் உங்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் உங்கள் அனைவரையும் சென்றடையச் செய்ய வேண்டும். அதில் உங்கள் உதவியும், இங்கு அமர்ந்திருக்கும் மக்களின் உதவியும் எனக்குத் தேவை. மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின் கீழ், நாட்டில் 55 கோடி ஏழை மக்களின் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். வங்கியின் கதவுகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாத 55 கோடி மக்களுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது இந்தத் திட்டம் சமீபத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்போது வங்கித் துறையில் சில விதிகள் உள்ளன, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வங்கிக் கணக்குகளின் கேஒய்சியை சரி செய்ய வேண்டியது அவசியம் என்று விதிகள் கூறுகின்றன. ஒரு செயல்முறை முடிக்கப்பட வேண்டும். இப்போது நீங்கள் வங்கிக்குச் சென்றாலும், செய்தாலும் இல்லாவிட்டாலும், முதலில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இப்போது உங்கள் சுமையை கொஞ்சம் குறைக்க நான் முன்முயற்சி எடுத்துள்ளேன். எனவே, நான் வங்கி ஊழியர்களிடம், மக்கள் வந்து கேஒய்சியை சரி செய்ய வேண்டும் என்று சொன்னேன், அது ஒரு நல்ல விஷயம். குடிமக்களை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் ஒரு பிரச்சாரத்தை நடத்த முடியுமா? இன்று, ரிசர்வ் வங்கி, நமது நாட்டின் அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிகளுக்குப் பொறுப்பான அனைத்து மக்களையும் மனதார வாழ்த்த விரும்புகிறேன்.  வங்கி ஊழியர்கள் இந்த 10 கோடி மக்களின் கேஒய்சி-ஐ 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்ய வேண்டும், எனவே இந்த பணியை முடிக்க ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரு பெரிய பிரச்சாரம் நடந்து வருகிறது. எங்கள் வங்கிகள் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தையும் தாங்களாகவே அணுகுகின்றன. அவர்கள் அங்கு கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். இதுவரை, வங்கிகள் சுமார் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் முகாம்கள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கேஒய்சி-யையும் மீண்டும் செய்து முடித்துள்ளனர்.  இந்த பிரச்சாரம் மேலும் தொடரும். மக்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கேஒய்-ஐ மீண்டும் சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

வங்கிகள் கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கின்றன; லட்சக்கணக்கான பஞ்சாயத்துகளில் இன்னும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதன் பல நன்மைகள் உள்ளன, மற்றொரு நன்மையும் உள்ளது, இந்த முகாம்களில், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற பல திட்டங்களின் பதிவும் செய்யப்படுகிறது. மேலும் இந்த காப்பீடு ஒரு கப் தேநீர் செலவை விடக் குறைவாக இருக்கும். இந்த திட்டங்கள் உங்களுக்கு நிறைய உதவுகின்றன. எனவே, வங்கிகள் தொடங்கியுள்ள பெரிய பிரச்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், முழு நாட்டு மக்களுக்கும் நான் சொல்கிறேன், நீங்கள் நிச்சயமாக இந்த முகாம்களுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் இன்னும் இந்தத் திட்டங்களில் சேரவில்லை என்றால், அவற்றில் பதிவுசெய்து, உங்கள் மக்கள் வங்கிக் கணக்கு கேஒய்சியையும் சரி செய்து கொள்ளுங்கள். இந்த பிரச்சாரம் குறித்து முடிந்தவரை பலருக்குத் தெரியப்படுத்தவும், வங்கிகளுடன் பேசவும், முகாம் எப்போது, எங்கு நடைபெறப் போகிறது என்பதைத் தெரிவிக்கவும் அனைத்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரதிநிதிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் என்ன உதவியை வழங்க முடியும்? இவ்வளவு பெரிய பணியில் வங்கிகளுக்கு உதவ நாம் முன்வர வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும், முகாம் எங்கு நடந்தாலும் முடிந்தவரை பலரை இந்தப் பிரச்சாரத்தில் இணைக்க வேண்டும்.

 

நண்பர்களே,

இன்று மகாதேவ் நகரில் இவ்வளவு வளர்ச்சி மற்றும் பொது நலன் செய்யப்பட்டுள்ளது! சிவனின் அர்த்தம் - நலன்! ஆனால் சிவனுக்கு இன்னொரு வடிவமும் உண்டு, சிவனின் ஒரு வடிவம் கல்யாண், சிவனின் மற்றொரு வடிவம் - ருத்ர வடிவம்! பயங்கரவாதமும் அநீதியும் இருக்கும்போது, நமது மகாதேவ் ருத்ர வடிவத்தை எடுக்கிறார். ஆபரேஷன் சிந்தூரின் போது, உலகம் இந்தியாவின் இந்த வடிவத்தைக் கண்டிருக்கிறது. இந்தியாவைத் தாக்குபவர்கள் நரகத்தில் கூட உயிர்வாழ மாட்டார்கள். ஆனால் சகோதர சகோதரிகளே, துரதிர்ஷ்டவசமாக, ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியால் நம் நாட்டில் சிலர் வயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இந்த காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும், அதன் நண்பர்களும், பாகிஸ்தானின் பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா அழித்துவிட்டது என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது. எனது காசியின் எஜமானர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் வலிமையைப் பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா? ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா? பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பதில் நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா?

 

நண்பர்களே,

 

நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் எவ்வாறு துல்லியமான தாக்குதல்களை நடத்தி பயங்கரவாத தலைமையகத்தை அழித்தன என்பதை விளக்கும் அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். பாகிஸ்தானின் பல விமானத் தளங்கள் இன்னும் ஐ.சி.யுவில் உள்ளன. பாகிஸ்தான் வருத்தமாக இருக்கிறது, இதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும், ஆனால் காங்கிரசஸ், சமாஜ்வாதியால் பாகிஸ்தானின் இந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை, ஒரு பக்கம் பயங்கரவாதத்தின் தலைமை கூக்குரலிடுகிறது, மறுபுறம் காங்கிரஸ்-சமாஜ்வாதி மக்கள் பயங்கரவாதிகளின் நிலையைப் பார்த்து அழுகிறார்கள்.

 

நண்பர்களே,

 நமது ஆயுதப் படைகளின் வீரத்தை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது. காங்கிரஸ் ஆபரேஷன் சிந்தூரை ஒரு கேலி என்று அழைத்துள்ளது. நீங்கள் சொல்லுங்கள், சிந்தூர் எப்போதாவது ஒரு கேலியாக இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமா? யாராவது சிந்தூரை ஒரு நகைச்சுவை என்று அழைக்க முடியுமா? நமது ஆயுதப் படைகளின் வீரம், மற்றும் நம் சகோதரிகளின் சிந்தூருக்கு பழிவாங்கும் விதமாக அதை ஒரு கேலிக்கூத்து என்று அழைப்பதில்  துணிச்சல் மற்றும் வெட்கமின்மை உள்ளது.

சகோதர சகோதரிகளே,

சமாஜ்வாதி கட்சியும் இந்த வாக்கு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலில் பின்தங்கியிருக்கவில்லை.  பயங்கரவாதிகளைக் கொல்ல நாம் காத்திருக்க வேண்டுமா? அவர்களுக்கு தப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா? இவர்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதிகளுக்கு சுத்தமான சிட் வழங்கிய அதே நபர்கள். குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இப்போது பயங்கரவாதிகள் கொல்லப்படும்போது அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். காசி நிலத்தைச் சேர்ந்த இந்த மக்களுக்கு நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். இது புதிய இந்தியா. இந்த புதிய இந்தியா போலேநாத்தை வணங்குகிறது, மேலும் நாட்டின் எதிரிகளுக்கு முன்னால் காலபைரவராக எப்படி மாறுவது என்பதையும் அறிந்திருக்கிறது.

நண்பர்களே,

சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் சக்தியை உலகம் முழுவதும் கண்டிருக்கிறது. நமது வான் பாதுகாப்பு அமைப்புகள், நமது உள்நாட்டு ஏவுகணைகள், உள்நாட்டு ட்ரோன்கள், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் வலிமையை நிரூபித்துள்ளன. குறிப்பாக நமது பிரம்மோஸ் ஏவுகணைகள், அவற்றின் பயங்கரம் இந்தியாவின் ஒவ்வொரு எதிரியையும் நிரப்பியுள்ளது. பாகிஸ்தானில் எங்கும் பிரம்மோஸ் சத்தம் கேட்டால், தூக்கத்தை இழக்க முடியாது. எனது அன்பான சகோதர சகோதரிகளே, நான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் நமது உத்தரப்பிரதேசத்திலும் தயாரிக்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மோஸ் ஏவுகணைகளின் உற்பத்தி லக்னோவில் தொடங்குகிறது. பல பெரிய பாதுகாப்பு நிறுவனங்களும் உத்தரப்பிரதேச பாதுகாப்பு வழித்தடத்தில் தங்கள் ஆலைகளை அமைத்து வருகின்றன. வரும் காலங்களில், உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், இந்தியப் படைகளின் பலமாக மாறும். என் நண்பர்களே, இந்த தன்னம்பிக்கை கொண்ட ராணுவ சக்தியைப் பற்றி நீங்கள் கேட்கும்போது, நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள். முழு பலத்துடன் உங்கள் கைகளை உயர்த்தி, நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள். நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள். ஹர ஹர மகாதேவ். பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது பாவத்தைச் செய்தால், உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் பயங்கரவாதிகளை அழித்துவிடும்.

 

நண்பர்களே,

இன்று உத்தரப்பிரதேசம் தொழில் ரீதியாக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, நாட்டின் பெரிய நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் இங்கு முதலீடு செய்கின்றன, பாஜக அரசின் வளர்ச்சிக் கொள்கைகள் இதற்குப் பின்னால் பெரும் பங்கு வகிக்கின்றன. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில், குற்றவாளிகள் உத்தரப்பிரதேசத்தில் அச்சமின்றி இருந்தனர், முதலீட்டாளர்கள் இங்கு வரக்கூட பயந்தனர். ஆனால், பாஜக அரசின் கீழ், குற்றவாளிகள் பயப்படுகிறார்கள், முதலீட்டாளர்கள் மாநிலத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் காண்கிறார்கள். இந்த வளர்ச்சி வேகத்திற்கு உத்தரப்பிரதேச அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

காசியில் வளர்ச்சிக்கான மகா யாகம் தொடர்கிறது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இன்று ரயில் மேம்பாலம், ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான திட்டங்கள், காசியில் பள்ளிகளின் புதுப்பித்தல் பணிகள், ஹோமியோபதி கல்லூரி கட்டுமானம், முன்ஷி பிரேம்சந்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், இந்த பணிகள் அனைத்தும் பிரமாண்டமான காசி, தெய்வீக காசி, வளமான காசி மற்றும் எனது காசியின் கட்டுமானத்தை துரிதப்படுத்தும். சேவாபுரிக்கு இங்கு வருவதும் ஒரு அதிர்ஷ்டம். இது மா கல்கா தேவியின் நுழைவாயில். இங்கிருந்து மா கல்காவின் பாதங்களில் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

நமது அரசு அன்னை கல்கா தாம் நகரை அழகுபடுத்தி, அதை இன்னும் பிரமாண்டமாக மாற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கோயிலுக்கு வருவதும் எளிதாகிவிட்டது. சேவாபுரியின் வரலாறு புரட்சியின் வரலாறாக இருந்து வருகிறது. இங்கிருந்து பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். மகாத்மா காந்தியின் கனவு நனவான அதே சேவாபுரி இதுதான். இங்கு, ஒவ்வொரு வீட்டிலும் ஆண்கள் மற்றும் பெண்களின் கைகளில் ஒரு நூற்பு சக்கரம் (சர்க்கா) இருந்தது, இப்போது சந்த்பூர் முதல் படோஹி சாலை வரை போன்ற திட்டங்களுடன், படோஹியின் நெசவாளர்களும் காசியின் நெசவாளர்களுடன் இணைகிறார்கள். பனாரசி பட்டு நெசவாளர்களும் இதனால் பயனடைவார்கள், படோஹியின் கைவினைஞர்களும் இதனால் பயனடைவார்கள்.

 

நண்பர்களே,

காசி அறிவுஜீவிகளின் நகரம். இன்று, பொருளாதார முன்னேற்றம் பற்றி நாம் பேசும்போது, உலகளாவிய சூழ்நிலைக்கும் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இன்று, உலகப் பொருளாதாரம் பல அச்சங்களைச் சந்தித்து வருகிறது, நிலையற்ற தன்மை நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உலக நாடுகள் தங்கள் நலன்களில் கவனம் செலுத்துகின்றன. அவர்கள் அந்தந்த நாடுகளின் நலன்களில் கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும் மாறப் போகிறது. எனவே, இந்தியாவும் தனது பொருளாதார நலன்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நமது விவசாயிகள், சிறு தொழில்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு ஆகியவை நமக்கு மிக முக்கியமானவை. இந்த திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் நாட்டின் குடிமக்களாக, நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. மேலும் இது மோடி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு கணமும் தங்கள் இதயத்தில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று மட்டுமல்ல, மற்றவர்களிடம், நாட்டின் நன்மையை விரும்புவோர், நாட்டை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற விரும்புவோர், அது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, தங்கள் தயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் நலனுக்காக ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு இடத்திலும், நாட்டு மக்களிடையே ஒரு உணர்வை எழுப்ப வேண்டும், அதாவது - சுதேசியத்திற்காக ஒரு உறுதிமொழி எடுப்போம்!

என் சகோதர சகோதரிகளே, என் நாட்டு மக்களே, இப்போது, நாம் எதை வாங்கினாலும், ஒரே ஒரு தராசு மட்டுமே இருக்க வேண்டும், ஒரு இந்தியரின் வியர்வையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவோம். நமக்கு, அதுதான் சுதேசி. உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் என்ற மந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டுமே ஊக்குவிப்போம் என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்.  நான் புதிய பொருட்களைப் பற்றி பேசுகிறேன். நம் வீட்டிற்கு எந்த புதிய பொருட்கள் வந்தாலும், அது சுதேசியாக இருக்கும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். இன்று நான் வணிக உலகத்தைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். எனது வணிக சகோதர சகோதரிகளே, உலகம் இத்தகைய நிலையற்ற சூழலைக் கடந்து செல்லும்போது, நாமும், அது வணிகமாக இருந்தாலும் சரி, சிறிய கடையாக இருந்தாலும் சரி, வணிகம் செய்ய வேண்டும். இப்போது நாம் நம் இடத்திலிருந்து உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம்.

 

நண்பர்களே,

 

சுதேசி பொருட்களை விற்பனை செய்வதற்கான இந்த தீர்மானம் நாட்டிற்கு ஒரு உண்மையான சேவையாகவும் இருக்கும். வரும் மாதங்கள் பண்டிகை மாதங்களாகும். தீபாவளி வரும், பின்னர் திருமண நேரம் வரும். இப்போது நாம் ஒவ்வொரு கணமும் சுதேசி பொருட்களை வாங்குவோம். வெளிநாடு சென்று திருமணம் செய்து கொண்டு நாட்டின் செல்வத்தை வீணாக்காதீர்கள். மேலும் பல இளைஞர்கள் எங்கள் குடும்பத்தினர் வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர், ஆனால் உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு, நாங்கள் இப்போது அங்குள்ள அனைத்தையும் ரத்து செய்துவிட்டோம்,   இப்போது நாங்கள் இந்தியாவில் மட்டுமே திருமணம் செய்து கொள்வோம் என்று எனக்கு கடிதங்கள் எழுதியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திருமணம் நடக்கக்கூடிய நல்ல இடங்களும் நம்மிடம் உள்ளன. எல்லாவற்றிலும் சுதேசி என்ற உணர்வு, வரும் நாட்களில் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. நண்பர்களே, இது மகாத்மா காந்திக்கு ஒரு சிறந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

நண்பர்களே,

வளர்ந்த இந்தியா என்ற கனவு அனைவரின் முயற்சியாலும் மட்டுமே நிறைவேறும். இன்றைய வளர்ச்சிப் பணிகளுக்காக மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் நாம் உள்ளூர் பொருட்களை  வாங்குவோம், நம் வீடுகளை அலங்கரித்தால், அவற்றை சுதேசியால் அலங்கரிப்போம், நம் வாழ்க்கையை மேம்படுத்தினால், சுதேசியால் அவற்றை மேம்படுத்துவோம். இந்த மந்திரத்துடன் முன்னேறுவோம்.

மிக்க நன்றி.

என்னுடன் சேர்ந்து ஹர ஹர மகாதேவ் என்று சொல்லுங்கள்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Paltano Dorkar!’ PM Modi Predicts TMC Rout In Bengal, Says ‘Goons Won’t Find Space To Hide After May 4’

Media Coverage

‘Paltano Dorkar!’ PM Modi Predicts TMC Rout In Bengal, Says ‘Goons Won’t Find Space To Hide After May 4’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Shri Ashok Kumar Lahiri meets the Prime Minister
April 25, 2026

Shri Ashok Kumar Lahiri met the Prime Minister, Shri Narendra Modi at New Delhi, today. Shri Modi conveyed his best wishes on his appointment as the Vice Chairman of NITI Aayog. The Prime Minister noted that Shri Lahiri’s rich experience in the fields of economics and public policy will significantly strengthen India’s reform journey and contribute to the nation’s vision of becoming a Viksit Bharat.

The Prime Minister posted on X:

“Met Shri Ashok Kumar Lahiri Ji and conveyed my best wishes on his being appointed as the Vice Chairman of NITI Aayog. His rich experience in economics and public policy will greatly strengthen India’s reform journey and the journey towards becoming a Viksit Bharat. I am confident his efforts will further energise policymaking in our nation. My best wishes for a fruitful tenure.”

@ashoklahiribjp

“শ্রী অশোক কুমার লাহিড়ী জির সঙ্গে সাক্ষাৎ করলাম এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আমার শুভকামনা জানালাম। অর্থনীতি এবং জননীতিতে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা ভারতের সংস্কারের পথ এবং ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথকে আরো শক্তিশালী করবে। আমি আত্মবিশ্বাসী যে তাঁর প্রচেষ্টা আমাদের দেশের নীতি নির্ধারণকে আরও গতিশীল করবে। তাঁর ফলপ্রসূ কার্যকালের জন্য আমার অনেক শুভকামনা রইল।“